search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை
    • தீர்வு கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு

    கோவை,

    கோவை மாநகரின் மத்திய பகுதியாக பீளமேடு உள்ளது. இங்கு அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மற்றும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் அரசு தொழில்நுட்ப கல்லூரி, சி.ஐ.டி என்ஜினியரிங் கல்லூரி ஆகியவை பீளமேடு பகுதியில் இயங்கி வருகின்றன. ஏராளமான பள்ளி-கல்லூரிகளும் உள்ளன. இதுதவிர மத்தியஅரசின் இந்திய உணவுக்கழகம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மத்திய நதிநீர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

    பீளமேடு ரயில் நிலையம் வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் சென்று வருகின்றன. மதுரை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, திருப்பூர் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளது.

    எனவே இந்த ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அறவே இல்லை என்பது கசப்பான உண்மை.

    பீளமேட்டில் இருந்து எண்ணற்ற பயணிகள் ரெயிலுக்காக பீளமேட்டில் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதிகள் அறவே இல்லை. மேலும் கழிப்பிட வசதியும் இல்லை. எனவே பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தினமும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    ரயில் நிலையத்தின் உள்ளே தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மேற்கு பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அங்கு அவர்கள் கும்பலாக உட்கார்ந்து இரவு நேரங்களில் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.

    ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி எப்போதும் இருளாகவே காணப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மரங்களின் குப்பைகள் நீண்டநாட்களாக அகற்றப்படவில்லை. இதனால் அங்கு எப்போதும் குப்பைகள் மண்டிய நிலையில் காட்சிஅளிக்கிறது.

    மேலும் இந்த ரயில் நிலையத்தின் உள்ளே சிலர் நடைபாதையில் படுத்து தூங்குவதையும் பார்க்க முடிகிறது.

    சரக்கு போக்குவரத்து அதிகம் நடைபெறும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    பீளமேடு வழியாக செல்லும் பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் சரக்கு போக்குவரத்தும் அதிகளவு நடக்கிறது. அதன் மூலமும் வருமானம் அதிகளவு கிடைக்கிறது.

    பள்ளி-கல்லூரிகள் மற்றும் வேலைக்காக செல்வோர் பீளமேடு ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தினமும் திருப்பூர், ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பீளமேட்டில் வேலைக்கு செல்பவர்கள் காந்திமாநகர் பகுதியில் இருந்து ரயில் பாதையின் குறுக்கே கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் சில நேரங்களில் ஒருசிலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாய சூழலும் உள்ளது.

    இதனை தவிர்க்கும்வகையில் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் பீளமேடு ரயில் நிலையத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். பயணிகள் அமர்வதற்காக சுகாதாரமான முறையில் அறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பீளமேடு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் அங்கு உள்ள ரயில் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்புகள், பயன்படுத்த இயலாத வகையில் உருக்குலைந்து காட்சிஅளிக்கிறது.

    எனவே அங்கு சமூகவிரோதிகள் பதுங்கியிருந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பாம்புகள், பூச்சி, நாய் உள்ளிட்ட விலங்குகளும் தஞ்சம் புகுந்து உள்ளன. இதனால் பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

    • கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.
    • பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    உடுமலை:

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.தற்போது கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிறு காலை ெரயில் இல்லை. கோவை - மதுரை ெரயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வர 58 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயில் வேகத்தையும், மதுரை - கோவை - மதுரை ெரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.

    பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ெரயில்கள் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக வந்தே பாரத் அல்லது விரைவு ெரயில்கள் தினமும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மின்சார ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக குருவாயூர் - ராமேஸ்வரம் வந்தே பாரத் ெரயிலை இயக்க வேண்டும்.

    பொள்ளாச்சி ெரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ் காலங்களில் இருந்தது போன்று,ெரயில் பராமரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இங்கு இருந்து நேரடியாக பல்வேறு இடங்களுக்கு ெரயில்களை இயக்க வேண்டும்.பொள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக விரைவு ெரயில்களை இயக்க வேண்டும்.

    இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கல்வி, மருத்துவம், தொழில் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதற்காக, பொது போக்குவரத்துக்கு பஸ்சை பயன்படுத்துகின்றனர். எனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல கோவை வழியாக ெரயில் இயக்கிட வேண்டும். கேரளா துறைமுக நகரமான கொச்சியில் இருந்து தமிழக துறைமுக நகரமான துாத்துக்குடிக்கு தினசரி ெரயில் இயக்க வேண்டும்.முன்பு இருந்துள்ள பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ெரயில் தினசரி இயக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக்கொண்டு, பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை உள்ளடக்கிய புது ெரயில்வே கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

    தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குறைவான பெட்டிகளுடன் இயங்கி கொண்டு இருக்கும் பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - கோவை - மதுரை இயக்கப்படும் ெரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னைக்கு அதிவிரைவு ெரயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
    • கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூர்:

    கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரம் - மங்களூர் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளன.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    ெரயில் எண் (06049) தாம்பரம் - மங்களூர் சிறப்பு ெரயில் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

    ெரயில் எண் (06050) மங்களூர் - தாம்பரம் சிறப்பு ெரயில் மங்களூருவில் இருந்து 14, 21 மற்றும் 28 ம் தேதிகளில் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.நிறுத்தங்கள்: சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர் மற்றும் காசர்கோடு வரை செல்லும்.

    • அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும்.
    • அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும்.

    கோவை,

    சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதாெடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம்-மங்களூர் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில் (எண் 06049) மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

    இதேபோல், அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூரில் இருந்து நண்பகல் 12 மணிக்குப் புறப்படும் மங்களூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (எண்.06050) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர். கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்று அடையும்.
    • சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    ரெயில்வே வாரியம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந்தேதி ரெயில்களின் மாற்றப்பட்ட நேரத்தை கொண்ட புதிய கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020 முதல் 2021 வரை மூன்று ஆண்டுகள் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து ரெயில்களும் 5 முதல் 15 நிமிடங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர்-காரைக்கால் (வண்டி எண்.06832) ரெயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூர்-திருச்சி (06683) ரெயில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறை-திருவாரூர் (06541) காலை 7.10-க்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு செனறு அடையும். திருவாரூர்-மயிலாடுதுறை (06688) காலை 8.15-க்கு புறப்பட்டு காலை 9.15-க்கு சென்றடையும்.

    திருவாரூர்- மயிலாடுதுறை (06542) இரவு 8.10 க்கு புறப்பட்டு இரவு 9.10 க்கு சென்று அடையும். மன்னார்குடி-திருப்பதி (17408) ரெயில் மாலை 5.10-க்கு புறப்பட்டு பிற்பகல 3.35-க்கு சென்றடையும். மன்னார்குடி- திருச்சி (06827) ரெயில் காலை 6.25-க்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்று அடையும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (16361) ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்று அடையும்.

    விழுப்பும்-மயிலாடுதுறை (06691) ரெயில் மாலை 6.25 க்கு புறப்பட்டு இரவு 9.40 க்கு சென்றடையும். தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (16866) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (16865) ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை 5.10 மணிக்கு சென்றடையும்.

    மேற்கூறியதையும் சேர்த்து திருச்சி கோட்டத்தில் மொத்தம் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் லெட்சுமி புரம் உள்ளது.

    இந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் தண்டவாளங்களுக்கு இடையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து, சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த திருநங்கை யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொன்று வீசப்பட்டாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி உயிரிழந்தார்.

    சீர்காழி:

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சீர்காழி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 21) என்பதும் , சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு பெயிண்டிங் வேலைக்கு ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    • பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818)
    • பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும்.

    திருப்பூர்,செப்.25-

    பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818) நேரம் வருகிற ஜனவரி மாதம் 1 -ந் தேதி முதல் மாற்றப்படுகிறது.பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும். கஞ்சிக்கோடு, வாளையார், எட்டிமடை, மதுக்கரை, போத்தனூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும். கோவைக்கு மாலை 4:17மணிக்கு வந்த ெரயில், ஜனவரி 1-ந்தேதி முதல் 20 நிமிடம் தாமதமாக, மாலை 4:37 மணிக்கு வரும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் நிலையங்களுக்கு 10 முதல் 25 நிமிடம் வரை தாமதமாக வரும்.

