என் மலர்
நீங்கள் தேடியது "Victory"
- பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
- அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
- வெற்றியை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பஞ்சாப் அணி பல்வேறு போஸ்டர்களை பதிவிட்டும் வருகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
சென்னை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்இ ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய ருதுராஜ் அரைசதம் அடிக்க, ரஹானே 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
நேற்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது.
இதையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.
பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றியை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பஞ்சாப் அணி பல்வேறு போஸ்டர்களை பதிவிட்டும் வருகிறது.
பஞ்சாப் அணியின் மற்றொரு பதிவில் விஜய் சேதுபதியின் படத்தை பதிவிட்ட Done and dusted... என்றும், விஜய்யின் புகைப்படத்தை வைத்து சிஎஸ்கேவிற்கு எதிராக 5வது முறை வெற்றி (5th consecutive win against CSK) பெற்றுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இது தவிர தனது பாயிண்ட்ஸ் டேபிளை வெளியிட்டு பஞ்சாப் அணி 7 வது இடத்தை பிடித்ததற்கு தல (தோனி) தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற பஞ்சாப் அணியின் கிண்டலான பதிவுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை.
- பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 282 தொகுதிகளுக்கு 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் இன்று 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
காலை 11.30 மணிக்கு வடக்கு 24 பர்கான்சில் உள்ள பராக்பூரில் பாரதிய ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்குக்கு ஆதரவாக மோடி ரோடு ஷோவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் பராக்பூர் நிலம் வரலாற்றை எழுதியது. சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் இங்கு என்ன செய்தது என்று பாருங்கள். வங்காள தேசத்தின் பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதில் மேற்கு வங்காளம் முக்கிய பங்காற்றிய காலம் ஒன்று இருந்தது.
இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஊழல்களின் மையமாக மாறியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஒரு காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகள் இருந்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் முழுவதும் வெடிகுண்டு தயாரிக்கும் உள்நாட்டு தொழில் உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர்.
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காலம் இங்கு இருந்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி பாதுகாப்பின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் 2019-ம் ஆண்டை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம்.
இன்று நான் மேற்கு வங்காள மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்குகிறேன். நான் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.
எஸ்.சி., எஸ்.டி.க்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் இங்கும் வரை நீங்கள் ராமரை வணங்குவதையும், ராமநவமி கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது. நான் இங்கு இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒழிக்க முடியாது.
மோடிக்கு எதிராக ஜிகாத் வாக்கு கேட்கிறார்கள். பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். அவர்களின் தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் தைரியத்துக்கு யார் ஆதரவு கொடுத்தார்கள்.
சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. அந்த கட்சியின் குண்டர்கள் சந்தேஷ் காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்தினார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதைத் தொடர்ந்து 1 மணியளவில் அவர் ஹூக்ளி சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 3-வதாக பிரதமர் மோடி ஆரம்பாக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அருப்குமாரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
இன்று மாலை 4 மணிக்கு அவுராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதி களுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 10 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. நாளை நடைபெறும் தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பீகார் செல்கிறார். மாலை 6.45 மணிக்கு பாட்னாவில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
- கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.
மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.

இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
- இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.
இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.
இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர்
- "இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது"
இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று(ஜூன் 1) கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு வலுவான எதிர்ப்புக் குரலாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி டி.ஆர்.பாலு கலந்துகொள்ள நேற்று (மே 31) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்த இன்னும் சில நாடுகளே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணியினர் விழுப்புடன் செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.
பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்
- அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 43 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
- இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.ஏற்கனவே அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி ஓட்டுக்கள் எண்ணப்பட்ட 50 தொகுதி களில் 35 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 1 மணிக்கு அவர்கள் வெற்றி முகத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.
நேரம் செல்ல செல்ல மேலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 44 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா சென்று இருக்கிறது. அதே சமயத்தில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட வெற்றி கிடைக்கவில்லை. 19 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் சிலர் மோசமான நிலையில் தோல்வியை தழுவினார்கள்.
அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். அருணாசல பிரதேசத்தின் முக்கிய சாலைகளில் இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.
முதல்-மந்திரி பெமா காண்டுவை அந்த கட்சி தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். அவர் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புபில் தகவல்.
- எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம்.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதற்கான தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது.
இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறின.
ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வென்றோம்.
அதே போல இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.
- 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
- இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பதும் நிசாங்கா 3 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் காமிந்து மெண்டிஸ் 11 ரன், வனிந்து ஹசரங்கா 0 ரன், சதீரா சமரவிக்ரமா 0 ரன், சரித் அசலங்கா 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 45 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனகா 9 ரன்னிலும், மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மகேஷ் தீக்சனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் குயிண்டன் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹென்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டி காக்குடன், ஸ்டெப்ஸ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் டி காக் 20 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ஸ்டெப்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிளாசெனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். .
இறுதியில் கிளாசென் 19 (22) ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், நுவன் துஷாரா மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
- காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
- நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்த முடிந்த நிலையில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் நாள் இன்று என்பதால் நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கும், காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நடைபெற்றது. எதிரிக்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு வலுவான போட்டியை வழங்கும் வகையில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது. அதன்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருந்தது.
இந்நிலையில் இந்த மொத்த தேர்தல் திருவிழாவிலும் முக்கிய நாளான இன்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலக நாடுகள் என அனைவரின் கண்களும் தேர்தல் முடிவுகளை நோக்கியே குவிந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றியைக் கொண்டாட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்றே தொடங்கியது. இந்த நிலையில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பூரி, பூந்தி உள்ளிட்ட வகைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பாஜக ஊடகங்களால் போலியாக திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்று இந்தியா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிரான முடிவுகளே வெளியாகும் என்று அடித்துக் கூறுகிறது இந்தியா கூட்டணி. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
- இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- தி.மு.க. தலைமைப் பொறுப்பை கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- முதல் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 இடங்களில் மு.க.ஸ்டாலின் வெற்றி தேடித்தந்தார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தார். அதன்பின், தி.மு.க. தலைமைப் பொறுப்பை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல். இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் தி.மு.க. கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வெற்றி தேடித்தந்தார்.
2019 பாராளுமன்ற தேர்தல், 21 தொகுதிகள் சட்டசபை இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் என எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.விற்கு வெற்றி தேடிக்கொடுத்தார் மு.க. ஸ்டாலின்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்காதவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என நினைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நடத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது தி.மு.க.விற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் அந்த ஏக்கத்தை தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத ஆளுநரை நியமித்தது, பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தமிழ்நாட்டிற்கு எதிராக அவதூறு விஷமப் பிரசாரம் செய்தது போன்ற நெருக்கடிகளை பா.ஜ.க. கொடுத்தபோதும் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் என ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித்தந்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்க விதை போட்டது தி.மு.க.தான் என்பது குறிப்பிடத்தக்கது.