என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டி"

    • நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும்.
    • நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    ஓசூர்,

    அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில், நதி நீர் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சங்கத்தின் இணை செயலாளரும், ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளருமான சிவராமானந்தா சுவாமிகள் தலைமையில் இந்த ரத யாத்திரையானது கடந்த 20-ந் தேதி, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு இடங்களை கடந்து நேற்று ஓசூர் வந்த ரதயாத்திரைக்கு, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், நதிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சண்முகவேல், செயலாளர் ஒய்.வி.எஸ். ரெட்டி, ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் ஓசூர் நியூ அட்கோ பகுதி மற்றும் ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், தனியார் மண்டபத்திலும் காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், சிவராமானந்தா சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனிதனுடைய வாழ்க்கையில் நீர் மிகவும் முக்கியமானது. அந்த நீருக்கு ஆதாரமாக விளங்குவது நதிகளாகும். இந்த நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும். நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    இந்த விழிப்புணர்வு யாத்திரையின் நோக்கமே பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நதிகளில் மாசு படுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதுதான். மேலும் வருங்கால சந்ததியினருக்கு இந்த விழிப்புணர்வு வாயிலாக தூய்மையான குடிநீரை வழங்குவதுடன், மாசில்லா நீரின் மூலம் விவசாயம் தழைக்கவும் ஏதுவாக இருக்கும் இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    மேலும் இதில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசு, நதிநீர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சரவணன்,சுகுமாரன், நரசிம்மன் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர் விஷ்ணுகுமார், தேவராஜ், பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு கண்காட்சி கூட்டமாகவே இருக்கும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • நிர்வாகிகளும் இல்லை, தொண்டர்களும் இல்லை, கட்சியும் இல்லை.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் விரோத அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களை வஞ்சிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்கை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் வருகிற 9, 13, 14 ஆகிய நாட்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரிடம் தற்போது கட்சி நிர்வாகிகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை. கட்சியும் இல்லை. இதை உணர்ந்ததால் தான் அவருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல், இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் கூட்டப் போகும் பொதுக்குழு வெறும் கண்காட்சி கூட்டமாகவே இருக்கப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    • அரியலூரில் கட்சி கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி

    அரியலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழுர், தா.பொட்ட கொல்லை, உடையார்பாளையம், விக்கிரமங்கலம், கீழப்பழுவூர், திருமானூர், ஆண்டிமடம், கூவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்,

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தால் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் விளை பொருட்களுக்கு ஆதார விலை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது. இதனால் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.மழைக்காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் சங்கர், நகரத் தலைவர் சிவக்குமார், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கிபல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 லட்சத்து 97 ஆயிரத்து 901 மதிப்பில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

    ஏழை-எளிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்கிட வேண்டும். கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து.

    பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை செல்வராஜ் சொல்கிறார்.
    • ஒருவர் காமிரா பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கோவை

    சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ், கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசு மீது குறை கூறி வரும் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைதடுக்க சட்டம் இயற்ற குரல் கொடுக்க தயாராக இருக்கிறாரா?, இந்த சூதாட்டம் காரணமாக ஏராளமான இளைஞர்கள் உயிரை மாய்த்து வருவதுடன் கடனுக்குள்ளாகி வருகி றார்கள். கொரோனா காலத்தில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதை செலுத்த முடியாமல் அவதியடை ந்தனர். ஆனால் அதற்கு வட்டி கூட தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, 540 தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டிய ரூ.12½ லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்து உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது மத்திய அரசு மக்களுக்கான அரசு இல்லை. தொழில் அதிபர்களுக்காக தான் இருக்கிறது. விரைவில் கோவையில் இருந்து 3 ஆயிரம் பேரை சென்னை அழைத்துச் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைப்பேன். இவவாறு அவர் கூறினார். 

