என் மலர்
நீங்கள் தேடியது "பெண்"
- காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
- கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவினாசி :
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவர் போலீசில் புகார்
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜி (வயது 33). இத்தம்பதிக்கு 6 மற்றும் ஒரு வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜிக்கும், மாமியாருக்குமிடையே குடும்ப தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டிலிருந்த விஜி மற்றும் 2 குழந்தைகளை கடந்த மாதம் 26-ந் தேதி முதல் காணவில்லை.விஜி குழந்தைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது. அவரது கணவர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் விஜி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகேசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.
- ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
- தோட்டத்திற்கு சென்ற பெண்ணை அடித்துக் கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
- திருச்சி சிறையில் அடைத்தனர்
கரூர்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி பெரியவீட்டுக்கா ரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வசந்தா (வயது 39). இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி கொத்தனார் வேலைக்கும், வசந்தா தங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு வேலைக்கும், இவர்களது மகள் பள்ளிக்கும் சென்று விட்டார்.
இந்தநிலையில் மாலை வெகுநேரம் ஆகியும் வசந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாவின் கணவர் முத்துசாமி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் வசந்தாவின் செருப்பு மட்டும் தோட்டத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றின் மேல் பகுதியில் கிடந்துள்ளது. இதைக்கண்ட உறவினர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி வசந்தாவை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வசந்தாவின் கணவர் முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் சரோஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரோஜா முன்விேராதம் காரணமாக வசந்தாவை களைக்கொத்தி மரக்கட்டையால் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து தோகைமலை போலீசார் கொலை வழக்குப்பதிந்து, சரோஜாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தோகை மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
- முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).
இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.
இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கன்னியாகுமரி:
குளச்சல் மரைன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ்குமார், முதல் நிலை காவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று பகல் குளச்சல் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
குளச்சல் துறைமுக பழைய பாலம் அருகே செல்லும்போது பாலத்தின் மீது நடந்து சென்ற 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென கடலில் குதித்தார்.இதனை கவனித்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் உடனே கடலில் குதித்து அந்த பெண் குதித்த இடத்திற்கு நீந்தி சென்றார்.மணற்பரப்பிலிருந்து இதை பார்த்த மரமடியை சேர்ந்த மீனவர்கள் ராஜ், எப்ரேன் ஆகியோரும் கடலில் குதித்து நீந்தி சென்றனர்.சிறிது நேரத்திற்கு பின்பு தத்தளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கடலில் மூழ்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதற்கிடையே அந்த பெண் மயக்கமானார்.உடனே சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் மற்றும் மீனவர்கள் அந்த பெண்ணை தாங்கிக்கொண்டு நீந்தினர்.பின்னர் அந்த வழியாக பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற குறும்பனை கிறிஸ்து ஜெயந்தன் என்பவரை உதவிக்கு அழைத்தனர்.உடனே கிறிஸ்து ஜெயந்தன் வள்ளத்தை வேகமாக அவர்கள் பக்கத்தில் திருப்பி 4 பேரையும் வள்ளத்தில் மீட்டு மீன் துறைமுகத்தில் கரை சேர்த்தார்.
பின்னர் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர். விசாரணையில் அந்த பெண் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த தகுதிகளுடைய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது வழங்கப்படவுள்ளது.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேரு எதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என சேவைகளை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் உரிய விபரங்களுடன் வரும் 30ம்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
- சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
- படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர்ஒலி. இவரது மனைவி பஜ்ராள் பீவி (வயது 52). பஜ்ராள் பீவியின் தங்கை ரசீதா பீவி புளியங்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
உடல்நிலை பாதித்திருந்த அவரை பார்ப்பதற்காக தனது மகன் முகமது அப்சல்கானுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.அவரை பார்த்துவிட்டு மாலையில் தங்களின் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தென்காசி-ராஜபாளை யம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் விலக்கு அருகே வந்து கொண்டி ருந்தபோது தனக்கு தலை சுற்றுவதாக மகனிடம் பஜ்ராள் பீவி கூறியுள்ளார்.இதையடுத்து முகமது அப்சல்கான் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் பஜ்ராள் பீவி ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி றார்.
- நாகர்கோவிலில் அடுத்தடுத்து சம்பவம்
- சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமவர்ம புரத்தைச் சேர்ந்தவர் மெல்பாராஜினி (வயது 51). இவர் நேற்று ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் மெல்பாராஜினியிடம் பேசி உள்ளனர். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதேபோல் நாகர்கோவில் மூவேந்தர் நகரைச் சேர்ந்த லட்சுமி (44) சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் நேசமணி நகர் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.
- மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர்.
- டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள குடும்பம் சமத்துவம் பகுதியை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி சரண்யா (வயது 26).கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது
- புதுவேட்டக்குடி ஊராட்சியில் விபத்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி சகுந்தலா (வயது 38). இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரியலூரில் இருந்து பொய்யாத நல்லூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சகுந்தலா சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா கடந்த ஜூலை 1-ந்தேதி இறந்தார். சகுந்தலா துங்கபுரம் ஐ.ஓ.பி. வங்கியில் பாரதப் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருந்தார்.
இதையடுத்து துங்கபுரம் ஐ.ஓ.பி. கிளை மேலாளர் தினேஷ்குமார் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு தொகையை சகுந்தலாவின் கணவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது புது வேட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி தர்மலிங்கம் உடன் இருந்தார்.
- குப்பைகளுக்கு தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது.
- சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).
இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.
இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.
இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.