என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வு"
- பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
- குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.
ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.
1. கால அட்டவணை
பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.
2. வினா வகை
குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.
3. துறை ரீதியாக தயாராகுதல்
நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.
4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்
பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.
5. உணவும், உறக்கமும்...
உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.
- முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள்.
- முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணிக்காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும். இந்த தேர்வுகளை ஸ்டாப் செலக்சன் கமிஷன்- எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) நடத்தி வருகிறது.
இந்த தேர்வு குறித்த தகவல்கள் கடந்த வாரங்களில் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்தும், எவ்வாறு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.
தேர்வுக்கு தயார் செய்யும் முறை
முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள். பின்பு அதை ஒரு தனித்தாளில், பாடவாரியாக (கணிதம், ஆங்கிலம், புத்திக்கூர்மை, பொது அறிவு) எழுதுங்கள். பின்பு மீண்டும் அதை வாசித்துப் பாருங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள். எப்படி படிப்பது, எதிலிருந்து ஆரம்பிப்பது, எந்தப் பகுதிக்கு விடையளிப்பது, எது கடினமாக உள்ளது என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.
பொது அறிவுப்பகுதி, புத்திக்கூர்மைத் திறன் மற்றும் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் வினாக்கள் பட்டப்படிப்பு கல்வித் தரத்தில் அமையும். கணிதப்பகுதி மட்டும் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தில் அமையும். பொது அறிவுப் பகுதியில் வரலாறு, புவியியல், இந்திய கலாச்சாரம், பொருளாதாரம், அறிவியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.
ஜெனரல் இன்டலிஜன்ஸ் (General Intelligence)
அனைத்து திறனறி தேர்வுகளிலும் இப்பகுதி இடம்பெறுகிறது. இதில் Verbal Reasoning மற்றும் Non Verbal Reasoning என இரு பகுதி களாக வினாக்கள் அமைகின்றன. Non- Verbal Reasoning பகுதியில் படங்கள் (Diagrams மற்றும் Figures) இடம் பெறுகின்றன. இந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பில் அமைக்கப்படுகின்றன. இந்த தொடர்பைக் கண்டறிந்து, அதன் விடையை தேர்வு செய்வதில் நமது திறனைப் பயன் படுத்த வேண்டும். இத்தேர் வின் நோக்கம் விண்ணப்பதாரரின் ஆராய்ந்தறியும் திறனைக் கண்டறிதலே ஆகும்.
இப்பகுதியில் வினாக்கள் மூன்று பிரிவுகளில் அமைகிறது.
1) Series, 2) Analogy, 3) Classification
ஒவ்வொரு பிரிவிலும் எப்படியெல்லாம் வினாக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை பயிற்சியின் மூலம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், வேகமாக சிந்திக்கும் திறன், கொடுக்கப்பட்ட வினாவில் உள்ள படங்களுக்கு இடையே உள்ள தொடர்பு (Correlation) மற்றும் வேறுபாடு ஆகியவற்றை கண்டறியும் நுட்பம், அறிவுத்திறன் (Mental Ability) ஆகியவை மேம்படுவதுடன், இவ்வினாக்களைத் தீர்வு செய்ய தனி யுக்தியையும் வகுத்துக் கொள்ளலாம்.
Verbal Reasoning பகுதியில் படங்களுக்குப் பதிலாக எண் தொடர்கள், ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொடர்கள் Coding, Decoding ஆகிய பிரிவுகளில் வினாக்கள் அமைகிறது. இந்த வகை வினாக்கள் எத்தனை வகைகளில் (Pattern) அமைகிறது என்பதை அறிந்து அதைத் தீர்வு செய்ய பழகிய பின்பு, குறைந்த நேரத்தில் தீர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் நேர நிர்வாகம் மிக முக்கியம்.
இப்பகுதிக்கு இதர மூன்று பகுதி களைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. LOGIC-ஐ புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். Analogy, Ranking, Sitting Arrangements, Blood relations, Directions, Series Problems போன்ற பகுதிகளை முதலில் முடித்து விட வேண்டும். Syllogism, Statement and Conclusion, Coding and Decoding போன்ற பகுதிகளுக்கு Analytical Reasoning தொடர்பான புத்தகங்களைப் படிக்கலாம். அதிக அளவில் இவ்வினாக்களை பயிற்சி செய்யும்போது உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.
லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning)
பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிந்த தகவல் களைக் கொண்டு சரியாக யூகிப்பது அல்லது முடிவுகளை எடுப்பதை 'ரீசனிங்' என விளக்கலாம். அறி வியல் பூர்வமான சரியான காரணம் அறிதலே 'லாஜிக்' எனப்படுகிறது. பொதுவாக தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களில் நம்மை அறியாமலேயே லாஜிக்கை (Logic) பயன்படுத்துகிறோம். ஆனால் பயன்படுத்தும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.
Logical Reasoning வகை வினாக்களில் இரண்டு அல்லது மூன்று கூற்றுகள் (Statement), புள்ளி விவரம், நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் அளிக்கப்படும். இந்த கூற்றுகளின் (Premises) அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று முடிவுகளும் (Conclusion) இருக்கும். இவற்றில் எவை சரியானது, எவை தவறானது, அனைத்தும் சரியா அல்லது அனைத்தும் தவறா என்பதை விடையாகக் குறிக்க வேண்டும். கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.
