என் மலர்
நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு"
- மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
- ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது.
- கிராமசபை கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருசடி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மேயரிடம் வழங்கினர். இதில் அதிக பட்சமாக ஓய்வூதியம், விதவை பென்சன், நிவாரணம், சாலை பணிகள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் இடம் பெற்றிருந்தன.
கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-
மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று அறியும் வகையில் இந்த கிராம சபை கூட்டம் தமிழக அரசு நடத்தி வரு கிறது. நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட 33-வது வார்டில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிராம சபை கூட்டம் என்பது காசு கொடுத்து கூடும் கூட்டமல்ல. மக்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை கொடுக்கும் கூட்டமாகும்.
நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வார்டுகள் வாரியாக அதிகாரிகளுடன் நான் நேரில் சென்று குறை களை கேட்டு வருகிறேன்.
ஆக்கிரமிப்பு தான் இந்த மாவட்டத்தின் பெரிய தலைவலியாக உள்ளது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் எந்தவித பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஒரு நாளுக்கு 111 டன் குப்பைகள் மாநகாில் சேகரிக்கப்படுகிறது. அதில் வெறும் 30 டன் குப்பைகள் மட்டுமே தரம்பிரிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.
கழிவு மற்றும் குப்பை களை சாலையோரம் வீசக் கூடாது. ஆண் குழந்தைகள் இருந்தால் ஓய்வூதயம் பெற மனு அளிக்க வேண்டாம். கோவில் நிலத்தில் வரி கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் வழங்க வேண்டும். சுயஉதவி குழுக்களுக்கு கடன் மற்றும் நிவாரணம் அளிப்பதில் தமிழக அரசு முதன்மையாக உள்ளது. மக்களாகிய நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை முன்மாதிரியான மாந கராட்சியாக மாற்ற வேண்டும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணை யாளர் ஆனந்த மோகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், சுதாகர், லீனஸ்ராஜ், கென்னடி, சேக் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
- கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறக்கிங்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள பால் குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.
இதுபோல் கோட்டார் ரெயில் நிலையம் பகுதியில் 35 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் இருந்து வந்தது. இந்த வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை கடந்த சில மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கியது. அதன்படி வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி தலைமையில், வருவாய் அதிகாரி ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த 35 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.
அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.
இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.
இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-
கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-
தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
- கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் எந்தவித பார பட்சமுமின்றி அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டது. இன்று வடசேரி அaண்ணா சிலை முதல் புத்தேரி மேம்பாலம் வரை உள்ள அசம்பு ரோட்டில் அனைத்து ஆக்கிர மிப்புகளும் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.
கடை முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. மேலும் மழைநீர் வடிகால் மேல் மீது உள்ள ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இந்த பணியை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.
- உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
- வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டப்பொறியாளா் ரமேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.
இதில், தி கன்ஸ்யூமா்ஸ் கோ் அசோசியேஷன் தலைவா் காதா்பாட்ஷா பேசியதாவது:-
திருப்பூா் மாநகரில் சாலை பராமரிப்புக்காகத் தோண்டப்படும் குழிகள் இருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கா்கள் ஒட்டவேண்டும். அவிநாசி தோ் வரும் நெடுஞ்சாலைப் பகுதி மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஆகவே, உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
காங்கயம் சாலையில் டிஎஸ்கே மருத்துவமனை பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல, திருப்பூா் ெரயில் நிலையம் முதல் வஞ்சிப்பாளையம் வரை அனைத்து சாலைகளும் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் (சட்ட விழிப்புணா்வு அணி) மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அது தொடா்புடைய ஒப்பந்ததாரா்களால் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் முறையாக மறுசீரமைப்பு செய்வதில்லை. ஆகவே உரிய கவனம் செலுத்தி அனைத்து சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
- தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
- கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
- சங்கினி குளத்தையும் விரைவில் மீட்க வேண்டும்.
மதுக்கூர்:
பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்தில் புலவஞ்சி கிராமம்கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலி யில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு உள்ளதாகவும், இதனால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டு ள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை, பொது ப்பணித்துறை செயல்பட்டாலும் மற்றும் வருவாய் துறையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் மற்றும் வருவாய் கோட்டா ட்சியர் சாந்தகுமார் மூலம் பொதுப்பணித்துறை இணைந்து பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றிய த்தில் புலவஞ்சி கிராமம் கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலியின் விவசாயத்தை பயன்படுத்தும் கூடிய மதகு எண் 19 என்ற நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்குப் பிறகு பொது பணியும் வருவாய்த்துறையும் இணைந்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாய்காலை மீட்டெடுத்து கொடுத்ததற்கு காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் கூறுகையில், இதுபோன்று சமூகத்திற்கு வேண்டிய செய்திகளை தொடர்ந்து மாலை மலர் செயது வருவதனால் மாலை மலர் உடைய வாசகர் என்ற முறையில் மாலை மலருக்கு நன்றி கடந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போன்று மதுக்கூர் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மதுக்கூர் காவல் நிலையம் அருகாமையில் உள்ள சங்கினி குளத்தையும் கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் மீட்டு தரும் என்று நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார்.
- பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
- அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
- கழிவுநீர் ஓடைகள் சீரமைப்பு
- கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் அதிரடி நடவ டிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோட்டார் போலீஸ் நிலையம் முதல் ஒழுகினசேரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. என்ற மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். மீனாட்சிபுரம் பகுதியில் கடையின் முன் பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அதை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்த அகற்றினார்கள்.கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த படிக்கட்டுகளும் இடித்து அகற்றப்பட்டது.
மீனாட்சிபுரம் பகுதியில் கழிவு நீர் ஓடைகள் மணல் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கழிவுநீர் ஓடையில் கிடந்த மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து கழிவு நீர் ஓடையில்கிடந்த மணல்கள் அகற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட தையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
- பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.
இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.