    • தலைமைக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பேட்டியளித்துள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரையில் அதிமுக ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அவர் இல்லாத அ.தி.மு.க.வை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் பலன் அளித்துள்ளது. அவர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பிரயோகித்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர். அதனை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியானவர் அல்ல. அ.தி.மு.க. பிளவால் தி.மு.க. தேர்தல்களில் வெல்லும் என்பது வரலாறு, உண்மையில் தி.மு.க.வுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி உதவி செய்து வருகிறார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பேட்டியின் போது மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ,தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், பவுன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க.அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர்.
    • இந்த சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.

    மதுரை

    தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக நேற்று மதுரை வந்தார்.

    பின்னர் மதுரை சத்திய சாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், தனது பெரியப்பாவுமான மு.க. அழகிரி இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்து பெற்றார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க. அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர். வாசலில் வந்து வரவேற்ற மு.க. அழகிரி உதயநிதியை இன்முகத்துடன் வரவேற்று தோளில் கையை போட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இதை தொடர்ந்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    காந்தி அழகிரியும் உதயநிதியை நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, காந்தி அழகிரி ஆகியோரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

    பின்னர் மு.க.அழகிரி தன்னுடன் இருந்த ஆதரவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மேற்கு மண்டல தலைவர் சின்னான் மற்றும் ஆதரவாளர்கள் உதயகுமார், எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, இசக்கி முத்து, கோபிநாதன் ஆகி யோர் உதயநிதி ஸ்டாலி னுக்கு சாலை அணிவித்த னர்.

    பின்னர் வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    நான் அமைச்சரான பிறகு எனது பெரியப்பாவை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அவரும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று வாழ்த்தியிருக்கிறார். நான் சிறுவயதில் இருந்தே எனது பெரியப்பாவுடன் பாசத்துடன் வளர்ந்தவன். அதே பாசத்தை எப்போதும் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து மு.க. அழகிரி கூறியதாவது-

    உதயநிதியும் எனது மகன் தான். சிறுவயதில் இருந்தே அவன் என்னுடன் பாசமாக பழகுவான்.இப்போது அமைச்சராக ஆகி இருக்கிறான். எனவே என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நானும் மனதார வாழ்த்தி உள்ளேன்.

    எனது தம்பியும் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனது மகனும் (உதயநிதி) அமைச்சராக இருக்கிறார். இதைவிட எனக்கு என்ன வேண்டும்? நான் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நிருபர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேருவீர்களா? என்று மு.க.அழகிரியிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி இதுபற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

    மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர். விரைவில் மு.க.அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

    • 12 பேர் தற்கொலைக்கு கவர்னரே காரணம்...
    • ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை

    அரியலூர்,

    பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பு மணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்றும், அதே நேரத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது. மேலும், 2025-ம் ஆண்டு வாக்கில் என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய போவதாக மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏன். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் கடந்த இரண்டரை மாதத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களது உயிரிழப்புக்கு ஆளுநரே காரணம். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி அமைப்போம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்றார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுேவாம்
    • தமிழ்நாட்டில் அண்ணாமலையால் சுதந்திரமாக செயல்பட முடியாது

    நாகர்கோவில்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகர்கோவிலில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாயை தோற்றம் ஆகும். மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம். நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை .ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள்.கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். கமலஹாசன் காங்கிரசுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது.மதுரையில் அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.தற்பொழுது கடலுக்குள் பேனா வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. கடலின் நிலப்பரப்பை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.அது வீண் செலவாகும்.

    சிவாஜி சிலை கண்ணகி சிலை மாற்றப்பட்டது. அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது சிலை வைத்தால் தூக்கி மாற்றப்படும். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது. கருணாநிதி சிலையை வைப்பது தொடர்பாக பணி தொடங்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்காரும் தான். ஆர்எஸ்எஸ் தடையை நீக்க உதவியதற்காக வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டையில் குடிநீரில் மனிதக் கழிவு களை கலந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடன் மாடல் ஆட்சி என்பது வேடிக்கையானது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு எதை செய்து உள்ளார்கள். மலைகள் இல்லாவிட்டால் மழை இல்லாமல் சென்று விடும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மலைகளை கை வைக்க முடியாது. வளங்களை பாதுகாப்போம். தமிழகத்தில் பாரதிய ஜனதா செயல்படவில்லை. அண்ணாமலையால் தமிழ்நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியாது.

