என் மலர்
நீங்கள் தேடியது "Tourism"
- ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
- கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்யவில்லை.
விடுமுறை தினமான இன்று ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
- குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்வது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.
- குடும்ப சுற்றுலா மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.
அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.
அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.
குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்
குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்கும்
பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.
குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.
உற்சாகத்தை தூண்டும்
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.
- தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.
சேலம்:
தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். அணையில் தண்ணீர் 120 அடி எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணையை சுற்றிலும் மலைகள் உள்ளது. இந்த மலைகளை ததும்பியபடி தண்ணீர் காணப்படுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.
மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி காணப்படுகிறது.
ஏற்–காட்–டில் உள்ள படகு இல்–லம், ரோஜா தோட்–டம், லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், சேர்–வ–ரா–யன் மலைக்–கோ–வில், அண்ணா பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை, மேட்டூர் பூங்கா, கொல்லிமலை தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பூக்கள் முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலங்களில் தற்போது அவ்–வப்–போது மழை பெய்–து வருவ–தால் குளிர் நில–வி– பசுமை போர்த்தியதுபோல் மேக கூட்டம் மலைகளை சூழ்ந்து காணப்படுகிறது. இத–னால் சுற்–றுலா பய–ணி–கள் சுவர்ட்–டர் அணிந்து சென்–றதை பார்க்க முடிந்–தது.
சுற்–றுலா பய–ணி–கள் வரத்து அதி–க–ரிப்–பால் கடை–கள், ஓட்–டல்–களில் விற்–பனை படு–ஜோ–ராக நடைபெறுகிறது.
- சென்னையில் ஒரு வாடகை ஆட்டோ எடுத்து மாமல்லபுரம் வந்தனர்.
- கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர்.
சென்னை :
அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் நகரை சேர்ந்தவர்கள் பிரைஸ் (வயது 30), டைலர் (26). சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் வாஷிங்டன் நகரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆண்டு தோறும் அவர்கள் வேலை செய்யும் சாப்ட்வேர் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை வழங்குகிறது.
இந்த விடுமுறை நாட்களில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் புத்தாண்டு விடுமுறை தினத்தை கழிக்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவார்கள்.
இந்த நிலையில் வாஷிங்டன் நகர சகோதரர்கள் பிரைஸ், டைலர் இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை தினத்தை தமிழகத்தில் கழிக்க முடிவு செய்து சென்னை வந்தனர். பின்னர் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆட்டோ மூலம் சென்று சுற்றிபார்க்கவும், புத்தாண்டை மதுரையில் கொண்டாட முடிவு செய்தனர்.
அமெரிக்க சகோதரர்கள் சென்னையில் ஒரு வாடகை ஆட்டோ எடுத்து மாமல்லபுரம் வந்தனர். தம்பி டைலர் ஆட்டோ ஓட்ட அண்ணன் பிரைஸ் ஆட்டோ பின் சீட்டில் அமர கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரம்மியமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
முன்னதாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஆட்டோவில் மாமல்லபுரம் வந்த அவர்களை சுற்றுலா வழிகாட்டி சந்தோஷ் வரவேற்று, மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் சுற்றி காட்டினார்.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை முழுவதும் சுற்றி பார்த்து மகிழ்ந்த அமெரிக்க சகோதரர்கள் பிறகு தங்கள் பயணத்தை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். புதுச்சேரி பயணத்தை முடித்து விட்டு வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், பிச்சாவரம், ஊட்டி, கொடைக்கானல், பூம்புகார், ஏற்காடு, கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, குற்றாலம், ஏலகிரி, கொள்ளிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஆட்டோவில் பயணிக்கும் அண்ணன்-தம்பிகளாள நாங்களே மாறி, மாறி ஆட்டோவை ஓட்டி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அப்போது இயற்கை எழில்மிகுந்த காட்சிகளை பார்ப்பதற்கு வசதியாக உள்ளதாகவும், அமெரிக்காவில் உயர்தர உணவுகளை சாப்பிட்டு அலுத்துவிட்ட தங்களுக்கு, இங்கு கிராமப்புறங்களில் சாலையோர உணவகங்களில் உணவருந்தி செல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாத்தை தூங்கா நகரம் மதுரையில் கொண்டாட உள்ளதாகவும், ஆட்டோ பயணம் மூலம் தமிழகத்தின் சுற்றுலா தலங்களையும், கோவில்களையும் பார்த்து ரசித்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அமெரிக்க சகோதரர்கள் தெரிவித்தனர்.
- வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்லும்.
- இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது.
வாரணாசி :
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
'கங்கா விலாஸ்' எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் செல்கிறது.
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் மற்றும் மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. எனினும் இந்த தொடக்க விழாவுக்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடைகிறது.
வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 2 நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும்.
50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும்.
மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்கும் இந்த ஆடம்பர சொகுசு கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் அடங்கி உள்ளன.
குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் 3 மாடிகளை கொண்டது. இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன. எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா சென்றனர்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.
- மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
- இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.
விழாவில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அவரது மனைவி , மகள்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கபடி, கயிறு இழுத்தல் போட்டி, இளவட்டக் கல் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், இன்டாக் கவுரவ தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் இருந்து சக்தி பீடங்கள்-ஜோதிர்லிங்கம் கோவில்களுக்கு சுற்றுலா ெரயில்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை
ஆன்மீக திருத்தலங்க ளுக்கு அனைவரும் செல்லும் வகையில் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சக்தி பீட சுற்றுலா ெரயில் மதுரையில் 2இருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 9-ந்தேதி இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.
