search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம சாவு"

    • நண்பர்கள் அவரை எழுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த மோகன் என்பவரது மகன் யுவராஜா (வயது 21). இவர் தனது நண்பர்கள் பூபதி, கணேஷ்குமார், ஜெகதீஷ் மற்றும் சிலருடன் தொரப்பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். இரவு 11 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசினார். பின்னர் விடுதியில் தூங்கினார். நேற்று காலையில் நண்பர்கள் அவரை எழுப்பினர். ஆனால், அவர் எழ வில்லை. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மசினகுடி போலீசில் தந்தை மோகன் புகார் செய்தார். இதன் பேரில் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோமதி என்பவருக்கும், அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
    • இந்த நிலையில் கோமதி அழகுசமுத்திரத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள திண்டமங்கலம், பாரதிநகர் பகுதியைசேர்ந்தவர் சின்னப்பன் (வயது 57).

    இவருடைய மகள் கோமதி என்பவருக்கும், அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதுவரை குழந்தைகள் இல்லை என்பதால் கணவர் மற்றும் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கோமதியிடம் தகராறு செய்து வந்தனர்.

    மேலும் கணவர் சுரேஷ், பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வரச்சொல்லி அடிக்கடி கோமதியை தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோமதி அழகுசமுத்திரத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கோமதியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று மகள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்றும் சாவில் சந்தேகம் உள்ளதா–கவும் கூறி தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் விசா–ரணை நடத்தி வருகிறார். கோமதிக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆவதால் காவல்துணை கண்காணிப்பாளர் சங்கீதா, மேட்டூர் வருவாய் கோட்டாச்சியர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள தொட்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார்.

    இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

    குமாரின் மனைவி குமாரசாமிபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொன்று சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இறந்தது பெண் குழந்தை என்பதால் இந்த திடீர் மரணம் குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், எப்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ஹிட்டாச்சி வண்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி.

    இந்நிலையில் ராஜேஷ் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த புத்தி கட்டையில் உள்ள வெங்கடாசலபதி என்பவர் நிலத்தை குத்தகைக்கு ஒட்டி வரும் பூமியை சமப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். சம்பவத்தன்று மதியம் ராஜேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி ஜோதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது ராஜேஷின் வலது கையில் காயமும், மணிக்கட்டு பகுதியில் காயமும், கழுத்து கீழ்ப்பகுதியில் காயமும் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அவர் தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதா கவும், விசாரித்து நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்
    • நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மகள் காவியா (வயது 13). இவரது தாயார் வரலட்சுமி இறந்து விட்டார். எனவே காவியா தனது அத்தை ஊரான விழுப்புரம் அருகே குன்னம் கிராமத்தில் தங்கி 7-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பிரபு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த காவியா தூக்கில் பிணமாக தொங்கினார். நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே ஜன்னல் வழியே எட்டிபார்த்தபோது காவியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகு மார் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபுவிடம் விசாரித்தபோது தனது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவி த்தார். ஆனால் காவியா வின் தலையில் காயம் உள்ளது. எனவே இந்த சாவு குறித்து போலீசார் சந்தேகிக்கி றார்கள். பிரேத பரிசேதனை முடிவில் காவியா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

    • இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம், ஜன.3

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாங்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் விஸ்வநாதன் (வயது 36).

    இவர் தக்காளி மார்க்கெட்டில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கவிதா ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தில் உள்ள விஸ்வநாதனின் நண்பரான பெரியண்ணன்(33) என்பவரது வீட்டிற்குச் சென்ற விஸ்வநாதன் அங்கு மின்விசிறி கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டிக்கொண்டார்.

    அந்த வீட்டிலிருந்த குழந்தைகள் தகவல் தெரிவித்ததன் பேரில் விஸ்வநாதனை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நண்பர் வீட்டில் வேன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓச்சேரி அருகே நடந்தது
    • கொலையா? விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்லின் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு அடைந்தனர். பின்னர் ஒச்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிதந்து கிடந்த பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதிய தெரு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றினர்.

    தருமபுரி,

    தருமபுரி மா வட்டம், இண்டூர் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 25).

    நவீன் குமாருக்கு இதய நோய் இருந்ததால் சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நவீன்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து நவீன் குமார் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்நிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக நேற்று கிருஷ்ணன் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரிகா (வயது 19) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

    இந்த நிலையில் திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு பகுதியில் கடந்த வாரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சந்திரிகா சென்றார். அங்கு சந்திரிகா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சந்திரிகா மர்மமான முறையில் குரிசிலாபட்டு கிராமத்தில் இறந்து கிடந்தார்.

    சந்திரிகா இறந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து டப்பா இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சந்திரிகா இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விரைந்து வந்த போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரிகா இறந்த தகவல் அறிந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சந்திரிகாவின் உறவினர்களை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

    சந்திரிகாவின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் உங்கள் வீட்டிற்கு வந்த சந்திரிகா எப்படி இறந்தார் என சரமாரியாக கேள்வி கேட்டு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குரிசிலாப்பட்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மறுவாழ்வு இல்லம் அருகே பிணம் மீட்பு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள மல்லவாடி சொரந்தை மறுவாழ்வு இல்லம் அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிணமாக கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு மாணிக்கம் விநாயகர் கோவில் தெருவில் இன்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வட மாநில வாலிபர் யார்? எதற்காக காட்பாடி வந்திருந்தார் என்பது தெரியவில்லை. அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து கிடந்த வட மாநில வாலிபர் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.

    அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×