search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Leaders"

    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.

    திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும் வாழ்த்து பெற்றார். அப்போது செல்வ பெருந்தகையும் உடனிருந்தார்.

    மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் தமிழக தலைவர்கள் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #OnamFestival
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    ஆண்டுதோறும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவோணப்பண்டிகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணத் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி வருவது போல் இந்த ஆண்டும் உறுதியாக வருவார். மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தன் மக்களின் அவலங்கள் நீங்கி இனி வரும் காலங்கள் இன்புறு காலமாக அமைய உறுதியான வழி அவர் மூலமாக கிடைக்கும் என நம்புகிறேன்.

    இயற்கையின் சீற்றத்தால், மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இவ்வாண்டு துயரத்துடனே ஓணம் பண்டிகையை வரவேற்க வேண்டிய நிலை கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் அனைத்து மக்களுக்கும், கேரள மக்களுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த மக்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், சிரமங்கள் நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடவும், நலமுடன், வளமுடன் வாழவும் இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டி உலகம் முழவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு த.மா.கா. சார்பில் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    கேரளம் மிகப்பெரிய இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் இன்னும் வீடுகளுக்குக் கூட திரும்பாத நிலையில் அவர்களால் ஓணம் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் ஓணம் திருநாள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக் தருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

    திருவோணம் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அனைத்துத் தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-



    அன்புக்குரிய மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்பதற்காக திருவோணம் திருநாளை கொண்டாடும், தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வாழும், மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நன்னாளில் அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும், அநீதிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடவும் அனைத்துத் தரப்பு மக்களும் சபதம் ஏற்க வேண்டும்.

    புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம்:-

    கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம், அம்மாநிலத்தையே அடியோடு சீர்குலைத்து விட்டது. தற்போது வெள்ளம் சற்று வடிய துவங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள், நடைபெற்று வருகின்றது. கேரள மக்களும் தங்கள் துயரங்களில் இருந்து, மெதுவாக மீண்டெழுந்து தங்களின் பாரம்பரியம் தடைபட்டு விடாமல், எளிமையாக ‘‘ஓணம் பண்டிகையை’’ கொண்டாடிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். அனைவருக்கும் ‘‘ஓணம் பண்டிகை’’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். #OnamFestival
    ×