search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The body was recovered and sent to the hospital for post-mortem"

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் சின்ன ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 64). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்கள் இருவரும் பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக இன்று காலை கடைக்கு சென்றனர்.

    சாலையில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சீனிவாசன் பிரேக் போட்டார். அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி பாபு கீழே விழுந்தார். இதில் பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×