    இலங்கையில் 12 மீனவர்களை சங்கிலியால் கட்டி இழுத்து செல்லப் பட்டனர். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்பட எந்த கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.நாம் தமிழர் கட்சி மட்டுமே கண்ட னம் தெரிவித்தது.மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வட மாநிலத்தினர் 2 கோடி பேர் தமிழகத்திற்குள் வந்துள்ளனர்.தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்கள் மரணம் அடைந்து வருகிறார்கள்.அதை சீரமைப்பதை விட்டுவிட்டு கலைஞருக்கு சிலை வைக்க பணம் செலவு செய்கிறார்கள்.

    பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு மக்களுக்காக அந்த பணங்களை செலவு செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை சேமித்து வைக்க குளிர் பான அரங்குகளை கட்டும் அரசு டெல்டா மாவட்டங்களில் நெல்களை பாதுகாக்க தவறிவிட்டது. பாரதிய ஜனதா தற்போது வெளியிட்ட பட்ஜெட் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் அமலாக்கத்துறை, வருவாய் துறை உள்பட பல்வேறு துறைகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார்
    • பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது என்றார்

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி வர்த்தக சங்க மஹாலில் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்கள் தமிழ்நாடு ஐஎன்டியூசி கட்டுமானம் அமைப்புசாரா மற்றும் அனைத்து பிரிவை சார்ந்த தொழிலாளர்கள் 17-வது மண்டல மாநாடு நடைபெற்றது. ஐஎன்டியூசி தமிழ்நாடு தலைவர் ஜெயநாதன் தலைமை வைத்தார். செயல் தலைவர்கள் மனோகரன், கதிர்வேல், குப்புச்சாமி, ஆதிகேசவன், முருகேசன், பொதுச்செயலாளர் களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொதுச் செயலாளர்கள் அருண் பிரசாத், பலராமன், பெருமாள்சாமி, கல்யாண குமார், புவனேஸ்வரி ,நஞ்சப்பன், மாநிலத் துணைத் தலைவர் துளசிதாஸ், திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், மூத்த துணை தலைவர் சீனிவாசன், பொது செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது. பேனா எழுதிய எழுத்தை விட எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த கருத்தை நான் கூறுவேன் என்று சீமான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.பெரும்பாலும் பா.ஜ.க. வின் பார்வை மேல்தட்டு மக்களை சார்ந்தே உள்ளது.ஒரே ஒரு பட்ஜெட் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது. பங்கு சந்தை மீது உள்ள நம்பிக்கை குறையும் போதெல்லாம் தங்க விலை உயர்வு இருக்கும்.அதானி பொய்யாக நிறுனத்தை உருவாக்கினார். என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும்.பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.என்றார்.இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.
    • கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் 99 சதவீதம் பேர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், மரியாதை கிடைத்தால் போதும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோல்வியடைந்து, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.

    மக்களை அடைத்து வைத்து மது, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஜனநாயக படு கொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் வாக்குகள் இல்லை. திமுக, காங்கிரசை தூக்கிப்பிடித்து திரிகிறது.

    வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். எல்லாவற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒதுக்குகின்றனர். இங்குள்ள மக்கள் காட்டுக்கருவேல மரம் வெட்டி கரிமூட்டம் போட்டுத்தான் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழக த்தில் தி.மு.க. அரசால் நல்லதும் நடக்கவில்லை, கெட்டதும் நடக்கவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் குடி நீரில் மலக்கழிவுகளை கலந்தவர்கள் யார் என்று அரசுக்கு தெரிந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

    ஓட்டு வங்கி அரசிய லுக்காக தி.மு.க. அரசு இப்படி செயல்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி இந்திரா நகர் பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி மின் மயானம் அமைக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் த.ம.மு.க. சார்பில் பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×