search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile trader"

    ஈரோட்டில் கோவில் முன்பு தீக்குளித்த ஜவுளி வியாபாரி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் அம்பிகை நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது56). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    முரளிதரன் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். முரளிதரன் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் முரளிதரன் சூரம்பட்டி வலசு மாரியம்மன் முன்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தீவிர சிகிச்சைப்பிரிவில் முரளிதரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் முரளிதரன் மனைவி மற்றும் மகன்கள் வந்து அவரை பார்த்து கதறி அழுதனர்.

    முரளிதரன் எதற்காக தீக்குளித்தார்? என்று உடனடியாக தெரியவில்லை. நோய் காரணமாக அவர் தீக்குளித்தாரா? அல்லது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தீக்குளித்தாரா? என்று தெரியவில்லை.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×