என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழா"

    • வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து கண்டு ரசித்து, சாமி தரிசனம் செய்தனர்.
    • இரவு 12- மணி அளவில் வீரபத்திர சாமி பலகையை தலை மேல் வைத்துக் கொண்டு சாமி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரை சுற்றியுள்ள கிராமங்களில் 500 -க்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த சமூக மக்களின் குல தெய்வமான வீரபத்திர சாமிக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் தை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் வெளியூரில் உள்ள தங்களது சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து, வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சாமியை வழிபட்டனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து வான வேடிக்கையுடன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 7 ஊரை சேர்ந்த கிராம மக்கள் சாமிகாரம் எடுத்து கொண்டு மேள தாளத்துடன், ஊர்லவலமாக கோவிலுக்கு வந்தனர்.

    14- வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இவ்விழாவில் பெங்களூர், சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள குரும்பர் இனத்தை சேர்ந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து கண்டு ரசித்து, சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 12- மணி அளவில் வீரபத்திர சாமி பலகையை தலை மேல் வைத்துக் கொண்டு சாமி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை கொட்டும் பனியையும் பாராமல் ஏராளமான கிராம மக்கள் பக்தியுடன் பார்த்து ரசித்தனர். இரவு முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை குரும்ப கவுண்டர் அன்பழகன் செய்திருந்தார்.

    • கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.

    இதன்படி, நேற்று அய்யனாராப்பன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு பச்சை பூஜை நடைபெறுகிறது. இதில் சேலம், எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா். 

    • பெரியாண்டவர் , பொன்னியம்மாள் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஓலப்பட்டியில் பெரியாண்டவர் - பொன்னியம்மாள் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி கோவில் பூசாரிகள் அழைத்தலும், சொர்ணம்பட்டியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சாமி சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து கம்பைநல்லூர் லட்சுமி நாராயண சாமி கோவிலில் விளக்கேற்றி விழா தொடங்கியது. பின்னர் பெரியாண்டவர்-பொன்னியம்மாள் சாமிக்கு சீர் கொடுத்தலும், முப்பூஜையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

    இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டில் கடந்த 27ம் தேதி பிள்ளையாருக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து விழா தொடங்கியது. 2-ம் நாளான சனிக்கிழமை காமாட்சி அம்மன் கோயில், தர்மராஜா கோயிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். அப்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இதனை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து அம்மனுக்கு படைத்தனர்.

    சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.
    • பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 6- ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சி, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து, கோவில் தர்மகர்த்தா பாண்டியன் தலைமையில் ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர். மேலும், பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.
    • விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே,பேரிகை சாலையில் குடிசெட்லு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா, நேற்று சிறப்பாக நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ந்தேதி, பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்கார சேவை, யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமி எழுந்தருளினார். அப்போது பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்று பகுதி முழுக்கம் எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில், ஓசூர், பாகலூர் பேரிகை மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும், அத்திப்பள்ளி, சந்தாபுரா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினார்கள்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் நீலாமணி (வயது19). இவர் தைப்பூசத்தை முன்னிட்டு அங்குள்ள பேசும் பழனியாண்டவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றார்.

    திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த நகையை யாரோ பறிப்பதுபோல உணரவே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அபிராமி (35) என தெரிய வந்தது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களுக்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

    அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • மறுநாள் காலை 221 ஆடுகள் வெட்டப்பட்டு 2,275 குடும்பங்களுக்கும் கறி பங்கிட்டு வழங்கப்பட்டது.
    • இந்த கறியை பெண்கள் உட்பட குடும்பத்தில் இருப்போர் அனைவரும் சாப்பிடுவார்கள்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம்,அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பாக ஆண்டு தோறும் தேவாதியம்மன் திருவிழா கொண்டாடப்படும். இந்த விழாவனது ஆண்டுதோறும் தை மாதத்தில் நடத்தப்படும்.

    வியாபார மேம்பாடு, குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் ஆகியவற்றை வேண்டி நடத்தப்படும் தேவாதியம்மன் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

    பெரும்பாலோனோர் ஜவுளி சார்ந்த தொழிலை செய்த வருகின்றனர்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

    எங்கிருந்தாலும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.

