என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.
    • கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

    டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டனர். ஆனால் இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான் காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.

    பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்தனர்.

    மேலும், தனது அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் 108 கல்லூரிகளிலிருந்து முதற் கட்டமாக 1938 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது இவ்வலை தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம்.இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பதிவு செய்ய லாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவி களுக்கும் கல்வி பயிலும், நிறுவனங்களில் நவம்பர் 18-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டத்தில் விண் ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா பேங்க் ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை ஆதார் எண் மற்றும் செல்ேபான் எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

    பயனாளியின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC எண், Branch பெயர் போன்ற விபரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விபரத்து டன் ஒத்திருக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பய னாளிகள் (முதலா மாண்டு மாணவிகள் மற்றும் விடுபட்டவர் கள்) இணையவழி விண்ணப் பம் அந்தந்த கல்வி நிலை யங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக் கும்படி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுமைப்பெண் திட்டம் இணையதளம் தொடர் பான பயிற்சி மற்றும் அறிமுககூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 28-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறுகிறது.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங் கள் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவல கத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 91500 56805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail. com < mailto:mraheas@ gmail.com> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    மேல்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப படிப்புக ளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் விண் ணப்ப முறையினை சரி யாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

    • காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
    • வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

    அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.

    • திருமங்கலம் அருகில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பட்டிமன்றம் நடந்தது.
    • ‘‘இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    மதுரை

    திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் ஷகீலா ஷா ஆகியோது ஏற்பாட்டில் ''இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார், துணை முதல்வர் பூஜா சக்கரபோர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த பட்டிமன்றத்தில் அன்னை பாத்திமா கல்விக்கு ழுமத்தின் தாளாளர் எம்.எஸ்.ஷா நடுவராகப் பொறுப்பேற்றார். இரு அணியினரும் பாடல், திரைப்படக்கதை, நடை உடை பாவனைகளை எடுத்து கூறி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.

    இருதரப்பு வாதங்க ளையும் சீர்தூக்கிப் பார்த்து இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார். இந்த பட்டி மன்றம் மாணவர்களின் சிந்தனை யைத் தூண்டியதோடு விழிப்புணர்வையும் ஏற்படு த்தியது.

    பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ராமுத்தாய் நன்றி கூறினார்.

    கல்லூரி ஒருங்கிணை ப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.

    அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு கண்ணன் அவர்கள்- நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் ஆலம்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பேரணியை அன்னை பாத்திமா கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதையொட்டி தூய்மை பணி வாகனம் ஒன்றும் கல்லூரின் சார்பில் ஆலம்பட்டி ஊராட்சி அலுவ லகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் 260 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு ஆலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி , ஆலம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.

    முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.

    நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.

    முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பயிற்சி, வேலை வாய்ப்புக்கான விருது பெங்களூருவில் வழங்கப்பட்டது.
    • மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.

    சிவகாசி

    கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரிக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

    பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையானது முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு துறை சார்ந்த மற்றும் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.

    சிறந்த முறையில் செயலாற்றிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார், முதல்வர் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.

    • போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் கிரீஷ்மா இன்று ஆஜர்
    • கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள முன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மாவட்ட எல்லையில் உள்ள பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், உடல் நலக்குறைவால் ஷாரோன் ராஜ் பாதிக்கப்பட்டார். பாறசாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவரது சாவுக்கு காதலி கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோன்ராஜின் தந்தை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரீஷ்மாவை கைது செய்து விசாரித்த போது, அவர் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்ய கடந்த 3 மாதங்களாகவே கிரீஷ்மா திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கி யிருப்பது தெரிய வந்தது. கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திரு மணம் நிச்சயமானதும், ஜாதகப்படி அவரது முதல் கணவர் இறந்து விடுவார் எனக் கூறப்பட்டதாலும் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டதாக விசாரணை யில் தகவல் கிடைத்தது.

