search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting today"

    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தில் தனது தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    பெங்களூரு:

    மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சதானந்த கவுடா மங்களூரு அருகே புத்தூரில் உள்ள காரடி அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா ஓட்டுசாவடியில் ஓட்டு போட்டார். முன்னதாக அவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    அதன் பிறகு மகன் விஜயேந்திராவுடன் சென்று வீட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டார். அதன் பிறகு ஓட்டுசாவடிக்கு சென்று காலை 7.05 மணிக்கு தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் எனது தலைமையில் ஆட்சி அமையும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறிறனார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா வாக்களித்தார்#KarnatakaElections2018
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.



    தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    ×