    அரூரில் காமாட்சியம்மன் ஆலயத்தின் பின்புறம் உள்ள தேவாதியம்மன் தோட்டத்தில் ஆவாரம் செடியின் அடியில் நடத்தப்பட்ட விழாவில் காலை முதல் நாள் 22 அம்மன் குட்டிகள் வெட்டப்பட்டது.அதன் ரத்தத்தை பிரசாதமாக ஆண்கள் அனைவரும் நெற்றியில் வைத்து கொண்டனர். பின்னர் பொங்கல், பொறி கடலை அனைவ ருக்கும் கொடுக்கப்பட்டது. மாலை 750 ஆண்களுக்கு கறி சாப்பாடு போடப்பட்டது.

    மறுநாள் காலை 221 ஆடுகள் வெட்டப்பட்டு 2,275 குடும்பங்களுக்கும் கறி பங்கிட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் வெங்கடேசன், எச்சி வெங்கடேசன், சேட்டு, மதன், செந்தில்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த கறியை பெண்கள் உட்பட குடும்பத்தில் இருப்போர் அனைவரும் சாப்பிடுவார்கள்.

    தெலுங்கு செட்டியார்கள் வசிக்கும் படப்பள்ளி, வெங்கட்டம்பட்டி, பருகூர், கப்பல்வாடி, பறையப்பட்டி புதூர் பெருகோபனஅள்ளி, தாச ரஅள்ளி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் தேவாதியம்மன் விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. 

    • பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது.
    • விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.

    தேன்கனிக்கோட்டை,

    அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி காவேரி கரையோரம் உள்ள தப்பகூளி பசுவேஸ்வர சாமி கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தினரால் பல்லக்கு உற்வம் நடைபெற்றது. நேற்று காலை பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது. விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.

    விழாவில் மஞ்சுகொண்டப்பள்ளி, கோட்டையூர்,உரிகம், அஞ்செட்டி, தக்கட்டி, மாடக்கல் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்,

    • முப்பூசை செய்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசாப்பு குண்டு முனியப்பன் கோவிலில் முப்பூசை செய்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இக்கோவிலில் முப்பூசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைப்பெறுவது வழக்கம். இதனையடுத்து விழா கடந்த 13- ம் தேதி கங்கா பூஜை, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை முதலே ஸ்ரீசாப்பு குண்டு முனியப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் முப்பூசை செய்து ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டும், மாவிளக்கு தட்டு எடுத்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது.
    • இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.

     காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பன்னீர்செல்வம் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

    நாளை மகா சிவராத்திரி முன்னிட்டு அன்று இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் இரவு விரதம் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அங்காள பரமேஸ்வரி கோவில் தங்களது நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், அணிந்து ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக வந்து காவேரிப்பட்டணம் சுடுகாட்டில் நேர்த்திக்கடனாக வலம் வருவர்.

    அங்காளம்மன் திருத்தேர் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து சுடுகாடு சென்றடையும். அப்பொழுது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வழியெங்கும் அம்மன் தேர் மீது உப்பு, முத்துக்கொட்டைகளை வீசுவார்கள்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் அம்மனை தரிசிக்க காவேரிப்பட்டணம் ஆண்டுதோறும் வருவார்கள். அன்று சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு மேல் காவேரிப்பட்டணத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை அடுத்து அன்று இரவு சுடுகாட்டில் திருத்தேரில் அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டு தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரும்போது ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    அடுத்த நாள் 20-ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஜெத்து, பாபி உற்சவம் முக்கிய வீதி வழியாக நடைபெறும் 21-ம் தேதி சாமி தென்பெண்ணை ஆற்றில் இருந்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்து அக்னிகுண்டம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    22 -ம் தேதி காலை மகா அபிஷேகம் இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்

    23-ம் தேதி காலை சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் நீராட்டு நடைபெறும் இரவு நகர் முழுவதும் சுவாமி பல்லக்கு உற்சவம் நடைபெறும். 24-ம் தேதி காலை கொடி இறக்கல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.

    ×