search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the sea"

    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது.
    • அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டி உள்ளது. அனைத்து தொடர்ந்து 2000 கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,953 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்து விட்டபட்ட நிலையில் இன்று 100 கன அடி நீர் குறைத்து 500 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

    இதைப்போல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.78 அடியாக உள்ளது.

    குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளது.

    இன்று இன்று காலை வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது. 

    ×