என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு"

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் சனி பரிகார தலமாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தந்தாலும் சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக அளவு வருகை தருவார்கள். மேலும் ஆடி மாத சனிக்கிழமை, 18-ம் பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருநள்ளாறு உள்பட முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு வருகின்றனர்.

    அதன்படி சனிப்பெயர்ச்சி மற்றும் அமாவாசையை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றி பரிகார பூஜைகளை செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நவக்கிரக சன்னதி, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

    • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது.
    • பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம்

    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, கும்மனம் ராஜசேகரன் மற்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தங்கரத புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் சேவா கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ.3000 ஆகவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், திரிசதை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், சந்தன காப்பு அலங்காரம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், சுற்றுக்கோவில் அபிஷேக கட்டணம் ரூ. 300-ல் இருந்து ரூ.600 ஆகவும், தங்கரத புறப்பாடு கட்டணம் ரூ.1201-ல் இருந்து ரூ.2000 ஆகவும், சகஸ்ரநாமம் ரூ.100-ல் இருந்து ரூ.1000 ஆகவும், முத்தங்கி ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், உபநயன கட்டணம் 500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், காது குத்துதல் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.500 ஆகவும், சிறப்பு வழி கட்டணம் ரூ.50-ல் இருந்து விசேஷ காலகட்டங்களில் மட்டும் ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல்.
    • காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சதயவிழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய நாள் அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

    தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளு வன் தொடங்கிவைக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது.பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை,

    பரதம், நாதசங்கமம், வயலின் இன்னிசை, கவியரங்கம் உள்ளிட்டநிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

    இரவு 8.30மணியளவில் நகைச்சுவை சிந்தனைப்பாட்டுபட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    சதய விழா நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7.30 மணிக்குமாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா,காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷே கம், பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.

    மாலையில் குரலிசை, திருமுறைப் பண்ணிசை அரங்கம், திருநெறி தமிழிசை நடைபெறவுள்ளன.

    இரவு 7 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயில் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர்
    சிவ. அமிர்தலிங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது.

    இதையடுத்து, இரவு 8 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரனின் நையாண்டி மேள நிகழ்ச்சி, ஆந்திரப் பிரதேச கல்பனா குழுவினரின் குச்சிப்புடி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அரண்மனைதேவஸ்தான பரம்பரைஅறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே,

    உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் மேத்தா, முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாழப்பாடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில், மூலவருக்கு தேன், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் காட்சி யளித்தார்.

    இதேபோல், வாழப்பாடி காசி விஸ்வநாதர் மற்றும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொட்டவாடி கந்தசாமி கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டியையொட்டி அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.

    தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

    • சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர்.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    தருமபுரி,

    உயிர் நீத்த கிறிஸ்தவர்கள் சமாதியில் பூஜை செய்யும் நாளாக ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.

    இன்று நடைபெற்ற கல்லறை திருவிழா நிகழ்ச்சியில் தருமபுரி நகரப் பகுதி, மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு கிறிஸ்தவர்கள் காலை முதல் வரத் தொடங்கினர்.

    சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி கல்லறை திருநாளிலும் இடைவிடாது மழை பெய்து வந்தாலும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு கல்லறைக்கு சென்று மலர் தூவி சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏத்தி சாம்பிராணி புகையிட்டு வழிபாடு நடத்தினர்.

    உயிர் நீத்தவர்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை சமாதி முன் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.

    • சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார்.
    • படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் நேற்று மாலையில் ஆராட்டு விழா நடந்தது. இதற்காக மருங்கூர் கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார். பின்னர் அங்குள்ள ஆராட்டு மடம் அருகில் உள்ள படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புத்தனார் கால்வாயில் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.

    விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெசிம், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, துணைத் தலைவர் ராஜு, செயற்குழு உறுப்பினர் சுதாகர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், மயிலாடி பேரூராட்சி துணைத் தலைவர் சாய்ராம், பேரூர் பா.ஜனதா தலைவர் கவுன்சிலர் பாபு, மருங்கூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், பேரூர் மாணவரணி செயலாளர் மணிகண்டன் அ.தி.மு.க. பிரமுகர் செல்லம் பிள்ளை, தொழில் அதிபர் முருகேசன், காங்கிரஸ் பிரமுகர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா ஆகியோர் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆராட்டு விழா முடிந்ததும் மயிலாடியில் உள்ள முக்கிய வீதிகளில் சுப்பிரமணியசாமி வலம் வந்த பின்பு மீண்டும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கயிலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில் அமைந்துள்ளதால் வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டது.மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவி சோழமாதேவி தமது மன்னனின் வெற்றிகளுக்காகவும் தீர்க்காயுளுக்காகவும் வேண்டி மேற்கொண்ட ஆன்மீகச் சேவைப் பிரார்த்தனையின் பொருட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவில் வடக்குப் பிரகாரத்தில் கயிலாச நாதர் கோயிலைக் கட்டி, குடமுழுக்கு முதலிய திருப்பணிகளையும் செய்து வைத்துள்ளார். மேலும், பொன், பொருள் மற்றும் நிலம் முதலிய நிவந்தங்களையும் அளித்தார்.

    இதன்பொருட்டு தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஐயாறப்பர் கோயில் வடகயிலாயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழாவை முன்னிட்டு வடகயிலை கயிலாச நாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    சிவனடியார் பழனிநாதன் தலைமையிலான வடகயிலைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதல் வழிபாடும், திருமுறைகள் பாடிய அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் ஞானசம்மந்தர் ஆகிய நான்கு சைவசமயக் குரவர்களின் திருவுருவப்பட வீதிஉலா நடந்தது.

    அப்பர் காட்சி கண்ட தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில்அ மைந்துள்ளதால் இக் கயிலாசநாதர் கோயில் மற்றும் நந்தவனப் பகுதி வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வடகயிலைச் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தார்கள்.

    • தக்கலை அருகில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது.
    • நாளை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம் நடக்கிறது.

    தக்கலை அருகில் உள்ள குமாரபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது. புராண காலத்தில் மகாபாரத போரில் கவுரவர் படையை வெல்வதற்காக சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் தவம் செய்ததாகவும், அப்போது காட்டாளன், காட்டாளத்தி வேடத்தில் வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

    காட்டாலை பகுதியில் உள்ள காட்டாலை சிவன் கோவில் அருகிலேயே காட்டாளம்மன் கோவிலும் உள்ளது, இங்கு காட்டாளம்மன், கண்டன் சாஸ்தா, நாக கணங்களுடன் வலம்புரி, இடம்புரி பிள்ளையார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,

    தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் 41-வது புனர்பிரதிஷ்டை விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 5 மணிக்கு சுத்திகலச பூஜை, இரவு தீபாராதனை, நள்ளிரவு பலிபூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், கலசபூஜை, உஷபூஜை, தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, தொடர்ந்து நவ நாகங்களுக்கு பால் வைத்து வழிபாடு, நாகரூட்டு, மதியம் உச்சி கால பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சரஸ்வதி அம்மா, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அய்யப்பன் பிள்ளை, ராமசந்திரன், ரவிச்சந்திரன், ஜனார்தனன், நீலகண்ட பிள்ளை, அய்யப்பன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுத முடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் சனி பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு.
    • அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும்.

    நாகப்பட்டினம்:

    400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்து ஜீவ சமாதி நிலையில் இருந்து நாகூரில் அருள்பாலித்து வரும் தமிழ் புலவராம் ஸ்ரீ காங்கேயர் சித்தர் ஜீவ பீடத்தில் ஐப்பசி முழுநிலவு தின வேள்வி மற்றும் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்க அன்னாபிஷேகம் மாற்றும் வேள்வியாகம் நடைபெற்றது கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

    அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

    அறிவியலும் ஆன்மிகமும் சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது.

    அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவ பீடங்களின் வேள்விகளில் கலந்துகொள்வது, அதில் பங்கெடுப்பது என்பது மிக மிக சிறப்பான பலன் தரக்கூடிய செயல் ஆகும் சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற பழமொழி கூறப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும்.நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும்.அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்

    உண்டு என்பது ஐதீகம்.சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தார்கள் ஏற்பாட்டினை ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அறக்கட்டளையை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், அனிதா பழனிவேல், சுதாகர், குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    ×