என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Start"

    • மதுரையில் 34 மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் இணைய தளம் மூலம் ஆதார் எண்ணை மின் இணைப்பு நம்பருடன் இணைத்தனர். ஒரே நேரத்தில் பெரும்பா லானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்றதால், மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் முடங்கியது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதில் 'பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில அளவில் 2 ஆயிரத்து 811 அலுவலங்களிலும் இன்று(28-ந் தேதி) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 மின்வாரிய அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. பண்டிகை தினங்கள் தவிர ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த முகாம் செயல்படும்.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

    மதுரை அரசரடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று ஆதார் எண்ணை இணைப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆதார் எண்ணை இணைக்கும் போது தற்போதைய மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைக்கும். பெயர் மாற்றமும் செய்ய இயலும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் வராது.

    அதேபோல கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட உள்ளது.
    • அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

    அகழாய்வில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக் காய், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், அவைகள் வெளி நாடுகளில் வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் வெளி நாடுகளுடன் கொண்டுள்ள வணிக தொடர்பை அறிய முடியும்.

    • செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங் களுக்கு கூடுதலாக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு மார்க்கத்திலும் 3 நாட்கள் இந்த ரெயில் சேவை வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தென்னக ரெயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறும்போது, நாட்டின் அதிவேக ரெயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் ரெயிலை கோவை-சென்னை இடையே இயக்குவதற்கு தென்னக ரெயில்வே பரிசீலித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர்கேஜ் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் 3 முறை இயக்கக்கூடிய ரெயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த 3 ரெயில் சேவைகளையும் அடுத்த மாதம் 8-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வே துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றனர்.

    • கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
    • கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    தமிழக அளவில் முதன்முறையாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கால்பந்து பள்ளியுடன் இணைந்து கல்வி சர்வதேச பள்ளி கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குநர் சங்கிலிகாளை முன்னிலை வகித்தார். விளையாட்டு மேனேஜர் விவீதா வரவேற்றார். லதா விழாவை தொகுத்து வழங்கினார். பைசுங் பூட்டியா கால்பந்து பயிற்சிப் பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ராதாகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு கால்பந்து துறையின் வளர்ச்சி மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

    அவர் கூறுகையில், மதுரையில் உள்ள இளம் கால்பந்து ஆர்வலர்கள் கால்பந்தில் திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் திறம்பட செயலாற்றி பரிசுகள் பெற முடியும் என்றார். கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
    • அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழ்–நாட்–டில் உள்ள 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் உள்ள பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் சேரு–வ–தற்–கான மாண–வர் சேர்க்கை கலந்–தாய்–வுக்கு விண்–ணப்–பிக்க அறி–வு–றுத்–தப்–பட்–டது. அதன்–படி, 164 கல்–லூ–ரி–களில் பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் இருக்–கும் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்–பங்–கள் பெறப்–பட்டு இருந்–தன.

    விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அத–னைத் தொடர்ந்து முதல்–கட்ட கலந்–தாய்வு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்–தது.

    முதல்–கட்ட கலந்–தாய்வு நிறைவு பெற்ற நிலை–யில், ஒரு நாள் இடை–வெ–ளிக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி (நேற்று) வரை 2-ம் கட்ட கலந்–தாய்வு நடத்தி முடிக்–கப்–பட்டு இருக்–கிறது.

    முத–லாம் ஆண்டு வகுப்–பு–கள்

    அந்த வகை–யில் 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் சேரு–வ–தற்கு நடத்–தப்–பட்ட இந்த 2 கட்ட கலந்–தாய்வு முடி–வில், 31 ஆயி–ரத்து 621 மாண–வர்–கள், 44 ஆயி–ரத்து 190 மாண–வி–கள் என மொத்–தம் 75 ஆயி–ரத்து 811 பேர் இடங்–களை தேர்வு செய்து இருக்–கின்–ற–னர். இவர்–களில் அரசு பள்ளி மாண–வி–கள் 21 ஆயி–ரம் பேர் வரு–கின்–ற–னர். அவர்–க–ளுக்கு அர–சின் புது–மைப் பெண் திட்–டத்–தின் கீழ் ஒவ்–வொரு மாத–மும் ரூ.1,000 நிதி–யு–தவி கிடைக்–கும்.

