என் மலர்
நீங்கள் தேடியது "tag 94484"
- காவிரி தொடா்பான எந்த சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
- ஒரு வேளை அந்த ஆணைய கூட்டம் நடந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஜூன் 17- ஆம் தேதி கூட்ட உள்ளதாகவும், அதில் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் உறுதிபடக் கூறியுள்ளாா்.ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, விவாதிக்கப் பொருள் நிரலில் சோ்த்த போதெல்லாம் தமிழக அரசுப் பிரதிநிதிகள் அதை எதிா்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது.
இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சாா்பில் இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடா்பானஎந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணைய த்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் அக்கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஹல்தா் கூறியுள்ளாா்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் உள்ளபடி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீா்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை.
தமிழக அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உரியவாறு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி ஜூன் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும். புதுச்சேரியும், கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டு கோள் வைக்க வேண்டும்.
இப்போதுள்ளகாவிரி ஆணையத்தைக் கலைத்து விட்டு, நடுநிலை தவறாத அலுவலா் தலைமையில், காவிரி நீரைப் பிரித்து வழங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும் வெகுமக்கள் போராட்டத்துக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்று மதத்தினர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதாக போராட்டம்
- எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ உள்பட 725 பா.ஜனதாவினர் மீது வழக்கு
கன்னியாகுமரி:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 12 கோவில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தங்கத்தேர் பவனி மற்றும் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
கோவில் நிர்வாக மண்டல துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், ஆய்வாளர் செல்வி, மராமத்து பொறியாளர்அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் மற்றும் கோவில் பணியாளர்கள், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபர்ட் கிளாரன்ஸ், ஜெய சந்திரன், முருகன்உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
முன்னதாக திருவிளக்கு பூஜை விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்வதாக அறிவிக்க ப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கோவில் ஆகம விதிமுறைகளை மீறியும், இந்து ஆச்சாரங்களுக்கு முரணாகவும் மாற்று மதத்தினர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள் மண்டைக்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து லட்சுமிபுரம், மண்டைக்காடு சந்திப்புகளில் பேரி கார்டு கள் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் பல ப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை மீறி மண்டைக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் இந்து சேவா சங்க நிர்வாகிகள் ரெத்னபாண்டியன், ஸ்ரீ பத்மநாபன் உள்பட பலர் கோவில் முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.
பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் இருந்து மண்டைக்காட்டுக்கு காரில் புறப்பட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வை, டெரிக் சந்திப்பு பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இரணியல் அருகே மேக்கோடுபகுதியில் வந்த மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டவர்களை இரணியல் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று குருந்தன்கோட்டில் இருந்து 3 வேன்களில் வந்த பா. ஜனதாவினரை திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் பரமேசுவரன் தலைமையில் அவர்கள் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வக்கீல் சிவகுமார் உட்பட 94 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் லட்சுமி புரம், திங்கள்நகர், நட்டாலம், தக்கலை, தென்தாமரை குளம் ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்க ளையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் போராட்டம் நடத்தியதாக 725 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் குமாரகோவில் பகுதியில் நடந்த முருகன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. தற்போது 2-வது முறை யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் படுத்து உறங்கினர்.
- பெண்களுக்கு கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் உள்ளது.
என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போல சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவு அருந்தும் அறை,
பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்க செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சுமுத்து முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று இரவு தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு சாலையில் படுத்து உறங்கினர். இந்நிலையில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையினை வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாபநாசம் அருகே உத்தாணி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வருகிற 21-ந்தேதி மதியம் 12 மணி அளவில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலை நிர்வாகம், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களின் அழைத்து தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
- அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர்.
- ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாட்னா:
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை 'அக்னிபாத்' என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். 17 வயது முடிந்து 6 மாதம் ஆனவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்ட வர்கள் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு சேர்க்கப்படுவார்கள்.
அதன் பின்னர் பெரும்பாலானவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது.
முந்தைய திட்டத்தின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டு காலம் பணிபுரியலாம் என்ற நிலையில் புதிய ஆள் சேர்ப்பு நடைமுறையில் 4 ஆண்டுகால பணி காலம் குறைக்கப்பட்டது இளைஞர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக நாட்டின் ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. இன்றும் 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது.
பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரெயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.
பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பல இடங்களில் போலீசார் மீது இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த வன்முறை காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது. பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தை யில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியா கவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது இன்று (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போரா ட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-
கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
4 ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.
பேரூராட்சி, நகராட்சி களில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- கருப்பு சட்டை அணிந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 நபர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1 ந்தேதிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்றுடன் 25 வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். இந்த தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளியாக உள்ளதென தெரிவித்துள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
- உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டசெங்குறிச்சி சுங்கச்சா வடியில் 28-பணியாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக சுங்கசாவடி பணியாளர்கள் கை கால்களை கயிறால் கட்டிப்போட்டு நூதன முறையில் செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, அ.தி.மு.க.வினர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அக்கட்சியினர் திரண்டனர்.
பின்பு அவர்கள் ஊர்வல மாக நடந்து வந்து கோரிப்பா ளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வில்லாபுரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, எம்.எஸ். பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், பரவை ராஜா, சோலைராஜா, குமார், கே.வி.கே. கண்ணன், சுகந்தி அசோக், பாஸ்கரன், மாயத்தேவன் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மதுரை ஆயுதப்படை மைதா னத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பேரவை பொருளாளர் பாண்டுரங்கன், அவைத் தலைவர் சொ.ராசு, மீனவர் அணி செயலாளர் பாண்டி, நாட்டாமை, பகுதி செயலாளர் சரவணன்,, வட்டச் செயலாளர்கள் எம் ஆர் குமார் மகாராஜன் நாகரத்தினம் தவிட சுப்பிர மணி ஜெயகல்யாணி வேல்ராஜ் ரகுபதி பொன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலூரில் கைது
மேலூரில் செக்கடி பஜாரில் முன்னாள் எம்.எல். ஏ. தமிழரசன் தலைமையில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றி செழியன், நகராட்சி கவுன்சிலர் திவாகர், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி உட்பட 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் கைது செய்தார்.
மேலூர் பஸ் நிலையம் முன்பு முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை அருகே எடப்பாடி பழனிசாமி கைது சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் ராம கிருஷ்ணன், தன்ராஜ், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ், பாண்டியன், சதீஷ்சண்முகம், கவி காசி மாயன், மகேந்திரபாண்டி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், அம்மா பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், உச்சப்பட்டி செல்வம், ஆண்டிச்சாமி, ஆதி என்ற ராஜா, காசி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.