என் மலர்
நீங்கள் தேடியது "wild elephant"
- குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
- வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.
அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.
அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது.
- காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு காபி தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான கோவிந்தராஜ், பூபதி, காந்தி ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை மல்லிகைபாறை வழியாக தார்சாலைக்கு வந்து சந்தனச்சோலை வனப்பகுதிக்குள் சென்றது.
காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது.
- சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட சுற்று வட்டார விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு குனில் வயல் பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த அப்துல் முத்தலிப் என்பவரது கார் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்தது. இதை அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கேரட்டுகளை தின்றது இதனால் அங்கிருந்து முக்கிய சாலை வழியாக சென்ற காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் சென்றது. அப்போது ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக கேரட் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை யானை மறித்தது. தொடர்ந்து லாரியில் இருந்த மூட்டைகளை சேதப்படுத்தி கேரட்டுகளை தின்றது. இதில் கேரட்டுகள் நாசமானது. பின்னர் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்கள், காரை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
- கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
- வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்குள்ள தொழிலாளர்கள் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று தம்பியை தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பி யானையிடம் இருந்து தப்பி சென்றார். எனினும் இவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருடன் சென்ற தொழிலாளர்கள் தம்பியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த யானை தமிழகத்தின் கூடலூர் வழியாக கேரளா நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
- யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
யானை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியது. வனத்தை விட்டு நேராக குடியிருப்புக்குள் புகுந்தது.
பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சென்று தண்ணீர் குடித்தது. தொடர்ந்து அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.
யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கண்காணித்து வனத்திற்கு விரட்டினர்.
இந்நிலையில் இன்று காலை அதே ஒற்றை காட்டு யானை கணுவாய் மெயின் ரோட்டில் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தது. யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர். பயத்தில் அங்கிருந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த யானை சாலைகளில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்புகளுக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன.
- நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒற்றை யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்தது.
சாலையில் வெகுநேரம் நின்று சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுபோன்ற ஒற்றை காட்டு யானை அடிக்கடி சாலையில் நின்று வருவதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.
- பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர்.
- 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன.
- இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் அச்சம் அடைந்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது வந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பா கிராமம் செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் நிம்மதி அடைந்தனா்.
- பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
- அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு காட்டு யானை ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானை ஈப்பன்காடு வழியாக தொரப்பள்ளி, புத்தூர்வயல் பகுதிக்குள் பகல் நேரத்திலும் முகாமிட்டு வருகிறது. இதனால் யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் அடங்கிய 2 குழுக்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை இருக்கும் இடத்தை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன.
- பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி பழம் விளைச்சல் தொடங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன. அவ்வாறு வரும் யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குஞ்சப்பனை முள்ளூா் கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்தது. இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா். தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
- செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பக தோப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது.
கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் அடிப்பதால் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அடிவா ரப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக மலை அடிவாரத்திற்கு தண்ணீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வாழை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது போல் மலைப்பகுதியிலும் தண்ணீரை தேக்கி வைத்தால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
- ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 பேரை ஊருக்குள் புகுந்து காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் காட்டு யானையை பிடிக்க கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் 2 பேரை கொன்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் ஆரோட்டுப்பாறை மக்கள் அச்சமடைந்தனர் இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வனவர்கள் சுதீர் குமார், வீரமணி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நியூ ஹோப் போலீஸ் நிலையம் பகுதியில் ந காட்டு யானை முகாமிட்டது. பின்னர் இரவு, பகலாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஊருக்குள் வராத வகையில் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
நேற்று பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பிறகு பச்சக்காடு வழியாக டெலோவுஸ் வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டினர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா உள்பட பல்வேறு கோவில்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.