    மொத்–தம் உள்ள 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–களில், 75 ஆயி–ரத்து 811 இடங்–கள் நிரம்–பி–யுள்ள நிலை–யில், மீத–முள்ள இடங்–கள் நிரம்–பும் வரை கலந்–தாய்வு நடத்–தப்–படும் என கல்–லூரி கல்வி இயக்–க–கம் அறி–வித்–துள்–ளது.

    இந்த நிலை–யில் கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து வருகிறார்கள்.

    • அரியலூரில் ஏலாக்குறிச்சி வரையிலான புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிப்பட்டாக்காடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். இந்த நகர பஸ் தடம் எண் 22ஏ அரியலூர் - ஏலாக்குறிச்சி வழிதடத்தில் வல்லாகுளம், சிலுப்பனூர் இடையே ஆண்டிப்பட்டாக்காடு பிரிவு சாலையிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தினை தொட்டு இயக்கப்படும். இந்த பஸ் காலை 7.50 மணிக்கு ஏலாக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு அரியலூரை சென்றடையும். மீண்டும் இந்த பஸ் மாலை 5.25 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு ஏலாக்குறிச்சியை சென்றடையும். இதன் மூலம் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பயனடைவார்கள்

    • கீழக்கரையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை உணவு விரிவாக்க திட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா திட்டத்தை தொடங்கி வைத்தார். மறவர் தெரு, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை செஹானஸ் ஆபிதா தொடங்கி வைத்தார்.

    நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாதுஷா, சக்கினா பேகம், காயத்ரி, ஜெயலெட்சுமி, சூர்ய கலா, சித்திக், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, கீழக்கரை நகர் தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர்
    • கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களின் தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்களுக்கு கடந்த 19-ந் தேதி முதல் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து குறுந்தகவல்கள் வர ஆரம்பித்து உள்ளது.

    தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இ-சேவை மூலமாக மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் கட்டணம் செலுத்த வேண் டும்.

    ஆனால் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீட்டுக்கு கட்டணம் இல்லாமல் இலசவமாக மேல்முறையீடு செய்யலாம்.

    விண்ணப்பதாரர்களுக்கு உதவ கோவை கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. இந்த உதவி மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களை தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    • காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா
    • தசரா குழு பக்தர்கள் பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது

    கோவை,

    கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதி முத்தாரம்மன் நகரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 23 ஆண்டுகளை கடந்து 24-ம் ஆண்டாக இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு காளிபூஜையுடன் தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு 4 கால பூஜை நடைபெற உள்ளது. மேலும் கோவை தசரா குழு பக்தர்கள் பல, பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவில் தென்காசி மாவட்டம் காசிநாதபுரம் தசரா நாயகி மியுசிக் நாசிக்டோல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் மதுரை தங்கவேல் குழுவினரின் தசரா சிறப்பு மேளமும், விருதுநகர் காரியாப்பட்டி தங்கம் கரகாட்டக்கலை குழுவினரின் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முத்தாரம்மன் அருளை பெற்று செல்லுமாறு கோவை தசரா டிரஸ்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

    • துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது.
    • விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது.

    சென்னை:

    துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது.

    சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 7 மையங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 7 மையங்களில் இன்று தொடங்கியது
    நெல்லை:

     எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. 

    இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.  மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 


    நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.  விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 மையங்களும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் நாங்குநேரியில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளிகளில் 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.  

    இந்தப்பணிகளில் முதன்மை தேர்வானர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், உதவி தேர்வானர்கள் என சுமார் 900 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


    விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி 8-ந் தேதி தொடங்க உள்ளது. 


    தென்காசி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக  தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அதுபோல பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தென்காசி தனியார் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியில் 910 ஆசிரியர்கள், 42 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×