என் மலர்
நீங்கள் தேடியது "Villagers"
- நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
- நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.
ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.
இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.
அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.
- ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை இதனால் ஏழை மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
- தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு ட்பட்ட குளிக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் வேறு மாநிலத்தை சேர்ந்த மேலாளர் ஒருவர் பணி புரிந்து வருகிறார்.
இவருக்கு தமிழ் பேசத் தெரியவில்லை.
இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
இங்கு கிராமப் பகுதி என்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணம் பெறக்கூடியவர்களும் ஏழை, எளிய மக்களுமே இந்த வங்கியை பயன்படு த்துவதால் அவர்களுக்கு தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருந்தால்தான் எளிதாக தங்களது சேவையை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் அந்த மேலா ளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி முன்பு கிராம மக்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குளிக்கரை, தியாகராஜபுரம், பெருந்தரக்குடி, தேவர்க ண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு மொழி பேசும் மேலாளரை மாற்றி விட்டு தமிழ் பேசத் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கத்தை எழுப்பினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு மாத காலமாக போராடி வருவதாகவும், இதனை நிறைவேற்றாவிட்டால் அடுத்து வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் எனவே உடனடியாக தமிழ் தெரியாத மேலாளரை மாற்றி விட்டு தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மேலாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
- குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம்
தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.
குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார்.
- லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியையடுத்த வில்லிசேரியில் இந்தியன் வங்கியின் கிளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடம், தங்கள் பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைய வுள்ளது. தாங்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அங்கிருந்த வங்கியின் மண்டல அலுவலக மேலாளர் பகவதி, வங்கி கிளை மேலாளர் ரகுநாத் ஆகியோருடன் வங்கி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வில்லிசேரி ஊராட்சி தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், வில்லிசேரி வார்டு உறுப்பினர் கிருபா மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரவணகுமார், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும், தங்கள் மருத்துவ மனையில் மேம்படு த்தப்பட்ட மருத்துவ மனை யாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராள மானோர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனைகளுக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதை தவிர்ப்பதற்காக, வில்லிசேரி கிராமத்தில் வங்கி கிளை தொடங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ 2021 டிசம்பரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய நிதி அமைச்சர், டிசம்பர் 13-ம் தேதி அளித்த பதிலில், தங்கள் கோரிக்கையின்படி வில்லிசேரியில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி என ஏதேனும் ஒரு வங்கி அமைக்கப்படும் என பதில் அளித்திருந்தார்.
அதன்படி, தற்போது இந்தியன் வங்கி இங்கு அமைய உள்ளது. இந்த வங்கி அமைவதற்கு இங்குள்ள மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
அப்போது, ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் கேசவநாராயணன், சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அபிராமம் அருகே அடிப்படை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
- கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள வங்காருபுரம் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
15 ஆண்டுகளுக்கு மேலாக வங்காருபுரம் கிராமத்தில் இருந்து வீரசோழன் செல்லும் பிரதான சாலை 100 மீட்டருக்கு அமைக்க ப்படாமல் எல்லையை காரணம் காட்டி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
கிராமத்திற்குள் செல்லும் அந்த சாலையை அபிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் இந்த எல்லை பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்றும், பரமக்குடி ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் அபிராமம் எல்லைக்கு உட்பட்டது என்றும் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.
ஆனால் சாலை அமைப்ப தற்கான முழு தொகையும் எடுத்துவிட்டு 100 மீட்டர் சாலை அமைக்காமல் விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.
இரவு நேரங்களில் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமமக்கள் குற்றம் சாட்டினர் .
ஒரே கிராமத்திற்குள் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
- நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது.
- திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை, மாலை இருவேளை இந்த வழித்தடத்தில் இயங்கி வருகிறது.
ஆனால் தற்போது காலை 4.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர் செல்லாமல் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி சிந்தாமணி,மீரான்குளம் வழியாக நேரடியாக பேய்க்குளம் வந்து செல்கிறது. இதனால் இந்த பஸ்சை எதிர்பார்த்து ராமானுஜம்புதூர் மக்கள் ஏமாற்றமடையும் நிலை ஏற்படுகிறது.
இந்த பஸ் இல்லாததால் ராமானுஜம்புதூர் பகுதி மக்கள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பேய்க்குளம் வர கருங்குளம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதே போல் ராமானுஜம்புதூர் வழியாக பேய்க்குளம், சாத்தான்குளம், புத்தன்தருவைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 305 அரசு பஸ் கடந்த 4ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, பேய்க்குளம், சிந்தாமணி, ராமானுஜம்புதூர், கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ராமானுஜம்புதூரை புறக்கணித்து செல்லும் தடம் 137டி அரசு பஸ்சை மீண்டும் அதே வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
- 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-
வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம். எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
- அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலூர்
மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.
மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்தான்குளம்:
ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்க ளுக்கு தண்ணீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குறைந்த அளவே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம் அருகே பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணறு விலக்கு அருகில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் சடையன்கிணறு, ஆனந்த புரம், கண்டுகொண்டான் மாணிக்கம், கருவேலம்பாடு, பழங்குளம், செட்டிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனால் கடந்த 4 நாள்களாக குடிநீர் வீணாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு காவல் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், மணக்குடி, ஓரடியம்புலம், நீர்முளை போன்ற கிராமங்கள் இருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஊரில் இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தலைஞாயிறில் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சுர்ஜித் சங்கர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் கால பூஜைகளாக லட்சுமி, கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ, தன பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணா குதி தீபாராதனையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக நீர் ஊற்றினர்.
இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழா குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளாக ஊர் அம்பலம் வ.டு. நாச்சியப்பன், நாட்டு கணக்கப்பிள்ளை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.
- காட்டுமன்னார்கோவில் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
- இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர்..
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் கொண்டசமுத்திரம் என்ற உட்கிராமம் உள்ளது. இங்குள்ள மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கிராமத்தில் இருந்து வெகு தூரம் நடந்து வந்து மாமங்கலம் பஸ் நிறுத்தம் வரை சென்று தான் பல ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண் 257-ல் ஒரு அரசு பஸ் இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பஸ் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டத்திற்கு சென்று வந்தது. தொடர் மழையின் காரணமாக இந்த ஊரின் பெரிய வாய்க்காலில் மழைநீர் ஓடியது. இதில் சாலையை இணைக்கும் சிறிய பாலம் மழைநீரில் மூழ்கியது. மேலும், இதற்கு அருகாமையிலேயே புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதையடுத்து இந்த பஸ் கொண்டசமுத்திரம் கிராமத்திற்குள் செல்லமுடியாததால் மாற்று வழியில் இயக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்காலில் நீர் குறைந்து பாலம் தெரிகிறது. இந்த பாலத்தை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டது. இதையடுத்து இக்கிராம மக்கள் தடம் எண் 257-ல் அரசு பஸ்சினை மீண்டும் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையிடம் முறையிட்டனர். ஆனால் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வந்து செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து மாமங்கலத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, காட்டுமன்னார்கோவிலில் இருந்து மாமங்கலம் கொண்டசமுத்திரம் வழியாக திருமுட்டம் செல்லும் அரசு பஸ்சினை மீண்டும் இயக்கவேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.