என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து"

    • காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    புர்கா அணிந்து வந்த ஒரே காரணத்தால் பெண் ஒருவர் உணவகத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் கிளைகள் கொண்டுள்ள கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு தனது கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நபீஸா என்ற இஸலாமிய பெண் ஒருவர் நேற்றிரவு உணவருந்த சென்றுள்ளார்.

    ஹோட்டலில் அதிக கூட்டம் இருந்ததால் ஒருவர் பின் ஒருவராக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தனது குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க சென்றுள்ளார்.

    ஆனால் உணவக மேனேஜர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டதாக தெரியவில்லை. காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து இரண்டொரு முறை மேனேஜரிடம் கேட்டும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பலர் உணவருந்திவிட்டு எழுந்து சென்ற நிலையில் இருக்கைகள் காலியாக இருந்ததாக நபீஸா கூறுகிறார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நபீஷாவின் கணவர் சென்று கேட்ட பிறகு அவர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆர்டர் செய்த உணவை கொண்டுவர மேலும் 1 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். இதுகுறித்து மேனேஜரிடம் கேட்டபொழுது தங்களை துளியும் பொருட்படுத்தாமல் அவர் அங்கிருந்து சென்றார் என்றும் அவர் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    இதுகுறித்து நபீஸா தனது பேஸ்புக் பதிவில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எனது வாழ்நாளில் தற்போது சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை. என்று தெரிவித்துள்ளார். 

    • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
    • வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

    அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.

    இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

    பிரேம்ஜிக்கு இன்று  ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள்.

    மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது அவர், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

    மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது "நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள்.

    ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்றார்.

    இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவை சில நிமிடங்கள் அமளியாக காணப்பட்டது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், "எனது சகோதரர் (ராகுல்) இந்துக்களுக்கு எதிராக ஒருபோதும் பேச மாட்டார். அவர் பாஜகவைப் பற்றியும், பாஜக தலைவர்களைப் பற்றியும் பேசியுள்ளார்" என்றார்.

    • 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
    • லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்

    லவ் ஜிகாத் 

    இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

     

    ஆயுள் தண்டனை 

    அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

     

    தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது

    அசாம் 

    அசாமில் ஆட்சியில்  உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.

    லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

    • தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அங்கு வசித்து வந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர்.

    வங்காள தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நிலையில் நாட்டில் உள்ள நிலையின்மையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து இன்று தலைநகர் டாக்காவில் பெரிய அளவிலான பேரணி நடந்து வருகிறது. அந்நாட்டின் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனிசுக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மோடி அதையே வலியுறுத்தியுள்ளார். மேலும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கும் மக்கள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நிலைமை இப்படியாக இருக்க இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து ரக்ஷா தல் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசியாபாத் நகரில் உள்ள கவி நகரின் குல்தார் ரயில் நிலையத்தின் அருகே வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களது குடியிருப்பைச் சூறையாடி கபளீகரம் செய்துள்ளனர். தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     

    அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கிறது. இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து அவர்களின் உடைகளையும், உடைமைகளையும் தீவைத்து எரித்துள்ளனர்.  islamiyargalaiலத்திகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். இதே வாரத்தில் அப்பகுதியில் அந்த அமைப்பினர் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.  

     தாக்குதல் குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து இஸ்லாமிய குடும்பத்தினரை தேடி தாக்குதல் நடத்தினர். அந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்' என்று தெரிவித்தனர்.

    தற்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவ்வமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சவுத்ரி இந்த தாக்குதலுக்கு தாங்கள் முழுமையாக பொறுப்பேற்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    • லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில், இந்து பெண்ணை திருமணம் செய்யவிருந்த முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் பிபாரியாவைச் சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாலில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இந்து மகாசபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது

    நாகர்கோவில் :

    அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் நேற்று நாகர்கோவியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாகாகோவில் ஆசாரிபள்ளம் பழமையான காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசே தினமும் பூஜையோடு பராமரித்து வருகிறது. இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இது இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடமானதால் அரசே இந்த ஆலயத்தை பராமரித்து வருகிறது. சமீபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பிறகும் ஆலய பூஜைகள் தினசரி நடைபெற்று வருகிறது.

    எனவே அங்கு புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மருத்துவமனையில் ஏற்கனவே என்ன நடைபெற்று வருகிறதோ, அது தொடர வேண்டும். வேறு எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ஈரோடு:

    சினிமா சண்டை இயக்குனர் கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

    இந்த கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

    ஆனால் அதையும் மீறி இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காளை மாட்டு சிலை, மரப்பாலம் சோலார் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது.
    • இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. நேற்று 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது.

    விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட 15 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிந்ததும் அந்தந்த கோவில்களுக்கு பெருமாள்கள் சென்றடைந்தன.

    விழாவில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    ×