search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The decoration is anointed and Deeparathanam is performed"

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • தாம்பூல பைகள், அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னக்கல்லுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஊர் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    கோவிலின் கருவறையில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருக்கல்யாண வைபவத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தாம்பூல பைகள் வழங்கி அன்னதானம் நடைப்பெற்றது.

    ×