என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து"
- நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது.
- கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை
நாகர்கோவில் :
திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் பர்ஸ் ஒன்று கிடந்தது. இதை பார்த்த கண்டக்டர் அதை எடுத்து பார்த்தார்.அப்போது அதில் ரூ.10,600 இருந்தது. உடனே கண்டக்டர் அந்த பர்சை போக்குவரத்து கழக அதிகாரியிடம் ஒப்படைத்தார். பின்னர் அதிகாரிகள் அந்த பர்சை வைத்திருந்தனர்.
அந்த பர்சிற்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை. இந்த நிலையில் பர்சை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பர்சில் இருந்த கார்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது அது வள்ளியூர் அருகே ஆனைகுளம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஜெயக்கொடி என்பவரது பர்ஸ் என தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சரண்யா ஜெயக்கொடி தனது பர்சை தவற விட்டு விட்டு பல இடங்களில் தேடி வருவதாக கூறினார். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவரை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவரிடம் பர்சிற்கான அடையாளங்களை கேட்டு அறிந்தனர்.
பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு பர்சை சுகன்யா ஜெயக்கொடியிடம் போக்குவரத்து கழக அதிகாரி ஜெரோலின் ஒப்படைத்தார்.பர்சை பெற்றுக் கொண்ட சரண்யா ஜெயக்கொடி போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். சரண்யா ஜெயக்கொடி கூறுகையில் கடன் வாங்கி கொண்டு வந்த பணம் தவறிவிட்டது என கவலையில் இருந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். தற்பொழுது அதிகாரிகள் இந்த பணத்தை எடுத்து என்னிடம் ஒப்படைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
- இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து ஈரோடு மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணிகளை ஈரோடு வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 301 வழக்குகள் என மொத்தம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
- சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
- இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
இந்த இறக்கை கொண்டு செல்லும் லாரியை எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் :
அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.
எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அப்டா மார்க்கெட் வழியாக பஸ்கள் இயக்கம்
- ரூ.1.40 கோடி செலவில் சீரமைப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட சாலை கள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. அதை சீரமைக்க நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்பொழுது அசம்பு ரோடு பகுதியில் சாலை சீரமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று தொடங் கப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை கள் தோண்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதையடுத்து அசம்பு ரோட்டில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பு ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஒழுங்கினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கரசாலையில் சென்று புத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் புத்தேரியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் நாற்கரசாலை வழியாக வந்து அப்டா மார்க்கெட் ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வருகிறது.
போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரவு பகலாக இந்த பணியை முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
- ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.
இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார்
- நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள பரசேரியை சேர்ந்த வர் அஜித்குமார் (வயது 49).
இவர் நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்துக் கழக பணிமனையில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜீப் டிரைவராக உள்ளார். கடந்த ஒரு மாதமாக இவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனக்கு பணி வழங்க கேட்டு அஜித்குமார் ராணி தோட்டம் பணிமனை முன்பு தர்ணா மற்றும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அஜித் குமார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். இதனை கவனித்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அஜித்குமார் கூறுகையில், "நான் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜீப் டிரைவர் பணி ஒதுக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஒரு மாதமாக எனக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். போராட்டம் நடத்திய பிறகும் என்னை கண்டுகொள்ளவில்லை. எனவே எனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து அவரை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அஜித் குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
- போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.
இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.
இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.
ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
சேலம்:
சேலம் கோட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை.
தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அண்ணாபூங்கா அருகே உள்ள 2 திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊதியர்களுக்கு 7 ஆண்டுகளாக எந்த பலனும் கிடைக்காதால் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை எனில் விரைவில் குடும்பத்துடன் டெப்போ முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எந்த அரசு வந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
- வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகராட்சியின் கடைத்தெரு பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்ததால் கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமி ப்புகளை அதிரடியாக அகற்றினார்.
குறிப்பாக பட்டுக்கோட்டை வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படு த்தப்பட்டு, உயரபடுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் இன்றோடு இல்லாமல் தொ டர்ந்து ஆக்கிரமிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
- கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துள்ளது
- சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடல் நடுவில் இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் இந்த சிலை அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.