என் மலர்
நீங்கள் தேடியது "MLA"
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்.
- இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது.
ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், தற்போது உள்ள நிதியினை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை; அதிலும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தி தர வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது. ஜிஎஸ்டியால் தொகுதி மேம்பாட்டு நிதி பாதிக்கப்படுகிறது என்பதால் அதை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
- இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆக உயரும்.
- முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாக உயரும்
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும்.
அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.
- பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
- நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்
பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.
பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.
"பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.
மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.
நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.
நெல்லை,அக்.27-
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணார் பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை. இந்தியாவில் நேரு ஆட்சி காலத்தில் ஏ,பி,சி என 3 வகைகளாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதில் சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தாய் மொழி கட்டாயம் எனவும், கூடுதலாக இந்தி மொழியை பயிற்றுவிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறி உள்ளது.
ஆனால் தாய் மொழி கட்டாயம் என்பதை தி.மு.க. மறைத்துவிட்டு, மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மக்களிடம் ஏமாற்று வேலை நடத்துகிறார்கள். மேலும் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை திசை திருப்பும் முயற்சியாகவே தி.மு.க. இளைஞரணி மூலம் இந்தி திணிப்பு எனக்கூறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளது. தி.மு.க. தமிழுக்காக வோ, தமிழர்களுக்காகவோ பாடுபடவில்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிப்பதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தேசிய செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி, மாவட்ட பொருளாளர் பண்ணை பாலகிருஷ்ணன், நிர்வாகி தமிழ்ச்செல்வன், வேல் ஆறுமுகம், பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
- எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.
நாக்பூர்:
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.
இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.
நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
- ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
- அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜபாளையம் நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
அதில் ராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை தற்காலிகமாக (பேட்ச்ஒர்க்) சீரமைக்கப்பட்டது .
இந்த சாலையில் விரை வில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக அமிழ் ஓட்டல் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்.
- எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
- மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார்
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணியின் சார்பாக தாய்மொழி தமிழை காக்கும் உரிமைப் போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் சிறுபூலுவபட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்,வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஏம்.எம்.சதீஷ் தலைமை தாங்கினார்.
மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் வேலம்பாளையம் பகுதி செயலாளர் சுப்பிரமணியம்,25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் மாரிமுத்து ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,மாவட்ட பொருளாளர்கே.ஜி.கிஷோர் குமார், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் ,அன்பகம் திருப்பதி, கே பி ஜி .மகேஸ்ராம், ஹரிஹரசுதன், எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தண்ணீர் பந்தல் தனபால், நிர்வாகிகள் கண்ணபிரான் ,ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,
பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.
- விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.