என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical"

    • இலவச புற்றுநோய் கண்டறியும் முகாமினை யூனியன் சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.
    • முகாமில் மேமோகிராம், எக்கோ கார்டியோகிராம், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    குரும்பூர்:

    நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனை, மதுரை குரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நாலுமா வடியில் நேற்று நடந்தது.

    முகாமுக்கு புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவ மனையின் இயக்குநர் டாக்டர் அன்புராஜன் தலை மை தாங்கினார். ஆழ்வை வட்டார மருத்துவ அலுவலர் பாத்திபன் முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வை. யூனியன் சேர்மன் ஜனகர் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    முகாமில் மேமோகிராம், ரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம், பிஏபிசமீர், எப்என்ஏசி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் நாலுமாவடி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முகாம் இன்றும் நடக்கிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன்காப்போம் அரசு சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமைதாங்கினார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். சுகாதாரஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவர்கள் அருண்கோபி, ஹரிபிரசாத், கிஷாமகேஷ், செல்வி உள்பட 8 டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், சுகாதாரஆய்வாளர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பிரபாகரன், இனியகுமார், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கண்ணன் நன்றி கூறினார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் தனியார் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பேர்ட்ஸ் மற்றும் முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச இருதயம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை மனநல மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாமை கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.

    ரத்த அழுத்தம், சர்க்கரை, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இருதய சிகிச்சை டாக்டர் நிஜாமுதீன்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பெர்னீஷ் ஸ்டெல்லா, பொது மருத்துவர் ராஜா,மனநல டாக்டர் அஸ்மா பாட்ஷா, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமிது இப்ராஹிம், தொழிலதிபர் பி.ஆர்.எல் சதக் அப்துல் காதர் ஏற்பாட்டில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் சேக் உசைன், கூட்டமைப்பு துணைச் செயலாளர் சீனி இப்ராகிம், அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொருளாளர் பேராசிரியர் ஆசிப், நடுத்தெரு சுபைர், புதுத்தெரு சுபைர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், அப்பா மெடிக்கல் சுந்தர், சதக் ஜாரியா பள்ளி தாளாளர் முகமது ஜகரியா, நுகர்வோர் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஓ.எஸ்.அபுதாகீர் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    • முகாமில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நாடார் உறவின் முறை சங்க பொது நல மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டணமில்லா பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

    முகாமிற்கு நாடார் சங்க பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் தலைமை தாங்கினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் மற்றும் பொதுநல மருத்துவமனை செயலாளர் எம்டிஎம்.தங்கராஜ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    முகாமில் தோல் மருத்துவர் சாரங்கபாணி, மகப்பேறு சிறப்பு மருத்துவர் கமலா சுதன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஜெய செல்வராணி, எலும்பு முறிவு மூட்டு நோய் சிறப்பு மருத்துவர் பாலகிருஷ்ணன், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன், உட்பட 10-க்கும் மேற்பட்ட சேவை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேதுரத்தினம், ராஜவேல், ராஜு, கோபால்சாமி, செல்வமோகன், தயாளமோகன், ஜெயபால், ரத்தினகுமார், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித், மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

    விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    பொதுமக்களின் உடல் நலனை பேணி காத்திடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தாய்மார்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பேருக்கு மருந்து பெட்ட கங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

    கீழக்கரை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள டி.மாரியூர் கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் 32 சிறப்பு மருத்துவர்கள், 167 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோ தனை இலவசமாக வழங்கப் படுகிறது.

    கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி காப்பீடு அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 20 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொண்ட தொகுப்புகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்சு, காதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.

    • சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
    • அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ‌ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

    சேலம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

    முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
    • 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.

    இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×