என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர்கள்"
- எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்.
- நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும்.
எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
- இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர்.
- பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் கடந்த 4 நாட்களாக கட்டுக்கடங்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலை பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் விரைவாக தரிசனம் செய்து வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா காலத்திற்கு முன்பு அலிபிரி நடைபாதையில் 14 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் 6 ஆயிரம் நேர ஒதுக்கீட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து வந்தனர்.
கொரோனா காலத்தில் நடைபாதையில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் நேர ஒதுக்கீடு டோக்கன்களை வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 82,746 பேர் தரிசனம் செய்தனர். 25.078 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருப்பதியில் நேற்று 73,543 பேர் தரிசனம் செய்தனர்.
- 21,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறையால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வருவதால் அலிபிரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்ஸில் வந்து செல்ல தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,543 பேர் தரிசனம் செய்தனர். 21,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.22 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு ராமபாண நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிாவசன், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஓசூர் மேயர் சத்யா, அ.தி.மு.க. நிர்வாகி ஜெயபிரகாஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் மாது, பழனிசாமி, செயல் அலுவலர் மஞ்சுநாத், ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செண்டை மேள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்த்திருவிழாவையொட்டி இன்று அன்னதானம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் சம்பூர்ண ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
தேர்த்திருவிழாவையொட்டி தேன்கனிக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டது.
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
- மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
இதனால் ராமேஸ்வரத்தில், குறிப்பிட்ட அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாளை தரிசனம் செய்ய உள்ளதை அடுத்து பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மதியம் 3.30 மணிக்கு பின் வழக்கம் போல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.
- நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் நீண்ட நேரம் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கோடை காலம் என்பதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
காலை 8 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடங்குகிறது. அதன் பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள், பரிந்துரை கடிதம் கொண்டுவரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக மதியம் 1.30 மணி வரை சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களும் ஒரே நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது.
சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 9.30 மணிக்கு தரிசனம் செய்யலாம் என நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் வரிசையில் வந்து 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் மற்ற கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
வி.ஐ.பி பிரேக் தரிசனம் அதிகாலையில் தொடங்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தேவஸ்தான அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அதில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.
மற்ற மாநிலங்களில் உள்ள தலைநகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டுவது குறித்தும் வெளிநாடுகளில் இந்துக்கள் அதிக அளவில் உள்ள நகரங்களில் கோவில் கட்டுவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 73,007 பேர் தரிசனம் செய்தனர். 24,440 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
+2
- தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது.
- அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனிஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்கிறார்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. இதன்படி அடுத்த ஆண்டுதான் சனி பெயர்ச்சி நடக்கிறது.
இதுதொடர்பாக திருநள்ளாறு தேவஸ்தானம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இன்று திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேலும் ரம்ஜான் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் சில வகுப்புகளுக்கு ஆண்டு விடுமுறை மற்றும் இன்று பங்குனி அமாவாசை சனிக்கிழமை என்பதாலும் தமிழக பகுதியில் சேலம், ஈரோடு, கோவை மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் இருந்து கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சனிபகவானுக்கு உகந்த எள் தீபமேற்றி வழிபட்டனர்.
தொடர் விடுமுறையால் சனி பகவானை தரிசிக்க அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் சனி பரிகார தலமாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தந்தாலும் சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக அளவு வருகை தருவார்கள். மேலும் ஆடி மாத சனிக்கிழமை, 18-ம் பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருநள்ளாறு உள்பட முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி சனிப்பெயர்ச்சி மற்றும் அமாவாசையை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றி பரிகார பூஜைகளை செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நவக்கிரக சன்னதி, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
- 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
- பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.
ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
- பக்தர்கள் பங்கேற்று, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, மனமுருக வழிபட்டனர்.
- சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் தினமும் காலை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வந்தன. பக்தர்கள் பங்கேற்று, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, மனமுருக வழிபட்டனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான்கோவில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில்.மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்புடன் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, சூரசம்ஹார விழா இன்று மாலை நடக்கிறது. அதற்காக, சூரபத்மன் பொம்மைகளும், கஜமுகாசுரன், சிங்கமுகன், பாணுகோபன், சூரபத்மன் தலை பொம்மைகள் புதுப்பிக்கப்பட்டன.
இன்று மதியம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, யாகபூஜைகளும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெறும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வேலாயுதத்துடன் போர்க்களம் புகும் முருகப்பெருமான், அசுரர்களை வதம் செய்து, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னிடம் சேர்த்து கொண்டு, ஜெயந்திநாதராக கோவில் திரும்புவார். அதன்பின், விரதம் இருந்த பக்தர்களுக்கு, தயிர் அல்லது மோரில் ஊறவைத்த வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்படும்.
சூரசம்ஹாரத்தை காண திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் அனைத்து கோவில்களிலும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.