என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம்"

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
    • மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் சிவகுமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். மதுரையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல குமரி மாவட்டத்திலும் 2 ஆயிரத்து க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.மேலும் பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் பத்மநாப புரம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூச்செடிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள அரண்மனைக்கொல்லை மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.அரண்மனைக் கொல்லைய சேர்ந்தவர் சண்முகவடிவேல் (வயது 45). விவசாயியான இவரும், இவரது தம்பி செந்தில் வடிவேலும், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூ செடிகள் நட்டு பூ மகசூல் செய்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் உள்பட சிலர் மல்லிகை, முல்லை பூ செடிகளை அரிவாள் கொண்டு வெட்டி சேதப்ப டுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட் பூச்செடிகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.பூச்செடிகளை வெட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீரமங்கலம் காவல் நிலையத்தில்சண்மு கவடிவேல் புகார்கொடு த்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி சண்முகவடிவேலும், அவரது உறவினர்களும், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தினேஷ்குமார், கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வடகாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம அலுவலர் தனலட்சுமி ஆகிேயார மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.திடீர் மறியல் போரா ட்டத்தால், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
    • கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால், டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டாததால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து மறியி லில் ஈடுபட்டதோடு, உடனடியாக இடம் மாற்றம் செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புசெழியன், டாஸ்மாக் மேலாளர் குப்பு சாமி, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டுமென, அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால், 2 மணி நேரம் நீடித்த பொதுமக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஓரிரு மாதங்களில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    • ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்த்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை உடன் அமல் படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு வழங்கிய நாளிலிருந்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர் குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்கர் விருதாளர் பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் மகாராஜன், வை.சிற்றரசு, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனி, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஜெயபாலு நன்றி கூறினார்.

    • கீழ்பவானி பாசன திட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 70 ஆண்டுகால இந்த திட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சண்முகராஜ் மற்றும் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருளாளர் செங்கோட்டு வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கீழ்பவானி பாசன திட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது. 70 ஆண்டுகால இந்த திட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு வேலை தொடங்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெறாமல் முடக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

    சீரமைப்பு வேலைகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022-23) மட்டும் நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதம் தண்ணீர் இடைநிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். இந்த சீரமைப்பு வேலைகளை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை வருகிற மே மாதம் 1-ந் தேதி தொடங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.1-ந் தேதி எந்தவித காலதாமதம் செய்யாமல் கால்வாய் சீரமைப்பு வேலைகளை தொடங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து மனு அளித்த சங்க நிர்வாகிகள் கூறும்போது, வருகிற 1-ந் தேதி கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவதுடன் 5-ந் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய்.
    • தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி தலைமை அஞ்சல் நிலையத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, தருமபுரி எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், தருமபுரி பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில் தலைமையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் பாரதிசானுக்கு மனு எழுதி தபால் அனுப்பினார்கள்.

    அப்போது, முன்னாள் எம்.பி., செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு நல்ல அரசு என்பது மக்களின் தேவையை அறிந்து செய்ய வேண்டும். ஆனால், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பல முறை தி.மு.க., அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதை நிறைவேற்றாமல் உள்ளது.

    தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய். ஒரு சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாத இந்த அரசு எப்படி சமூக நீதிக்கான அரசாக இருக்க முடியும். பெரியார் மண் என்று எப்படி சொல்லாம். தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு சங்க நிர்வாகி குமரன், தருமபுரி பா.ம.க., நகர செயலாளர்கள் வெங்கடேஷன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் குமரன், ஜெய்கணேஷ் உட்பட, பலர் உடன் இருந்தனர்.

    • சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள அரியூர் மலையடி வாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலையில் பெய்யும் மழை நீரானது குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுபதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது.

    எனவே மலையை சுற்றியு ள்ள 5 கிராம மக்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி கால்நடைகளை கூட மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலை அவலநிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுதொடர்பாக இருமன்குளம், வடக்குப் புதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டர், அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீ சார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பழனிவேல்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்க ளிடம் கல்குவாரி சம்பந்தமான கோரிக்கை மாவட்ட கலெக்டர் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த மலையை பார்வையிட சென்ற போதுதான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்களுக்கும், கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கியதாக சீமான் உள்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
    • நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியையும் இணைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்காக புதுக்கோட்டை சிறைச்சாலை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் கலெக்டர்அலுவலகம் வந்தடைந்தனர். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோ கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுக்கோட்டை நகரத் தலைவர்நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார்.

    மாதர்சங்க மாநில செயலாளர்பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளர்சங்க மாநில செயலாளர்சங்கர்ஆகியோர்சிற ப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்டச் செயலாளர்சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாதர்சங்க மாவட்டச் செயலாளர்சுசிலா, தலைவர் பாண்டிசெல்வி, விதொச மாவட்ட துணைச் செயலாளர்சித்திரைவேல் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் காயத்ரி, பரமேஸ்வரி, சித்ரா, புவனேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்டோர்பேசினர். மாதர்சங்க நகர்செயலாளர் முத்துமாரி நன்றி கூறினார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேலுவிடம் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது .
    • இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    சேலம்:

    நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை உண்ணா விரத போராட்டம் நடக்கிறது . இதில் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வ கணபதி, ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக நீட் எழுதுவதால், அனைத்து மாணவர்களும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆளுநர் பல மாதங்களாக நீட்விலக்கு சட்டமன்ற தீர்மானத்தை குடியரக தலைவருக்கு அனுப்பாமல் காலந்தாழ்த்தி, பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின் அனுப்பி வைத்தார்.

    தற்போது அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி நடக்கும் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நாளை( 20-ந் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள உண்ணா விரத போராட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணியை சார்ந்தோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வட்டாட்சியரை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

    இதை கண்டித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் இளவரசன், மத்திய செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை யில் 39 அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையொப்ப மிட்டு பணியை புறக்கணித்து வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வட்டாட்சியரை பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டி த்தும், அரசியல்வாதிகளுக்கு துணை போகும் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியா ளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.

    ×