search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the walk"

    • நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • தினமும் 8 கி.மீ. துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என பேசினார்.

    திண்டுக்கல்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்லில் இத்திட்டத்தை கலெக்டர் பூங்கொடி கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதும க்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஆர்.எம்.காலனி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் தொடங்கி இ.வி.ஆர். ரோடு, எம்.வி.எம்., கல்லூரி திருப்பம், ஆர்.எம். காலனி குறுக்கு சாலைகள் வழியாக மீண்டும் கூடைப் பந்தாட்ட மைதானத்தில் முடியும் வகையில் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இச்சாலைகள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வண்ணம் முழுமையாக செப்பனிடப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே சாய்வு இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் நடைபயி ற்சியில் புத்துணர்வுடன் கலந்துகொள்ள ஆரோக்கியம் குறித்த வாசகங்கள் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டு ள்ளன. இந்தியாவில் உடல் சார்ந்த நோய்கள் அதிகமாக உருவாவதை தடுத்திடும் வகையில் அனைத்திற்கும் அடிப்படை பயிற்சியாக நடைபயிற்சி அமையும். அதனை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி டும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி தினமும் 8 கி.மீ. துாரம் அதாவது 10,000 காலடிகள் நடந்தால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் 28 சதவீதம், இதய நோய் தாக்கம் 30 சதவீதம் குறைகிறது என அறியப்படுகிறது. மேலும் நடைபயிற்சியானது நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே, தமிழக அரசால் முனைப்புடன் செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அனைவரும் பின்பற்றி நலம் பெற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன், மேயர் இளமதி, நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், டாக்டர் வரதராஜன், அனிதா மற்றும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×