12-ந்தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயா வில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள பவுரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம்.
ஒடிசா கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகநாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து சுற்றுலா ரெயில் 21-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.
நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.21 ஆயிரத்து 500 ஆகும். இந்த சுற்றுலா ெரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண் மூலமும் செய்து கொள்ளலாம்.
இதேபோல் மாசி மகத்தை முன்னிட்டு ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ெரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து மார்ச் 3-ந்தேதி புறப்படும் சுற்றுலா ரெயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 5-ந்தேதி உஜ்ஜைனி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு. பின்பு 6-ந்தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், 7-ந்தேதி சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், 9-ந்தேதி நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, 10-ந்தேதி பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், 11-ந் தேதி அவுரங்காபாத் குருஸ் ணேஸ்வரர் தரிசனம், 12-ந்தேதி அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், 13-ந்தேதி பார்லி வைத்தியநாதர் தரிசனம், 14-ந்தேதி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் செய்து விட்டு சுற்றுலா ெரயில் 15-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.ெரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் பஸ் கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்து 400 கட்டணம் ஆகும்.
இந்த கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு கூடுதலாக கட்டணம் ரூ,7 ஆயிரத்து 100 செலுத்த வேண்டும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
- கொரோனா காலகட்டத்தில் கேரள சுற்றுலாத் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
- பயணம் சாத்தியமில்லை என்றால், எந்த சுற்றுலாவும் இருக்காது.
திருவனந்தபுரம் :
கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், "2021-ல் பினராயி விஜயன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தொற்றுநோய் கடுமையாக இருந்தது. பயணம் சாத்தியமில்லை என்றால், எந்த சுற்றுலாவும் இருக்காது. இதனால் கொரோனா காலகட்டத்தில் கேரள சுற்றுலாத் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது" என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் செயல்படுத்தத் தயாரிக்கப்பட்ட திட்டங்களில் உள்நாட்டு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் அரசாங்கம் அதன் இலக்கை அடைந்தது.
அதன் பலனாக, கேரளாவின் வரலாற்றில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்ட ஆண்டாக 2022-ம் ஆண்டு மாறியது. அந்த ஆண்டில் மொத்தம் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்" என்றார்.
- சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.
- ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.
இதனால் சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து செல்வது போல நின்றன.
உற்சாகம்
ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மலர் செடிகளையும் இயற்கையையும் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.
பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், மஞ்ச குட்டை காட்சி முனை, சேர்வராயன் கோவில் உள்பட பல இடங்களுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர்.
மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சி, மஞ்சக்குட்டை அடுத்த நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களிலும் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
ஆனைவாரி முட்டல் ஏரி
இதேபோல், ஆத்தூர் அடுத்த ஆனைவாரி, முட்டல் சுற்றுலா தலத்திலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருந்தனர். முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.
- வழிகாட்டி உதவியுடன் ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஏற்பாட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கூடிய சுற்றுலாவை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த சுற்றுலா வில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோவில் ஸ்தல வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி யின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி என்ற நடைமுறையில் இது செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாவிற்கான கட்டண தொகையாக ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மாவட் டங்கள் மற்றும் மாநிலங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவார் கள்.தொடக்க விழா நிகழ்ச்சி யில் சுற்றுலா அலுவலர் அன்பரசு மற்றும் செயல் அலுவலர் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
- தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
- படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்தும், எண்ணற்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்த சுற்றுலா தலங்களையும், இயற்கை காட்சிகள் மற்றும் குளு, குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் இருந்து குளு, குளு சீசனை அனுபவிப்பதற்காகவும், இதமான காலநிலையை தேடியும் சுற்றுலா பயணிகள் மலை பிரதேசங்களை நோக்கி பயணித்து வருகின்ற னர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த மாதத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
தற்போது தமிழ்புத்தாண்டு தொடர் விடுமுறை, கோடை காலம் தொடங்கிவிட்டதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை வருகை தருகிறார்கள்.
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா மலைசிகரம், சிம்ஸ்பூங்கா, நேரு பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு மலர் கண்காட்சியையொட்டி அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மலர்களை பார்வையிட்டு, புல் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் பேசியும், விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
தொட்டபெட்டா மலை சிகரம், லேம்ஸ்ராக் காட்சி முனை, கொடநாடு காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் காட்சிமுனைகளை பார்வையிட்டு, இயற்கை அழகினை ரசித்தபடி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். படகு இல்லத்தில் குவியும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து ஏரியின் ரம்மியமான இயற்கையை கண்டு ரசித்தனர்.
ஊட்டி, குன்னூரில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அங்கு யானை சவாரி, வாகன சவாரி செய்கின்றனர்.
வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு அதனுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.
கோடை சீசன் தொடங்கியதையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று முதல் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
ரெயிலில் செல்லும் போது, இயற்கை காடுகளின் அழகு, அங்கு வாழும் வனவிலங்குகள், நீர்வீழ்ச்சிகளை பார்த்தபடியே பயணிக்கும் அனுபவம் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையாக இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக சென்று வருகிறார்கள்.
நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும், அதனையொட்டி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.