search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water Release"

    • 29.12.2022 காலை 8.00 மணி முதல் தண்ணீர் திறக்கப்படும்.
    • இதனால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஏற்கனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்து விட கோரிய கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று, 29.12.2022 காலை 8.00 மணி முதல் 15.01.2023 காலை 8.00 மணி வரை 3378.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மேலும் 17 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது
    • அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது

    ஈரோடு,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடு வெனஉயர்ந்து வந்தது.

    இதையடுத்து அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 1255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுஇருந்தது.

    இதே போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது கால்வாயில் 500 கனஅடியும், பவானி ஆற்றில் 500 கனஅடியும் என மொத்தம் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.

    • பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவு தண்ணீர் திறக்கப்படும்.
    • தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் மேலக்கடையம் கிராமத்தில் உள்ள ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 140 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி அளவுக்கு 823.92 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.

    இதன் மூலம் தென்காசி மாவட்டம் மற்றும் வட்டத்தில் 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் உள்ள கடனா அணையில் இருந்து பாசனம் பெறும் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 140 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 1653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் இன்று முதல் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் 9923.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-

    அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவதானம் சாஸ்தா கோவில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி அமைச்சர்கள் சாத்தூர்ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரது ஆலோசனையின்படி ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை நீரை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.

    இதில் கோட்டாட்சியர் அனிதா, பொதுப்பணித் துறை பொறியாளர் தனலட்சுமி, வட்டாட்சியர் சீனிவாசன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சரவணன், ஜான்சி, பொன்குரு கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
    • 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    நெல்லை:

    பிசான சாகுபடியை முன்னிட்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை ஒன்றிய சேர்மன் தங்க பாண்டியன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கனகராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுபரப்பில் உள்ள நேரடி மற்றும் முறைமுக பாசனப் பரப்புகளுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 148 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    பிசான சாகுபடி, நாற்று பாவுதல் மற்றும் நடவுதல் போன்ற பணிகள், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு 19 ஆயிரத்து 604.29 மில்லியன் கன அடி தண்ணீர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும்.

    இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட த்தில் வடக்கு கோடை மேலழகி யான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளை யங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகியவற்றின் கீழுள்ள 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை , தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வெள்ள நீர் கால்வாய் பரிசோதனைக்கு மழை காலத்தில் கடலில் உபரியாக கலக்கும் தண்ணீர் பயன் படுத்தப்படும். ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக தண்ணீர் திறந்து சோதனை நடத்த மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் நேற்று மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.95 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.19 அடியாக உள்ளது. 1200 கனஅடி நீர் வருகிறது. நேற்று 2219 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1349 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 10.4, தேக்கடி 6.2, வீரபாண்டி 3, போடி 1.2, மஞ்சளாறு 2.6 மி.மீ. மழையளவு பதிவானது.

    • ஒருபோக பாசனத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கள்ளிராதினிப்பட்டி, கட்டாணிப்பட்டி ஆகிய பகுதிகள் வழியாக பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், கடந்த 7-ந் தேதி முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது, தண்ணீர்திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே பெரியாறு பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. மாவட்டத்திலுள்ள கண்மாய்களுக்கு கட்டாணிப்பட்டி கால்வாய் 1 மற்றும் 2 மற்றும் 48-வது மடைகால்வாய் ஆகிய கால்வாய்கள் திறக்கப்பட்டு முருகினி, புதுக்கண்மாய், பெரியகோட்டை மற்றும் சின்னகுண்ணங்குடி ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதுரையில் உள்ள குறிச்சி கண்மாய் பெருகி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் சீல்டு கால்வாய் மூலம் ஆதினிக்கண்மாய்க்கு தண்ணீர்வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 129 கண்மாய்களுக்கு தண்ணீர்வழங்கப்பட்டு, சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் தாசியூஸ், உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரியில் 47 ஆயிரம், கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது
    • பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அம்மா மண்டபம் மூடல்

    திருச்சி:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அம்மாநில அரசு உபரிநீரை திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கான ஜூன் 12-க்கு பதிலாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அங்கு நீர்மட்டம் குறைந்து வந்தது.

    ஆனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்தது. கடந்த வாரம் ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே முழுவதுமாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நாமக்கல், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை 60 ஆயிரம் கனஅடி தண்ணீர வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளது. மாயனூரில் இருந்து காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்தது. நேற்று முன்தினம் முக்கொம்பு வந்த 60 ஆயிரம் கனஅடி தண்ணீரில் காவிரியில் 20 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டது. முன்னதாக காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. கடந்த சில மாதங்களாக டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் போதிய அளவு மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் அது பற்றாக்குறையாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது காவிரியில் கூடுதல் தண்ணீர் வருவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இன்று காலை முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முன்னதாக கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பால் அங்கு குடிசை அமைத்து முகாமிட்டிருந்த சலவை தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன் காவிரி ஆற்றில் முதலை நடமாட்டமும் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் புனித நீராடுவார்கள். மேலும் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க வருபவர்களும் காவிரி ஆற்றில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் 47 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆற்றில் வளர்ந்திருந்த நாணல் செடிகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அம்மா மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு போர்டு வைத்துள்ள போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு உரிய அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்கள் நெருங்கி வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

    • தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
    • கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×