    திருப்பூருக்கு மாலை 5:30மணிக்கு பதிலாக மாலை 5:48 மணிக்கு வரும். இரவு 7:10மணிக்கு ஈரோடு சென்றடைந்த ெரயில் 7:25 மணிக்கு சென்று சேரும். கோவை - நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி முதல் மாலை 4:15 மணிக்கு பதில் மாலை 4:25மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கு 5 முதல் 10 நிமிடம் தாமதமாக செல்லும்.

    தினமும் திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:17299, 17230) இரு மார்க்கத்திலும், திருச்சூர் - சொர்ணூர் இடையே உள்ள வடக்கஞ்சேரி நிலையத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் நின்று செல்ல ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் முக்கிய தகவல்
    • கிணத்துக்கடவில் நிறுத்தம் வேண்டும் என போராடிய ரெயில் பயணிகள் கோரிக்கை நிறைவேறியது

    பொள்ளாச்சி,

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    செப்டம்பர் 25-ந் தேதி வரை ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் புறப்ப டும் ரெயில், திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து புறப்ப டும் ரெயில் செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றட யும்.

    வழியில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கிளக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருநெல்வேலியில் புறப்படும் ரெயில், பொள்ளாச்சிக்கு காலை 4.45 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 5.09 மணிக்கும் வரும். மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரெயில் கிணத்துகடவுக்கு இரவு 9.17 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.03 மணிக்கும் வந்தடையும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, இந்த ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.

    கிணத்துக்கடவில் நிறுத்தம் செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது கிணத்துக்கடவில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது.
    • ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது

    திருப்பூர்,செப்.20-

    செகந்திராபாத் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் ெரயில்கள் வழித்தடம், இயக்கம், நின்று செல்லும் நிலையங்கள் குறைக்க ப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 22815) மஜ்ரி ஜங்ஷன் - பெட்டபல்லி ஜங்ஷன் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான சந்திராபூர், பால்ஹர்ஷஹ் ஜங்ஷன், சிர்பூர் காகஸ்நகர் நிலையங்களுக்கு செல்லாது.

    இதே நாளில் கொச்சுவேலி - கோர்பா (எண்:22648) ரெயில், அட்டவணையில் உள்ள வழித்தடமான கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பெலம்பல்லி, டுர்க் ஜங்ஷன் வரை 10 நிலையங்களுக்கு செல்லாது. விஜயவாடா - பிலாஸ்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    நாளை 21, 22 மற்றும் 24-ந்தேதி, கோரக்பூர் - கொச்சுவேலி ெரயில் (எண்:12511) இன்று 20 மற்றும் 23ந்தேதி கோர்பா - கொச்சுவேலி ெரயில் (எண்: 22647), 21ந்தேதி, கொச்சுவேலி - கோர்பா (எண்:22648), 22ந் தேதி எர்ணாகுளம் - பரூனி (எண்:12522), இதே நாளில் கோவையில் இருந்து புறப்படும் ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:12969) ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மன்னார்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 4 ெரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (எண்: 16616) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக சென்று காலை 7:40 மணிக்கு மன்னார்குடி செல்கிறது. மறுமார்க்கமாக இரவு 8:25 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோவை வந்து சேருகிறது.

    கோவையில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக தினமும் இரவு 7:35 மணிக்கு நாகர்கோவிலுக்கு ெரயில் (எண்: 22668) இயக்கப்படுகிறது. இந்த ெரயில், மறுமார்க்கமாக புறப்படும் ெரயில் ஆகிய 4 ெரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது

    இவற்றுடன், கன்னியாகுமரி - புனே (எண்: 16382), சென்னையில் இருந்து கரூர், சேலம் வழியாக போடிக்கு இயக்கப்படும் சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

    இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

    ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

    ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×