என் மலர்
நீங்கள் தேடியது "therapy"
- மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
- கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்யானை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம், நல்லூர் கால்நடை மருந்தகம் சார்பாக குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, தலைமை வகித்து முகமை தொடங்கி வைத்தார். நல்லூர் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் கவிதா தலைமையில், கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துசாமி, திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த சிறப்பு கால்நடை முகாமில் பெரியம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடு களுக்கும், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் , கன்றுகுட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, தாது உப்பு கலவை வழங்கப்பட்டன.
முகாமில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி குணசேகரன் கலந்து கொண்டு சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறப்பாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்ட விவசாயி களுக்கு விருதுகளையும் வழங்கினார். முகாமிற்கு பாமகவுண்டம்பாளையம், பொதிகை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்தனர். முகாமில் ஊராட்சித் துணைத் தலைவர், வாழ் உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
- வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்
. திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.
இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
- உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட்டம் வளத்தா ன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.(வயது65) இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து அவருக்கு மயிலாடுதுறை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த நிலையில், திடீரென அவருக்கு நாடி துடிப்பு இருக்கிறது என்று கூறி, உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் அவசரகதியில் மேல் சிகிச்சைக்காக காரை க்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட ராஜேந்திரன் குறித்து, 2 நாட்களாக காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. ரமணா சினிமா பாணியில் இறந்து விட்ட தாக கூறியவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர். இதனால் இப்பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதனை அடுத்து, தனியார் ஆஸ்பத்திரி ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் இதுவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் உறவினர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்கா லில் உள்ள சமூக வலைதள ங்களில்வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி உயிரிழந்தார்.
பாபநாசம்:
திருச்சி மாவட்டம், குறிச்சி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் மணிகண்டன் (43).
இவர் கடந்த 23 ம் தேதி இரவு தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சா லையில் பாபநாசம் தெற்கு வீதி, கடைவீதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மணிகண்டனின் தாயார் நாகரத்தினம் (65) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
- மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், பெரு மாக்கநல்லூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர்
கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெருமாக்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இரா.கண்ணன் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினர்.
இதில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். முகாமில் கால்நடை மருந்தகம், துணை சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பித்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்
எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர்.
முகாமில் பெருமாக்க நல்லூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளை முகாமில் கொண்டு வந்து சினை ஊசி, சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், ரமேஷ், கணேசன், ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, மற்றும் ஊராட்சிமன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத் நன்றி கூறினார். முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- சகோதரர்களான இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர்.
- இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்கள் ராஜா (வயது 28), முருகானந்தம் (23). சகோதரர்களான இருவரும் சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நாச்சிக்குளம் கிழக்கு கடற்கரை சாலை தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
- சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 67).
அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (36).
இவர்கள் 2 பேரும் இன்று கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.
உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது,
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து விவேக்கிற்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் கள்ளசாராயத்தில் பலர் இறந்த நிலையில் தஞ்சையில் இன்று மது குடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
- ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்று அதன் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து, தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர், மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியோர், அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள், ஒரு சித்த மருத்துவர், ஒரு பல்நோக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணி புரிகின்றனர். காலை 7.30 மணிக்கு வரவேண்டிய மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. இதனால், தினந்தோறும் இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருத்துவ சீட்டு வாங்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இதனால், இன்று காலை சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் திடீரென மருத்துவமனை முன்பு, கையில் மருத்துவ சீட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்ளி ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ராம்குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன், நகர தலைவர் கதிர்காமன், அலிபாபு உட்பட சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது.
- கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விலங்குகள் நல தொண்டு நிறுவன செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் உதவியுடன் தெருக்களில் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டது. பின், அவற்றை கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் செய்திருந்தார்.
- மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.

வீ.கே.குருசாமி-ராஜபாண்டி
மதுரை
பெங்களூருவில் கொலைவெறி தாக்குத–லுக்குள்ளான திமுக பிரமுகர் வி.கே.குரு சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவருக் கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே கடந்த 23 ஆண்டுக ளாக தொடர்ந்து முன் விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட நிலையில் வி.கே.குருசாமியும் அவரது மகன் மணியும் தலைமுறைவாக இருந்து வருகிறார்கள். வி.கே.குருசாமி மீது கொலை மற்றும் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப் போது மதுரைக்கு வந்து கோர்ட்டில் ஆஜ ராகி விட்டு வெளியூர் செல்வதை வி.கே.குருசாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு பெங்க ளூருவுக்கு சென்ற வி.கே.குருசாமி அங் குள்ள சுக்சாகர் பகுதியில் உள்ள ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தமிழக பதிவு எண் கொண்ட காரில் வந்து இறங் கிய 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயு தங்க ளுடன் வி.கே.குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.
இதில் கழுத்து, தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் வி.கே.குருசாமி கீழே சாய்ந்தார். உடனடி யாக அவரை அங்குள்ளவர்கள் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வி.கே.குருசாமி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் மதுரை வந்துள்ள னர். மதுரை காமராஜர் புரம், வாழை தோப்பு, கீரை துறை ,கீழ் மதுரை ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி கே குருசாமியின் மீதான கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ராஜபாண்டியின் உறவினர்கள் குறித்தும், கமுதி பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பெரும் பரபரப் பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
வி.கே.குருசாமி வெட்டப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் பரவி வருவதால் பதட்டத்தை தணிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.