கூற்று: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 200 ரன்களை எடுத்தது. இதில் 160 ரன்களை எடுத்தவர்கள் அந்த அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்.
முடிவு: 1) அந்த அணியில் 80 சதவீதம் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள். 2) இந்த போட்டியில் துவக்க நிலை ஆட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள்.
இப்போது கீழே கொடுக்கப்பட்டவற்றில் இருந்து விடையைத் தேர்வு செய்யவும்.
A. முடிவு 1 மட்டும் சரி, B. முடிவு 2 மட்டும் சரி, C. முடிவு 1 அல்லது 2 சரி, D. முடிவு 1 மற்றும் 2 தவறு, E. இரண்டும் சரி
முதல் முடிவை ஆய்வு செய்வோம். அந்த அணியில் 80 சதவிகிதம் சுழற்பந்து வீசுபவர்கள் என்ற விவரம் கூற்றில் எங்கும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் 160 ரன்கள் சுழற்பந்து வீசுபவர்கள் எடுத்தார்கள் என்பதற்காக அவர்கள் துவக்கநிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது. எனவே இதற்கான விடை D ஆகும்.
கூடுதல் மாதிரி வினாக்களை அடுத்த வாரம் பார்க்கலாம். அது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ள வழிவகுக்கும்.
எம்.கருணாகரன்,
துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.
- நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.
- பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூர்:
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு சாகசப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டம், நாா்கண்டா என்ற இடத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மலையேறுதல், ஆற்றைக் கடந்து செல்லுதல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதில், பங்கேற்பதற்காக பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி வனபாா்வதி (விலங்கியல் துறை மூன்றாமாண்டு) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்திலிருந்து இவா் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.
- கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
- 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது
கன்னியாகுமரி:
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.
- முதுகலை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
- இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிமாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு ரூ 4000, இளங்களை கல்விபயிலும் மாணவமாணவியருக்கு ரூ 6000 மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000 வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் 5000 கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்தி றனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைமற்றும் பார்வைற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத்தி றனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.
9 வகுப்பு மேல்க ல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகள்கல்வி உதவித்தொகை பெற 30.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர்உ தவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில்க ல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண்சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இதுசம்பந்தமா னவிவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடா;பு கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27-ந்தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
- நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவைகளை தேர்வு செய்தனர்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் -ஆலக்குடி சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் "விஞ்ஞான் பெஸ்ட் "என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி ரம்யா சத்தியநாதன் கல்விக்குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
ரம்யா சத்தியநாதன் கல்வி குழுமச் செயலர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் கழகத் துணைத் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்கள் காயத்ரி,
சுந்தரநாயகி, ரமேஷ் பாபு ஆகியோர் கண்காட்சியின் நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவை களை தேர்வு செய்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
முன்னதாக ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் ஆ கியோர் நன்றி தெரிவித்து பேசினர்.
- 21-ந்தேதி அறிமுக வகுப்பு நடக்கிறது
- மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 46 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மேலும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகல் மற்றும் தேர்வு மைய அனுமதிச் சீட்டு ஆகியவற்றுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21-ந் தேதி வருகை புரியுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்து உள்ளார்.
- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, 65 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.
- பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.
மதுரை
தமிழகத்தில் துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட 92 பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்த ப்பட்டு இருந்தன. விண்ணப்பதாரர்கள் அதிகாலை முதலே தேர்வு மையத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வி தாளில் 175 வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், 25 வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும் இருந்தது. மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கு 20 ஆயிரத்து 259 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையங்களில் 65 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
துணை தாசில்தார் தலைமையில் 18 மொபைல் குழுவினர், துணை கலெக்டர் தலைமையில் 5 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 66 வீடியோ கிராபர்கள் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 முதல் நிலை தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முழு வேலை நாள் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடக்கும் மையங்களில், 12.30 மணிக்கு பிறகு பள்ளிகளை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மட்டுமின்றி பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
- சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -
நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று
ஒப்பம் பெற்று வரவேண்டும்.
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- ராமநாதபுரம்,சிவகங்கை-விருதுநகர் மாவட்டத்தில் 30 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது
- 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
ராமநாதபுரம்
2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட் டத்தில் 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வில்லை. அவர்களை சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ேதர்வு மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்லைக்கழ கம், வி.பி.எம். கல்லூரி, விருதுநகர் வித்யா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக், வி.வி.வி. பெண்கள் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, காரியாபட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, செவல்பட்டி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 மையங்களில் நடந்தது.
காலை 9.30 மணி அளவில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த மையங்களில் 16 ஆயிரத்து 379 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்த பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, உமையாள்-ராமநாதன் மகளிர் கல்லூரி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்க ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மொத்தம் 8 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 30 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
- 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது
- 17,871 பேர் எழுதினார்கள்
திருச்சி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாநகரில் 16 மையங்களில் 8,371 பேரும், புறநகர் பகுதியில் 7 மையங்களில் 9500 பேரும் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.
இதையடுத்து காலை 7 மணி முதல் மையங்களுக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வரத் தொடங்கினர்.
தேர்வு மையத்துக்குள் பேனா மற்றும் கால் டிக்கெட் தவிர வேறு எந்த பொருளும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக டிஜிட்டல் வாட்ச்,செல்போன் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் உடற் தகுதி தேர்வு நடத்தப்பட்டு காவலராக தேர்வு செய்யப்படுவார்கள்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தேர்வு நடந்த மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.