search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teachers Day Ceremony"

    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டார்.
    • இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    வட்டாரத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், அப்பழுக்கற்ற பணி செய்து இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் 10 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×