என் மலர்
நீங்கள் தேடியது "கணவன்"
- இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
- மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
- மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
உத்தரபிரதேசத்தில் திருமணமான 15 நாட்களில் மனைவி கூலிப்படையினரை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகதி யாதவ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை, அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மார்ச் 19 அன்று, திலீப் வயலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் மார்ச் 20 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திலீப்பின் சகோதரர் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் திலீப்பின் மனைவி பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது
இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற காண்டராக்ட் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள், ஒரு பைக், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
- கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள காட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 42). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி யும் அவரது மனைவி புவனேஸ்வரியும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தருமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ
மனையில் அனும திக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தருமன் கொடுத்த புகாரின்பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து திருப்பதி, புவனேஸ்வரி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை :
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.
எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.
- கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
- பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன்சம்பத்குமார்(35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மகன் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீடு தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சம்பத்குமாரின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர்களது மகன் சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
- செந்தில் உடல் திடீரென பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
கள்ளக்குறிச்சி:
பகண்டை கூட்டு ரோடு அருகேகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது35). இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருடன் பகண்டை கூட்டுரோடு அடுத்த அரியலூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவரது உடல் திடீரென பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக செந்தில் தனது மனைவி அருள்மணியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கந்து வட்டி புகார்
- முக்கிய ஆவணங்கள் சிக்கியது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தக்கலை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த சீமோன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞானஜெபின் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் உமா சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.ஞானஜெபின், அவரது மனைவி பெனிலா மற்றும் ஞான ஜெபியின் நண்பர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஞானஜெபின் தலைமறைவானார்.இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற் றப்பட்ட ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவாகியுள்ள ஞான ஜெபின் மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞான ஜெபின் காங்கிரஸ் பிரமு கர் என்பதும் குறிப்பி டத்தக்கதாகும்.
- கடன் சோகத்தில் விபரீத முடிவை தந்தை எடுத்து விட்டார்
- மகன்கள் உருக்கம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன் பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (வயது 63). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பிரேம லதா (58). இவர்களது மகன்கள் ஆதவன் (32), மாலன் (28) ஆகியோர் சென்னையில் ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில்ஆதவன் சென்னையிலிருந்து தந்தைக்கு போன் செய்து உள்ளார்.ஆனால் ஆறுமுக நயினார் போனை எடுக்க வில்லை. எனவே மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினருக்கு ஆதவன் தகவல் கூறியுள்ளார்.
அவர்கள் விரைந்து சென்று பார்க்கும்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆறுமுகபெருமாள் சோபாவிலும், பிரேமலதா தரையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தி ருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடன் விவகாரத்தால் கணவன்-மனைவி இருவரும் பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகபெருமாளின் மகன் ஆதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரிய வந்தது.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதனை அடைக்க தனது தந்தையிடம் அவர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறுமுக பெருமாள் குடும்ப சொத்தை விற்று பணம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் பத்திரப் பதிவு நடக்கவில்லை என கூறப்ப டுகிறது.
சரியான நேரத்தில் மகனுக்கு உதவ முடிய வில்லை என ஆறுமுக பெருமாள் கடந்த சில நாட்களாக மன வேதனை யில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் தான் அவர் தற்கொலை முடிவை மனைவியுடன் சேர்ந்து எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பெற்றோர் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவர்களது மகன்கள் சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடன் விவகாரத்திற்காக இப்படி விபரீத முடிவை எடுத்து விட்டீர்களே என தந்தை உடலை பார்த்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
- 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.
- மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.
அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- காளியப்பன், மனைவி பழனாள் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
- ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
கோபி:
கோபி செட்டிபாளையம் சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவர் பெட்டி க்கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பழனாள் (52). இவர்களது மகன் ராஜன்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பனின் மகன் ராஜன் ஈரோடு பஸ் நிலையத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்து வந்த போது நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இதனால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் காளியப்பன் உடல் நிலை சரி யில்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காளி யப்பன் வீட்டின் முன்பு இருந்த பெட்டி கடையை திறந்து வியாபாரம் செய்தார்.
அன்று இரவு பெட்டிக்கடையை மூடி விட்டு வீட்டிற்குள் சென்றார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இரு வரும் வீட்டை விட்டு வெளி யே வரவில்லை.
இந்நிலையில் காளியப்பன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முன்பக்க கதவை திறந்து மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது காளியப்பன் தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதும், அவரது மனைவி பழனாள் தரையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் காளியப்பன் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது கதவை உடைத்தாலும், திறக்க முடியாத அளவிற்கு கட்டிலை வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போராடி அறைக்குள் சென்று பார்த்த போது கணவன்-மனைவி 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும், பழனாள் உடல் எடையை தாங்காமல் கயிறு அறுந்து கீழே விழு ந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்பு காளியப்பன் ரத்தத்தினால் சுவற்றில் சிலரின் பெயர்களை எழுதி வைத்து இருந்தார். ரத்தத்தினால் எழுதி இருந்த பெயர்கள் யாருடையது.
கணவன்- மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் தங்கம் பவானி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்களையும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் போலீசாரின் விசார ணைக்கு பிறகே கணவன், மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட காளியப்பன் 26- வது வார்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வராக இருந்து வந்தார்.
- கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
- வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.