என் மலர்
நீங்கள் தேடியது "பரிசோதனை"
- வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
- மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை
புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதார துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலைய சுகாதார துறை மேற்பார்வையாளர் தங்கச்சாமியின் தலைமையில் சுகாதாரத் துறையினர் மதுரை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை செய்கின்றனர்.
அரசு அறிவித்துள்ள விதிகளின்படி விமான பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை வரும் வெளிநாட்டு விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் கொரோனா தொற்று இருந்தால் அனைத்து பயணிகள் இருப்பிடத்திற்கு சென்று சுகாதாரத்துறை யினரால் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 187 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று (25-ந்தேதி) கொழும்பில் இருந்து மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
- மெலட்டூரில் இருந்து நரியனூர் வந்த கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 40), விவசாயி, இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அன்னப்பன்பேட்டையில் இருந்து மெலட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நரியனூர் அருகே வந்தபோது எதிரே மெலட்டூரில் இருந்து நரியனூர் நோக்கி சென்ற கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குமாரசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியில் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
- நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது( 37 ). இவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முந்தினம் இவர் சொந்த ஊரான தப்பகுட்டை வருவதற்காக சீனாவில் இருந்து தனது மனைவி நாக மலர்விழி(30) மற்றும் மகன், மகளுடன் புறப்பட்டு வந்தார். கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதை தொடர்ந்து அவருக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் தப்பக்குட்டைக்கு விரைந்தனர். அங்கு நாகராஜ் மற்றும் அவரது வீட்டினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினர். இதயடுத்து நாகராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை கிருஷ்ணராஜ்(65), தாயார் சரோஜா(55) ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். சித்தா, ஓமியோபதி மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் பொதுமக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மேல்சிகிச்சைக்காக 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் ஒன்றியம், பெரும்பாண்டி ஊராட்சியில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார்.
பெரும்பாண்டி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயலாளர் சரோஜா பாஸ்கர் தலைமை தாங்கினார்.
முகாமில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் அளவு, உப்பு அளவு, கண் நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முகாமில் பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் அசோக்குமார் தலைமையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை கள ஒருங்கி ணைப்பாளர் நாரயணவடிவு, அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் பெரும்பாண்டி ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
- மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி அரசினர் மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் லியாக்கத் அலி வரவேற்றார்.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் திட்டச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சங்கரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை–யாளர் கற்பகம் நன்றி கூறினார்.
- இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
- சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
- குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
- நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5, பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 490-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இதில் நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்கள் செய்யப்பட்டு வருகி றது. மாலையிலும் தீபாராத னைகள் நடந்து வருகிறது.
தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர் சிலைகளுக்கு பெண்கள் மஞ்சள் பொடி தூவியும், பால் ஊற்றியும் வழிபட்டு வருகிறார்கள்.
தரிசனத்திற்கு அர்ச்சனை கட்டணமாக ரூ.5 பாலபிஷேகம் ரூ.500, நீரும் பாலும் ரூ.50, சிறப்பு பூஜை ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோ தனை செய்யப்பட்டு வருகி றது.
இதே போல நாகராஜா கோவிலிலும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஸ்கேனிங் மிஷின்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அர்ச்சனை அபிஷேக டிக்கெட்டுகள் அனைத்தும் பார் கோடு மூலமாக ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கோவில் ஊழி யர்கள் செல்போனில் டிக்கெட்டை ஸ்கேனிங் செய்ய வசதியாக செல் போன் செயலியும் பயன்படு த்தப்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்கள் தங்களது செல்போனிலேயே அந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமின்றி சுசீந்தி ரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்க ளிலும் அபிஷேக டிக்கெட்டு கள் ஸ்கேனிங் மூலமாக பரிசோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து இணை ஆணையர் ஞானசேகர் கூறு கையில், தமிழகம் முழுவதும் அபிஷேக டிக்கெட்டுகள் ஸ்கேனிங் மிஷின் மூலமாக ஸ்கேனிங் செய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் முதல் கட்டமாக பெரிய கோவில்களில் இந்த ஸ்கேனிங் மிஷின் பொருத்தும் பணி நடந்தது. 54 கோவில்களில் அபிஷேக டிக்கெட்டுகளை ஸ்கேனிங் செய்வதற்கு மெஷின் பொருத்தப்பட்டு ஊழியர்கள் அதை ஸ்கேன் செய்து வருகிறார்கள் என்றார்.
- நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
- மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை.
தஞ்சாவூர்:
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசுகையில், ஜாதி, மதம், மொழி என்ற எந்த பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.
இதில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை நேற்று தொடங்கி வருகிற பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர் எஸ்.டி.பி. ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கலந்து கொண்டார். கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சரவணன் தலைமையில் குழந்தைகள் மருத்துவர் கவுதம், காது, தொண்டை, மூக்கு மருத்துவர் ஆரோபிண்டோ, கண் மருத்துவர் வடுலா கிருஷ்ணன், எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் நூருல் ஆயிஷா, பொது மருத்துவர் ப்ளெக்ஸ் நிதின், தோல் மருத்துவர் ஸ்ரீ பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.
முகாமிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் முகமது பாஷா, சகிலா பேகம், சித்திக், சமூக ஆர்வலர் அஜ்ஹர், ரோட்டரி கிளப் மரம் நடுதல் சேர்மன் சபீக். ம.ஜ.க. நிர்வாகி செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமில் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எர்ணாகுளம் பஷீர் திருக்குர்ஆன் வழங்கினார்.
- நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்று சார்க்கரை நோய்.
- தற்போது பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது.
நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.
தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
- 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
- சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேதாரண்யம்:
நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது
முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.
மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.