என் மலர்
நீங்கள் தேடியது "tag 94916"
- புஞ்சைபுளியம்பட்டி ஒளவை இணை வீதியை சேர்ந்தவர் அப்துல் வாஹாப். இவரது மனைவி ஜோகரா பேபி (70).
- கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஒளவை இணை வீதியை சேர்ந்தவர் அப்துல் வாஹாப். இவரது மனைவி ஜோகரா பேபி (70). இவர்களுக்கு சுல்தான் என்ற மகன் உள்ளார். சுல்தானுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் அப்துல் வாஹாப் இறந்து விட்டதால் ஜோகரா பேபி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள தனது மகன் சுல்தான் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகரா பேபி சென்றார். அங்கு தனது மகனுடன் இருந்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நல்ல வேளையாக ஜோகரா பேபி மகன் வீட்டுக்கு செல்லும் போது அனைத்து நகைகளையும் கழுத்தில் அணிந்து சென்றார். இதனால் நகைகள் தப்பின.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63).
- கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63). பஸ் அதிபர்.
இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று அதிகாலை பஸ் அதிபர் ஜெயச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் அவருக்கு மேலும் பதட்டம் அதிகமானது. பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 45 பவுன் தங்க ஆபரணங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் பதறிபோன ஜெயச்சந்திரன் இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது.
- மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். கட்டிட காண்ட்ராக்டர். இவரது மனைவி சரண்யா.
நேற்று காலை வேலை சம்பந்தமாக பிரகாஷ் வெளியில் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சரண்யா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் சரண்யா வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகையை அள்ளிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கொள்ளையர்களை சரண்யா தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் சரண்யாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். இதில் முகத்திலும் மூக்கிலும் ரத்தம் வழிந்தது.
பின்னர் கொள்ளையர்கள் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சரண்யாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து போனது. எனவே மர்மகும்பல் கொள்ளை திட்டத்துக்காக நாயை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது. இதனை தடுத்து கொள்ளைகும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர் கொள்ளை.
- கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனார்.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட வீரமுத்து, தமிழ்ச் செல்வன் மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்து பித்தளை பூஜைப் பொருட்கள், 2 லேப்-டாப், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.
- போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.
ரெயில்வே ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு சென்றார்.
இரவில் சுந்தர் பாபு வேலைக்கு செல்வதற்காக திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 சவரன் நகை உண்டியல் பணம் ரெயில்வே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பீரோவில் கவரிங் நகைகளுடன் கலந்திருந்த தங்க நகை மட்டும் கொள்ளையர்கள் பிரித்தெடுத்து கவரிங் நகையை வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருடு போய் இருந்தது.
- இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி பரக்கத் நகரில் வசித்து வருபவர் ஹாஜிமுஹம்மது (வயது 35). இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அவருடைய மனைவி தஸ்மிராநஸ்ரின் வடக்கு மாங்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஹாஜி முஹம்மதுவின் சகோதரர் முகமதுமகாதீர் (18) என்பவர் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதில் திருடர்கள்பீரோ உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பீரோ மற்றும் தரையின் மீது மிளகாய் பொடி தூவி, அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
- பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
- 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர்.
- பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே சேரன் நகர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முக ஜீவா. தனியார் கல்லூரியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுசீலா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து குன்னதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தம்பதி கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
- அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சித்திரவேல், பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
- இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குழித்துறை, அக்.20-
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்த
னர்.
- பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
- பணிக்கு சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவம்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி செல்வி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செல்வி தனது பிள்ளைகளுடன் நேற்று இரவு அதே ஊரில் உள்ள தந்தை வீட்டிற்கு உறங்குவதற்காக சென்றுள்ளார். அவரது கணவர் தர்மராஜ் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
பணியை முடித்துவிட்டு தர்மராஜ் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் தையல் மெஷினை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து. சிசிடி கேமரா ஆதாரங்கள் மற்றும் தடயங்களை வைத்து திருடி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.