என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic"

    • சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    பல்லடம் :

    பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
    • இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்த இறக்கை கொண்டு செல்லும் லாரியை எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், மஞ்சக்குப்பம் மைதானம், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தற்காலிக உழவர் சந்தை போன்றவற்றை இருந்து வருகின்றது.

    இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் மற்றும் மாணவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சகுப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் கூரை கொட்டகை அமைத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு உள்ள சிறு வியாபாரிகள் சாலையின் ஓரமாக காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய மக்களும் வாகனங்களில் செல்லக்கூடிய மக்களும் சாலையில் நின்று கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.

    இதன் காரணமாக இவ்வழியாக வந்து செல்லக்கூடிய பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகளும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் போது அங்குள்ள போக்குவரத்து போலீசார் உடனடியாக நேரில் வந்து போக்குவரத்தை சரி செய்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை எச்சரிக்கை செய்து செல்கின்றனர்.

    ஆனால் தினந்தோறும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதற்கு யார்? நிரந்தரமாக நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சாலை ஓரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு உள்ளே கொண்டு சென்று விற்பனை செய்தால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டும் இன்றி சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் முன்னேறுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அனைவரும் இருந்தாலும் இது போன்ற போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சியின் கடைத்தெரு பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்ததால் கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமி ப்புகளை அதிரடியாக அகற்றினார்.

    குறிப்பாக பட்டுக்கோட்டை வி.என்.எஸ். மார்க்கெட் பகுதி அமைந்துள்ள சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காகவே அகலப்படு த்தப்பட்டு, உயரபடுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆக்கிரமிப்புகள் இன்றோடு இல்லாமல் தொ டர்ந்து ஆக்கிரமிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

    • மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
    • மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், "தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்ற மாட்டேன், பயணிகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை பின்பற்றுவேன், போக்குவரத்து சமிக்கைகளை பின் பற்றுவேன், படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.

    இதில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி, ஆண்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    வடவள்ளி

    கோவை மாவட்டம் மருதமலை சாலை எப்பொழுதும் பரபரப்பாக கணப்படும் சாலையாகும். கடந்த 10 வருடங்களில் வடவள்ளி சுற்றுவட்டார பகுதிகள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதன் தாக்கமாக வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதனால் தனிநபர் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக லாலிரோடு முதல் மருதமலை அடிவாரம் வரையில் இருபுறமும் சாலையை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் நவாவூர் வரையில் சாலையை அளந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் அவ்வப்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட பகுதியான மருதமலை சாலையில் இருந்து தொண்டாமுத்தூர் பிரிவு சிக்னல் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்தநிலையில் இந்த சிக்னல் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விடுகின்றனர். ஏற்கனவே இந்த சாலையின் இடம் மிக குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.

    5 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணியில் இருந்தனர். அதற்கு பின் தற்போது வரை போலீசார் இல்லை. மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் தொண்டாமுத்தூர் பிரிவு பகுதியில் விரிவுப்படு த்தப்பட்ட சாலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லை.

    எனவே போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆத்துப் பாலத்தில் இருந்து உக்கடம் வருவதற்கு அரை மணி நேரத்திற்க்கு மேலாக ஆகும்.
    • ஒரே நேரத்தில் அத்தனை வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையில் உக்கடம் மேம்பால பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    ஆத்துப் பாலத்தில் இருந்து உக்கடம் வருவதற்கு அரை மணி நேரத்திற்க்கு மேலாக ஆகும். ஆனால் தற்போது ஆத்துப்பாலத்தில் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் ரவுண்டானா முறை அமைத்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து கோவையில் இருந்து குனியமுத்தூர், சுந்தராபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கரும்பு கடையில் சிக்கி விடுகின்றனர். இதனால் நான்கு சக்கர வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் அந்தக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் அத்தனை வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிகப்படியாக அந்த இடத்தில் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருகின்றனர்.

    உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் கரும்புக்கடையை மட்டும் கடந்து செல்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகும்.இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் விரக்தியில் உள்ளனர். இதனால் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் ஆத்துப்பாலம் பகுதிக்கு வரவே மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகையில்:-ஆத்து பாலத்தை கடப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. ஆனால் போலீசார் அதை ரவுண்டானா முறை அமைத்து பயணத்தை எளிதான முறையில் மாற்றி விட்டனர். ஆனால் கரும்பு கடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத காரணத்தால், குறுகிய அந்த பகுதியில் அத்தனை வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் விரைவில் கரும்பு கடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் பயணம் எளிதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ெரயில்வே கேட் முன்பு லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

    குளித்தலை

    குளித்தலை-மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் ரயில்வேகேட் மூடுவதால் அதிக அளவில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் பொதுமக்கள் மேம்பாலம் அமைத்து தர பல முறை கோரிக்கை வைத்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் நாக்பூரிலிருந்து மணப்பாறைக்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ரயில்வே கேட் முன்பு குறுக்கே பழுதடைந்துவிட்டது. இதனால் இரு புறங்களும் வாகனம் செல்ல முடியாத நிலையில் சில மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசோ, மத்திய அரசோ இப்பகுதிக்கு மேம்பாலம் அமைத்து தர சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் ரயில்வே கேட் மூடுவதால் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • கோனியம்மன் கோவில் தேரோட்டம்
    • போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆணடுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.

    20-ந் தேதி கிராம சாந்தி, 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.

    இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜ வீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 3-ல் தெப்பத்திருவிழாவும், 4-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

    மார்ச் 6-ந் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி.

    செட்டி வீதி, சலிவன் வீதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.

    வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.

    மருதமலை தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருதமலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

    கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை.

    இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

    • இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
    • போலீசார் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமானநிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கி.மீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நவஇந்தியா சிக்னல், லட்சுமிமில்ஸ், எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் ஆகிய சிக்னல்களில் மட்டும் மேம்பால தூண்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.

    எனவே கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல், எல்.ஐ.சி.சிக்னல், அண்ணா சிலை சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    போக்குவரத்து மாற்றத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் இருந்த பஸ் நிறுத்தம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகளையும் போலீசார் ஆங்காங்கே வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.இதுகுறித்து மாநகர போலீஸ் துறையினர் கூறியதாவது:-

    அவினாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜே.எம். பேக்கரி சிக்னலில் வலது புறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவினாசி சாலைக்கு வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் ரெயில் நிலையம், கோர்ட்டு வளாகம் சாலையில் இருந்து காந்திபுரம், அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.

    நஞ்சப்பா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் இதுபுறமாக மட்டுமே செல்ல முடியும்.

    ஜே.எம். பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு செல்வது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் கலெக்டர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று யுடர்ன் செய்து அவினாசி சாலையை அடைந்து ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம்.

    அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவினாசி சாலை, வ.உ.சி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.

    காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவினாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக காந்திபுரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஓசூர் சாலை வழியாக செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக அண்ணா சிலையில் இருந்து வலதுபுறமாக திரும்பி பாலசுந்தரம் சாலையை அடைந்து காந்திபுரத்துக்கு செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவினாசி சாலையில் வலதுபு றமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் பாலசுந்தரம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஓசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.

    செஞ்சிலுவை சங்க சாலையில் இருந்து ஓசூர் சாலையில் இருந்து ஓசூர் சாலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பி கே.ஜி.திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பொதுப்பணித்துறை பிரிவால் கழிவுநீர் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நகர பகுதியில் நடக்கிறது.

    இந்த நாட்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. சுப்பையா சாலை, லால்பகதூர் சாஸ்திரி சாலை இடையே வரும் 30-ந் தேதி வரையிலும், லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஐ.ஜி அலுவலகம் இடையே மே 1 முதல் 15-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இதேபோல பிராங்கோயில் மார்ட்டின் தெரு சந்திப்பில் லொரிஸ்டோன் தெருவுக்கும், எஸ்.வி. படேல் சாலைக்கும் இடையே மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    கொம்பங்கி தெரவில் ஐ.ஜி அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த தகவலை புதுவை போக்குவரத்து எஸ்.பி மாறன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.
    • குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைபாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக செல்லும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லாமல், அயோத்தியாபட்டணம் அருளே உள்ள குப்பனூர் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிற்று கிழமை என்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களில் ஏற்காடு வந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மலை பாதையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுபோல ஏற்காடு ரவுண்டானா மற்றும் படகு இல்லம், பஸ் நிலைய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். 

    ×