என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தொற்று"

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
    • அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    • கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
    • நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 7 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருவர், தருமபுரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
    • சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.

    இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

    அது மட்டுமல்ல இந்தியாவிலும் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நுழைந்து விட்டது.

    இந்த வைரஸ் இதுவரை 3 பேருக்கு வந்து விட்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இது பரவும் என்பதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்றாலும் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்த மீண்டும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில், தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் அதை பரவாமல் கட்டுப்படுத்த என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    கொரோனா பரவிய சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக அரசு சார்பில் விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
    • நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும்.

    பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
    • கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.

    • 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. 


    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

    கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் சேர்த்து நேற்று வரை மாநிலத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய பி.எப்.7 கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வழியாக சேலம் வருபவர்களை கண்காணிக்க, துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கொடுக்கும் விவரங்கள் பெற்று, அதனடிப்படையில் அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள் என்றனர்.

    • கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்படுகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடனே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளின்றி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.

    புத்தாண்டை வரவேற்கும் உலகின் முதல் முக்கிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். மேலும் அதன் சின்னமான ஓபரா ஹவுஸில் பொது கவுண்ட்டவுன் மற்றும் வானவேடிக்கைகள் உலகம் முழுவதும் பெரும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கும்.

    இதனால் சிட்னிக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிட்னியின் துறைமுகத்திற்கு வந்து வானவேடிக்கைகளைக் காண்பார் எகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி ஓபரா ஹவுஸின் நான்கு படகுகளில் இருந்து 2,000 வானவேடிக்கைகளும், சிட்னி துறைமுகப் பாலத்தில் முன்பை விட அதிகமான நிலைகளில் இருந்து 7,000 பட்டாசுகளும் ஏவப்பட்டு சிட்னி துறைமுகத்தை ஒளிரச் செய்யும்.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, நான்கு கட்டிடக் கூரைகளில் இருந்து வானவேடிக்கைகள் ஏவப்பட்டு, கண்கவர் நிகழ்ச்சியை வடிவமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    தொற்றுநோய்க்கு முன்னர், உலகின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்ததால், சிட்னி மைதானத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விழாக்களில் கலந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

    • சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்.

    ======================

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்று தெரிவித்திருந்தார்.

    அதன்படி, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    • குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
    • புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பெங்களூரு நகரில் 24 பேருக்கும், கோலாரில் 3 பேருக்கும், சித்ரதுர்கா, ஹாசன், மண்டியா, உடுப்பி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பெலகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது.

    சீனா, அமெரிக்காவில் வேகமாக பரவும் 'பி.எப்.-7' என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. அதாவது குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகத்திலும் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது 'எக்ஸ்.பி.பி.1.5' வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.

    இந்த தகவலை சுகாதாரத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
    • எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நியூயார்க்:

    மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ×