என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிகள்"
- புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
- மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளாளர் விஜயலெட் சுமி காமராஜ் தலைமை தாங்கினார்.
பள்ளி நிர்வாகி இளை யராஜா முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சாந்த செல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மாயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
மேலும் பள்ளி மாணவர்களை வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வும், தன்னார்வதிறனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.
இதில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.முடிவில் மெட்ரிக்பள்ளி முதல்வர் அருள் நன்றி கூறினார்.
- போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மற்றும் கோவையில் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகளை பள்ளி கல்வித்துறை நடத்தியது. 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.
ஓவியப்போட்டி (நுண்கலை), இசைப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, நாடகப்போட்டி, மொழித்திறனுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி என்று 6 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் புழல் அருகே உள்ள கண்ணப்பசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை நடந்த தனிநபர் நடிப்பு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் அப்துல் பாரிஸ், குழுப்பாடல் போட்டியில் மனிதநேய பாடல் தலைப்பில் சனுஷ்டிக்கா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் மேற்கத்திய நடனப் போட்டியில் வர்ஷினி குழுவினர் முதல் பரிசை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இவர்கள் மதுரை மற்றும் கோவையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
- கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
- ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி விளக்கமளித்தார்.
ஆலங்குளம்:
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
இதில் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் வழிகாட்டுதலின் படி மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா. கீர்த்தனா. லக்சயா ஆகிேயார் தென்னை மரம் ஏறும் கருவியின் பயன்பாட்டையும், அதன் முக்கியதுவத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதன்மூலம் தென்னைமரம் ஏறும் செலவுகளைக் குறைப்பதோடு, விரைவாகவும் பாதுகாப்பாகவும் மரம் ஏறலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி செயல்பாட்டை விளக்கினார். மேலும் இவர்கள் 2½ மாதம் ஆலங்குளம் வட்டாரத்தில் முகாமிட்டு வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
- கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
- 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
உழவார பணியை கோவில் செயல் அலுவலர் விமலா தொடங்கி வைத்தார்.
இதில் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியை ராஜகுமாரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திவ்யா, சர்வாலயா பணிக்குழு அமைப்பு செயலாளர் எடையூர் மணிமாறன், செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் துரை.ராயப்பன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வை சர்வாலய உழவாரப்பணி குழு ஒருங்கிணைத்தது.Cultivation work in Piravi Darshaeeswarar temple
- குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தங்களது அப்பாக்கள் திட்டுவர் என்பதால் மாணவிகள் பயந்தனர்.
- மாணவிகள் சானிடைசரை குடித்தாக தெரிவித்தனர்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் 2 பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தனர்.
குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தங்களது அப்பாக்கள் திட்டுவர் என்பதால் மாணவிகள் பயந்தனர். இதனால் வீட்டில் சொல்லாமல் பயத்தில் இருந்தனர்.
குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகள் 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் வைத்து குடிநீரில் கலந்து குடித்தனர்.
சிறிது நேரத்துக்கு பின்னர 2 பேரும் வாந்தி எடுத்தனர். இதனை பார்த்த ஆசிரியர்கள் என்னவென்று கேட்டனர். அதற்கு மாணவிகள் சானிடைசரை குடித்தாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவிகள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 20-ந் தேதிக்குள் மாணவர்களின் படைப்புகளை பள்ளி, கல்லூரிகள் சேகரித்து அறிமுக கடிதத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டவுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த வருடம் 4 தலைப்புகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட் டது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூ ரிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் ஒவியங்கள் வந்தன. இந்த ஓவியங்கள் மாவட்ட ஆயுதப்படை முகாம் மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த வருடமும் ஓவியம், சுவரொட்டி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமகன்-நமது பொக்கி ஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும் பாதுகாப் பாகவும் இருங்கள், காவல் துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது.
1 வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரி வாகவும், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒரு பிரிவாகவும் ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 3 தலைப்புகளில் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருட்களில் பங்கேற்கலாம். மாண வர்களின் படைப்புகளைப் வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
மாணவர்களின் படைப்பு களை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் சேகரித்து அதனை ஒரு அறிமுக கடி தத்துடன் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட போலீஸ் அலுவலகம், நாகர்கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரடியாகவும் கொடுக்கலாம். 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். முடிவுகள் வருகிற 25-ந் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேகங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9498103903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
- நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலயம் சார்பில் சலங்கை பூஜை விழா சங்கீத மகாலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தலைமை தாங்கினார்.
டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியை கற்பகம், பரதநாட்டிய கலைஞர் அருணாசுப்பிரமணியம், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அறிவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முத்ரா இசை நாட்டிய கலாலயத்தை சேர்ந்த ராதாமுரளிதரன் வரவேற்றார். விழாவில் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவிகள் ஹாசினி, சஹானா, ஸேர்லின்ஹன்சிகா, சிவ ஸ்ரேயா, ஹரிணி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா, தாமரை பன்னாட்டு பள்ளி மாணவி ஜெனிட்டாசெலினா, பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஆதீஷா, சீனிவாசா உயர்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி ராகினி ஆகியோரின் சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் ராதாமுரளிதரனின் நாட்டுவாங்கம், ராஜாஸ்ரீவர்ஷனின் வாய்ப்பாட்டு, சதீஷ்குமாரின் மிருதங்கம், நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கதிரவன் வெங்கடசாமி ஒப்பனை செய்தார். நிகழ்ச்சியை வானதி தொகுத்து வழங்கினார். முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலய செயலாளர் முரளிதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவ- மாணவிகள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டி விளையாடினர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வி ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் ஒலிம்பிக் கொடி ஏற்றி முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ரதிகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் ஜெகதீசன், இலக்குவன், வாண்டையார் இருப்பு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மகேந்திரன், டி.என்.எஸ்.டி.சி. கண்காணிப்பாளர் ராமலிங்கம் (ஓய்வு) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அவர்கள் தங்களது முழு திறமையை வெளிக்காட்டி விளையாடினர்.
பின்னர் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சஞ்சாய் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன், நல்லாசிரியர் வரதராஜன், மருத்துவர் ராஜேந்திரன், ஒப்பந்தக்காரர்கள் வைத்திலிங்கம், ஜெயபால், பாஸ்கரன், செயற்பொறியாளர் (ஓய்வு) இன்பரசு , முன்னாள் மாணவர் வெங்கடாசலம் , தலைமையாசிரியர் (ஓய்வு) மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் ஜீவலட்சுமி, முன்னாள் மாணவர்கள் சந்திரபோஸ், திருநாவுக்கரசு, தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தொழிலதிபர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் பாராட்டினர்.
ஆலங்குளம்:
குடியரசு தினவிழா குழு போட்டிகள் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 17 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
இதே போன்று, 32-வது தேசிய சப்-ஜுனியர் கபடிப் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக அணியில், இப்பள்ளி மாணவியும், காளத்திமடம் தென்றல் அணியின் வீராங்கனையுமான ரோபோ அஜி மாய்ஷா இடம்பிடித்திருந்தார்.
போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த மாணவிகள் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அம்மாணவிகளுக்கு ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண்ரவி, பரணி சில்க்ஸ், ஆர்த்தி ஜவுளி ரெடிமேட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சிராணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், காளத்திமடம் தென்றல் அணியின் தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயசூரியன், மேலாளர் கருணாகரன், தலைமை பயிற்சியாளர் ஆசீர்ராஜா, பயிற்சியாளர்கள் மணி டேவிட், ஸ்டீபன், கரிகாலன் உள்ளிட்ட முன்னாள் கபடி வீரர்கள் பாராட்டினர்.
- திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் (பொ) விமலா முன்னிலை வகித்தார்.
உழவாரப்பணிக் குழு செயலாளர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
உழவாரப்பணி குழு அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்துரை ராயப்பன், பத்திரிக்கையாளர் முனைவர் ரவிச்சந்திரன்சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்புரையுயாற்றினர்.
யோகா ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி கற்றுக் கொடுத்தார்.
உதவி திட்ட அலுவலர் ஆசிரியை பிரியங்கா, பட்டதாரிஆசிரியர் கழக மாநில பொருளாளர் துரைராஜ், வட்ட தலைவர் சிங்காரவேலு, பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துகுமரன் மற்றும் ஆசிரியர்கள் ஆனந்தி ரூபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு கோயிலில் கற்கள், புற்கள் அகற்றினர். திட்ட அலுவலர் ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.
- ஆயக்கலைகள் 64-ல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலை அரங்கேற்ற விழா நடந்தது.
- தருமை ஆதீனம் பரத கலையின் சிறப்பு குறித்து உரையாற்றினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் நிருத்யாலயா என்னும் நாட்டியப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற புவனேஸ்வரி சுகுமார் என்பவர் மாணவிகளுக்கு பரதக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.
ஆயக்கலைகள் 64 இல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலையை சிறப்போடு கற்று வரும் மாணவிகளின் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விழாவிற்கு வருகை தந்து சலங்கை பூஜை செய்து மாணவிகளுக்கு சலங்கையும் நற்சான்றிதழையும் வழங்கினார்.
தருமை ஆதீனம் பரதக் கலையின் சிறப்புகள் பற்றி தனது ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
விழாவில் மயிலாடுதுறை நகரமன்ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஸ்கில் இந்தியன் டெல்டாகலை திருவிழா நடைபெற்றது. ஸ்கில் இந்தியன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் தலைமை வசித்தார். முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வராஜ் எம்.பி, நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
முடிவில் டெல்டா கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.