search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறை"

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், மதுராபூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன் 3) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

     

    நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து பாஜக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மறு வாக்குப்பதிவானது இன்று நடத்தப்படுகிறது. 

    • சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் ஏற்படுகிறதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை

    சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம், கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் தங்களது வாழ்விடங்களை இழந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    தெற்காசியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் சுமார் 69,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் பிரதானமாக 97% அளவில் மணிப்பூரில் நடந்த குக்கி - மெய்தேய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் உலகம் முழுவதும் வன்முறை மற்றும் கலவரங்களால் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் உடைமைகளையும் இழந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெருபாலான மக்கள் இன்னும் தங்களது ஊர்களுக்கு திருப்ப முடியாமல் கையறு நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை என்பவதே உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருமித்த ஆதங்கமாக உள்ளது.  

    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
    • ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி 2-வது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-வது இடத்திலும் உள்ளன.

    மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றினர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

    இம்ரான்கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

    இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

    இந்நிலையில், வடமேற்கின் ஷாங்லா பகுதியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    • நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டங்களை இடிக்க சென்றபோது அதிகாரிகள் மீது தாக்குதல்.
    • வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதி ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியது. இதனால் வன்முறை வெடித்தது.

    இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவுபடி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஹல்த்வானியின் வான்புல்புரா பகுதியில் கட்டடத்தை இடிக்க முயன்றபோது, பதற்றம் நிலவியது. அங்கு கூடியிருந்தவர்கள் போலீசார், அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 போலீசார், பல அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முறைகேடாக கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உள்பட அங்கு வசித்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பை இடித்து தள்ளியதுடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சூழ்நிலை அத்துமீறி வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நேற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இது தொடர்பாக வருகிற 14-ந்தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

    • பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது.
    • முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நவ கேரள சதஸ் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள தலைமை செயலகம் நோக்கி, இளைஞர் காங்கிரசாரும், மாணவர் அமைப்பினரும் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, தண்ணீர் புகைவீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவ கேரள சதசின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் சார்பில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சென்ற போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி யடித்தனர். அப்படியும் வன்முறை கட்டுக்குள் வராததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் சுதாகரன், ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கலவரம், சாலைமறியல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எம்.பி.க்கள் சசிதரூர், கொடிக்குன்றில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கே.முரளீதரன், ஜெபி மாதர் மற்றும் ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியது தொடர்பான புகாரில், முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16-ந்தேதி நவ கேரள சதஸ் பயணம், ஆலப்புழாவில் இருந்து அம்பழப்புழா தொகுதிக்கு சென்றபோது பொது மருத்துவமனை சந்திப்பில் நின்ற இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஜய் ஜூவல், மாணவர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஏ.டி.தாமஸ் ஆகியோர் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் பிடித்து அங்கிருந்து அகற்றி உள்ளனர். அப்போது முதல்-மந்திரியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரி அனில்குமார், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆகியோர் வேனில் இருந்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரும், ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலப்புழா தெற்கு போலீசார், விசாரணை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அனில்குமார் மற்றும் சந்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 326, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    • மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.

    அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் தடையை மீறி முன்னேறி செல்ல முயன்றனர்.


    இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். அந்த பகுதி கலவர பகுதி போல் காணப்பட பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் தான் அங்கு பிரச்சினை உருவானது என்றனர். மேலும் போலீசாரின் தாக்குதலால், கட்சியினர் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து இளைஞர் காங்கிரசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பினர் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

    தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.


    அவரது பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும், அதன் வெளிப்படை திட்டத்துக்கும் எதிராக சதீசன், வன்முறையை தூண்டி விட்டு அமைதியை குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த நிலையில் பேரணியின் போது, போலீசாரை தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் சதீசன் மீது, ஜாமீனில் வெளிவர முடியாக சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சதீசன், தன் மீதான குற்றச்சாட்டுகளால் பயந்து விட்டேன் என முதல்-மந்திரியிடம் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

    • நடத்தைகளில் பல வகை உள்ளன.
    • பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.

    இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

    இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.

    மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.

    • இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர்.
    • இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர். இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர். இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார். இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    • சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர்
    • வன்முறையால் முகாம்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என ஐ.நா. தகவல்

    மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான்.

    அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம்.

    லெபனான் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீனிய அகதிகளில் சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர். இதில் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மட்டுமே சுமார் 63 ஆயிரம் பேர் இருப்பார்கள் என ஐ.நா. கூறுகிறது.

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள சிடான் நகரத்திற்கருகே இந்த முகாம் உள்ளது. இப்பகுதி லெபனான் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால், அங்குள்ள முகாம்வாசிகளின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். அங்கு அடிக்கடி மோதல்கள் நடைபெறும்.

    கடந்த ஜூலை 29 முதல் இங்கு இருதரப்பினரிடையே மோதல்கள் தொடங்கியது. இதில், இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடையலாம் என்பதால் சில உலக நாடுகள் தங்கள் நாட்டினர் லெபனானுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன.

    சவுதி அரேபியா நேற்று லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அங்கிருந்து வெளியேறும் வரை ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்கவும் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

    லெபனானில் உள்ள சவுதி தூதரகம் ஒரு அறிக்கையில், லெபனான் நாட்டிற்கு பயணத்தடையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தாலும் எந்தெந்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.

    இதேபோல் குவைத், லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கு கவனமுடன் இருக்குமாறும், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடவில்லை.

    பிரிட்டன், தன் நாட்டிலிருந்து லெபனானுக்கு செல்ல விரும்புவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் லெபனானின் தெற்கின் சில பகுதியான ஐன் எல்-ஹில்வே முகாமுக்கு அருகில் "அத்தியாவசிய பயணம் மட்டுமே" மேற்கொள்ளுமாறும், பிற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    "இந்த சண்டை தொடரக்கூடாது. இதனால் ஏற்படும் விளைவுகள் முகாமில் வசிப்பவர்களுக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும், அனைவருக்கும் மோசமானதாக இருக்கும். மோதலை நிறுத்துங்கள். மோதலை நிறுத்த யாராவது அழுத்தம் கொடுக்க முடியும் என்றால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்" என லெபனான் நாட்டின் ஷியா பிரிவு அரசியல் கட்சியாகவும், ராணுவ குழுவாகவும் திகழும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் அசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள முகாம்களில் நடைபெறும் வன்முறையால் அவற்றில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என 4 நாட்களுக்கு முன் ஐ.நா. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×