என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்"
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
- ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.
இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.
பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.
இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.
இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு :-
காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
- சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் சென்றது.
திருத்துறைப்பூண்டி,:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் மாவட்டம், அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது.
இதனை அடுத்து அகஸ்தியம்பள்ளியில் இருந்து வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குறவப்புலம், கரியாபட்டினம் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.
சனி, ஞாயிற்று கிழமைகளை தவிர, மற்ற 5 நாட்களிலும் இந்த ரெயில் சேவை காலை, மாலை என 2 வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதையின் தண்டவா ளத்தின் உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது.
முன்னதாக காலை 10.45 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் சென்ற ரெயில் காலை 11.15 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடைந்தது. இந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர்.
- ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
- கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.
அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.
மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.
இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.
மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.
காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
கோவை:
கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்பட 8 ரெயில்கள், வாரந்தோறும் 11 ரெயில்கள் என 20 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.
கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக கோவையில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர்.
தற்போது கோடைவிடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் குறிப்பாக ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் குடும்பம், குடும்பமாக பயணிக்கின்றனர்.
சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற 10-க்கும் மேற்பட்ட ரெயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.
அதன்படி சிலர், முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
முன்பதிவில்லா பெட்டிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது. ரெயிலில் உள்ள இருக்கைகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுவும் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடிக்க ஓடினர். பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
ரெயிலில் உள்ள கீழ் இருக்கைகள் நிரம்பியதால் பலர் மேலே உள்ள இருக்கைகளிலும், நடந்து செல்லும் பாதைகளிலும் அமர்ந்து கொண்டனர். இன்னும் பலர் நின்று கொண்டும் பயணித்ததை பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் ஒரு மற்றொரு இடத்திற்கு நகர முடியாத படி அனைத்து இடங்களிலும் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்தனர். நிற்க கூட இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.
இதற்கிடையே கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காத்திருப்பு பட்டியலில் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். மேலும் தட்கல் டிக்கெட் திறந்த ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.
இதையடுத்து குழந்தைகளுடன் பலர் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணம் செய்தனர். இன்றும், நாளையும் இன்னும் அதிகளவிலான பயணிகள் ரெயில் மூலம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால பலர் 10-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சொந்த ஊர் செல்ல பலர் இருப்பதால் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் அல்லது முன்பதிவு இல்லாத ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டபம்:
தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணிகத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. 1964-ம் ஆண்டு பாம்பன் தீவை பெரும் புயல் தாக்கியது. அப்போது இந்த பாலம் சேதம் அடைந்து, விரிவான பழுது பார்க்கும் பணிகள் நடந்தது.
இதற்கிடையே கடந்த 1988-ல் பாம்பன் ரெயில் பாலத்துக்கு இணையான ஒரு சாலைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதுவரை இந்த ரெயில் பாலம் மட்டுமே மண்டபத்திற்கும் ராமேசுவரத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. தற்போது 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழுந்து பலத்த சேதம் அடைந்தது.
மேலும் இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாலும் பழைய பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 2019, ஆகஸ்டு 11-ந்தேதி பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. அப்போது 2021, செப்டம்பர் மாதத்திற்குள் புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயின் பொறியியல் பிரிவான ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்றன.
இந்தநிலையில் பழைய பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2023 டிசம்பர் மாதம் முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கட்டப்படும் புதிய பாம்பன் ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 101 தூண்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரெயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளது.
தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்தத் தூண்கள் இடையே ஒரு வழித்தடத்துக்கான 60 அடி நீளம் கொண்ட 100 இணைப்பு கர்டர்களில் மண்டபம் பகுதியில் தூக்குப் பாலம் வரையிலுமான 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. அவை 18.3 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய ரெயில் பாலத்தை விட சுமார் 1½ (ஒன்றரை) மீட்டர் உயரம் அதிகம் என்பதால், பாம்பன் பக்க நுழைவு பகுதியில் இருந்த தண்டவாளங்களும், சிலீப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு இருப்புப்பாதையை உயரமாக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் ரெயில் பாலத்துக்கு கீழ் பெரிய அளவிலான கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல முடியும்.
பாம்பன் சாலை பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் அருகில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம் இணைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ராமேசுவரம்-மண்ட பம் இடையேயான ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
- சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.