search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiru uthirakosamangai"

    திருஉத்திரகோசமங்கை கோவிலில் இன்று மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாத சாமி கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு இன்று காலை சந்தனகாப்பு களைந்து அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்கள நாதசாமி கோவில் உள்ளது. இங்கு நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்தில் ஐந்தரை அடி உயர அபூர்வ பச்சை மரகத கல்லினால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    ஆண்டு முழுவதும் சந்தன காப்பு செய்யப்பட்டு பாது காக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக் காப்பு களையப் படும்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியோடு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது. காலையில் நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்டு, சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த மரகத நடராஜரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். 100 ரூபாய், 10 ரூபாய், இலவச தரிசனம் என மூன்று பிரிவுகளாக தடுப்புகள் அமைத்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    100 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு இலவசமாக சந்தன பிர சாதம் வழங்கப்பட்டது.

    கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருந் தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு கோவில் அலுவலக ஊழி யர்கள் குடிநீர் வினி யோகம் செய்தனர்.

    அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் மற்றும் வளாகத்திற்குள் 28 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை போலீசார் கண்காணித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சி யார் ஆலோசனையின் பேரில், கோவில் நிர்வாக செயலாளர் பழனிவேல்பாண்டியன் தலைமையில் அலுவலக மேலாளர் சுவாமிநாதன், சரக அலுவலர் ராமு, கண்காணிப்பாளர் கிரி, பேஷ்கார் கண்ணன் உள்பட கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
    ×