search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi Visakha Chariot"

    • திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.

    சேலம்:

    சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தினையொட்டி சேலம் மாநகரில் சிவன் தேர், பெருமாள் தேர் என அடுத்தடுத்த நாட்களில் தேர்த்திருவீதி உலா நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.

    இந்த ஆண்டிற்கான தேரோட்ட வைபவம் கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 30-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரங்கள்

    இதனை தொடர்ந்து, இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அழகிரிநாத பெருமாள் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோபாலா என முழக்கமிட்டு தேரை இழுத்தனர்.

    போக்குவரத்து மாற்றம்

    சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் சாலையில் மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. போக்குவரத்தி லும் மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தொடந்து மேல் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்த வைகாசி தேர்த்திரு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை விருஷப யாகம், த்வஜ பட பூஜை, தேவ ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் யாக சாலை பூஜை தொடக்கம், நவ சந்தி, இந்திர விமா னத்தில் சோமாஸ்கந்தர் சோடச உபசார பூஜையுடன் ரதவீதி பிரதட்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. சரஸ்வதி எம்.எல்.ஏ., துணை மேயர் வெல்வராஜ், இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், செயல் அலுவலர் கயல்விழி, கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர் செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் இன்று மாலை கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது.

    தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

    ×