என் மலர்
நீங்கள் தேடியது "Attempted robbery"
- கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின்ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
- வங்கியின் சுவற்றில் சுத்தியலால் அடித்து துளையிட முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின்ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, 3 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கி திறக்கப்பட்டது.
காலையில் வங்கிக்கு வந்த ஊழியர், ஜெனரேட்டர் போடுவதற்காக பின்பக்கமாக சென்றார். அங்கு வங்கியின் சுவற்றில் சுத்தியலால் அடித்து துளையிட முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையறிந்த வங்கி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் வங்கியின் சுவற்றை துளையிட்டு, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரி–வித்தனர். அதன் பேரில், உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில், இரவு 11 மணியளவில் சுவற்றை அடிக்கும் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் இந்த சத்தமும் கேட்டதாக அவர்கள் கூறினர். வங்கியின் சுவர் இருக்கும் இடத்தில், தனியார் கார் ஷெட் ஒன்று உள்ளது. அங்கிருந்த சுவற்றைத் தான் மர்ம நபர்கள் துளையிட முயன்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை–யொட்டி வங்கி விடுமுறை பயன்படுத்தி, சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்ததுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.
எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது
- சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
பாளை ஐகிரவுண்டு அண்ணாநகர் பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்துக் கொண்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பொதுமக்கள் அச்சம்
- பணம், நகை இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிய கும்பல்
வேலூர்:
காட்பாடி தாராபட வீடு பாலாஜி நகர் பகுதியில் நேற்று மர்ம கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.அங்குள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் கும்பல் ஏமாற்றுத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்ட உரிமையாளர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியே செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்
அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோ மற்றும் வீட்டிலிருந்த பல்வேறு இடங்களில் நகை பணம் ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். வீட்டில் லாக்கர் ஒன்று உள்ளது. அதனை உடைக்க முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காட்பாடியில் உள்ள ஜேக்கப் பின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்களது உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் லாக்கரில் இருந்த நகை பணம் மற்றும் வீட்டின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த நகை கொள்ளையர்கள் கண்ணுக்கு படாததால் தப்பியுள்ளது.
இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜேக்கப் வீட்டில் லாக்கர் உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.
- மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
- பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே சின்னப்பே ட்டைதோப்புதெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி மின்னல்கண்ணி (வயது 60). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் இவரிடம் குடிக்க தண்ணீர்கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்கஉள்ள சென்றபோதுவீட்டின் உள்ளே இருந்த மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
மூதாட்டி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் மேற்படி நபரை பிடித்துபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையி ல்விழுப்பு ரம் அருகே விக்கிரவண்டி பழையகருவாச்சி, இந்திரா நகரைசேர்ந்த அமரன் (26)என்பது தெரியவந்தது. இவன்பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது. இதனைதொடர்ந்து இவனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர்
கோவை போத்தனூர் பொள்ளாச்சி ரோடு சிட்கோ பகுதியில் அரசு வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு ராஜ்குமார்(36) என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் காலை 9 மணிக்கு வங்கியை திறந்து அலுவல் பணிகளை கவனித்து விட்டு இரவு 10 மணிக்கு வங்கியை பூட்டி விட்டு செல்வது வழக்கம். இதேபோல் அவர் சம்பவத்தன்று இரவு வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை அந்த பகுதி மக்கள் அவ்வழியாக நடந்து சென்றனர். அப்போது வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து வங்கி மேலாளர் ராஜ்குமார் மற்றும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வங்கி மேலாளர் வந்தனர்.மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசார ணையில், நள்ளிரவு நேரத்தில் வங்கியின் அருகே சில மர்மநபர்கள் சுற்றி திரிந்துள்ளனர்.ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா? என பார்த்து விட்டு, வங்கியின் அருகே சென்றனர்.
பின்னர் மர்மநபர்கள் வங்கியின் ஜன்னல் கம்பியை ஆக்ஷா பிளேடால் அறுத்து உள்ளே செல்வதற்கு முயன்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக திடீரென வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் மாட்டி கொள்வோம் என நினைத்து கொள்ளை முயற்சியை பாதியில் விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பூட்டை உடைத்து துணிகரம்
- பொருட்கள் இல்லாததால் ஜெர்கினை எடுத்துச் சென்ற கும்பல்
செங்கம்:
செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வருகிறார்.
இவர் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலைக்கு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அருணகிரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து உள்ளனர். அதில் நகை பணம் பொருட்கள் இல்லை. ஆனால் ஜெர்கின் மட்டும் இருந்தது.
அதனை விட்டு வைக்காமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்று மர்மக்கொம்பன் அணிந்து வந்த பழைய ஜெர்கினை விட்டு விட்டு புதிய ஜெர்கினை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
- அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளனர்
- இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.
இதையடுத்து கொள்ளை யர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.
இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார்.
- அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் பூஜை செய்வதற்கு அர்ச்சகர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கீழே கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அர்ச்சகர் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பார்த்த போது பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் இருக்கும் அறையின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் , ஏதேனும் சாமி சிலை மற்றும் பொருட்கள் திருடு சென்று உள்ளதா? என்பதை பார்வை யிட்டனர் அப்போது எந்த பொருட்களும் திருடு போகவில்லை.
இந்த நிலையில் கோவிலில் 3-வது முறையாக மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலையில் அணிந்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த முறை மீண்டும் பூட்டை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன.
- கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
காகாபாளையம்:
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன. இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் தொடர் திருட்டு மர்மமாகவே நடைபெற்று வருகிறது .இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இரண்டு முறை திருட முயற்சி நடந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடு, கடைகளில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் நிலையம் மிக அருகாமையில் இருந்தும் திருடர்களின் துணிச்சலால் பொதுமக்கள் பயந்து போய் உள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து திருட்டு மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் காசிராஜ்(67). இவருக்கு குபேரன்நகரில் சொந்தவீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் சிவகாசி வடமலாபுரம் பகுதிைய சேர்ந்த நாச்சியார்கண்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
மேல்தளத்தில் காசிராஜ் அவ்வப்போது தங்குவதற்காக சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
மேல்தளத்திலும் இதேபோல் பொருட்கள் சிதறிகிடந்தன. ஆனால் வீட்டில் எந்த பொருளும் திருடுபோகவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை, பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.