    போலீஸ் விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொ லைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கிரீஷ்மாவின் வீடு, இருவரும் திருமணம் செய்ததாக கூறப்பட்ட வெட்டுக்காடு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக கிரீஷ்மா அழைத்துச் செல்லப்பட்டார்.

    நேற்று 2-வது கட்டமாக கிரீஷ்மா, குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டார். ஷாரோன்ராஜ் படித்த கல்லூரி, அவர்கள் ஜோடி யாக சுற்றித்திரிந்த சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது கிரீஷ்மா எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் போலீசாரிடம் பேசி உள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கொலை சதியை அரங்கேற்றிய கிரீஷ்மா, டோலோ மாத்திரையை பொடி செய்து அதனை காதலன் ஷாரோன்ராஜிக்கு கொடுத்துள்ளார். அதனை ஒரே மடக்காக குடிக்க வேண்டும் என 'ஜூஸ் சேலஞ்சு'ம் நடத்தி உள்ளார்.அதன்படி குளிர்பானத்தை குடித்த ஷாரோன்ராஜ், கசப்பாக இருந்ததால் அதனை துப்பிவிட்டாராம். இதனால் அவர் தப்பி விட்டதாக போலீஸ் விசாரணையின் போது கிரீஷ்மா தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளிர்பானம் கசப்பாக இருப்பது பற்றி ஷாரோன்ராஜ் கேட்ட போது, அது காலாவதியானதாக இருக்கலாம் எனக் கூறி சமாளித்து விட்டதாகவும் கிரீஷ்மா கூறியுள்ளார்.

    காதலன் ஷாரோன்ராஜுடன் திற்பரப்பு விடுதியில் 2 முறை அறை எடுத்து தங்கியதாக கிரீஷ்மா விசாரணையின் போது கூறியிருந்ததால், அவரை நேற்று போலீசார் அங்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடுதி அறையில் அவர்கள் தங்கி இருந்ததற்கான பதிவேடுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதன்பிறகு மாலையில் போலீசார், கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்றனர். அவரது காவல் முடிவடைந்துவிட்டதால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட னர். இன்னும் விசாரணை பாக்கி இருந்தால், கிரீஷ்மாவை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

    இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் விசாரணைக்கு பின்னர், போலீஸ் காவல் முடிவடைந்த தால், ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்ட னர் என்பது குறிப்பிடத்த க்கது.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
    • நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.

    • வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. சேர்மன் வி.பி.எம். சங்கர் தொடங்கி வைத்தார். தாளாளர் பழனி செல்வி சங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    துணை சேர்மன் தங்க பிரபு முன்னிலை வகித்தார். இயக்குநர் நாச்சியார் கண்ணன் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா மற்றும் கலைக்கல்லூரியில்அடுப்பு இல்லாமல் சமைக்கும் உணவு திருவிழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன.

    இதில் கலைக்கல்லூரி மாணவிகள் தனித்தனி குழுவாக இணைந்து அடுப்பு இல்லாமல் உணவுப்பொருட்களை சமைத்து காட்சிப்படுத்தினர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மாணவிகளின் மேம்பாட்டு திறன் வளர்ப்பு அங்கீகாரம் பெற்ற பேச்சாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டியில் செய்யது ஹமீதா கல்லூரி முதலிடம் பெற்றது.
    • கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    கீழக்கரை,

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே 2022-23-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டி தேவகோட்டையில் நடந்தது.

    இதில் 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகளை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இறுதிப் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரி அணியும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணியும் மோதியது. இதில் கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் சதக்கத்துல்லா, உடற்கல்வி இயக்குநர் தவசலிங்கம் ஆகியோர் கூடைப்பந்து அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மாங்குழி என்ற இடத்தை சேர்ந்த வர் ரவிராஜ் (வயது48). இவரது மனைவி வளர்மதி (44). இவர்கள் மகள் ரீனாசிங்(19).

    வெள்ளி சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்து கொண்டு ரீனாசிங் மாயம் ஆனதாக தெரிகிறது. இது குறித்து அவரது தாயார் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து மாயமான ரீனா சிங்கை தேடி வருகிறார்.

    ×