search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists gathered"

    • பஸ்கள் கிடைக்காததால் அவதி அடைந்தனர்.
    • ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது.

    இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.

    பின்னர் குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கோடநாடு காட்சிமுனை, கேத்ரின் நீா்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா்.

    காலாண்டுத் தோ்வு விடுமுறை, ஆயுதபூஜை, கா்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை என தொடா் விடுமுறை இருந்ததாலும், நீலகிரியில் இரண்டாவது சீசனில் நிகழும் இதமான காலநிலை காரணமாகவும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.

    இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ளவா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    விடுமுைற முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஊட்டி பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து கொண்டு ஏறினர். எல்லா பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்ததுடன், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ×