என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "win"

    • கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
    6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.

    • பாதுகாப்பு வார விழாவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.
    • வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவக்குமார் தெரிவித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் 52- வது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

    இதனை நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.

    தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கோலப்போட்டி மற்றும் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி விபத்தினை தடுப்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மனித வளம் மற்றும் சட்டப்பிரிவு மேலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தீங்கு அற்ற பணியிடமே எங்களது குறிக்கோள் என்ற கருப்பொருளை மையமாக வைத்து தொழிற்சாலை இயங்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தவறான வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு நடவடிக்கையில் டி.சி.டபிள்யூ. அன்றாடம் பின்பற்றி வரும் நடைமுறை செயல்களை விளக்கி நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

    • அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி, மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.
    • கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும் என க.ரவி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 36-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.

    கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    தங்கப்பதக்கங்கள்

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 6 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

    பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவில் வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கினார்.

    நினைவுப்பரிசு

    மேலும் டாக்டர் பட்டம் பெற்ற 6 பேராசிரியர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 7 பேருக்கும் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் துணைவேந்தர் க.ரவி பேசியதாவது:-

    இன்றைய சூழ்நிலையில் கல்வி கற்க வரும் அனைத்து மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையில் பயிற்சி அளிப்பது அவசியம். ஆகையால்தான் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

    கல்வி கற்பது மட்டும் சிறந்ததாக கருதப்படாது. அந்த கல்வியை அறிவுசார் கல்வியாக மாற்ற வேண்டும். செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தினால் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    கிராமப்புற மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளது. எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆண்டு மலர் வெளியீடு

    விழாவில் கல்லூரி செயலாளர் நாராயணராஜன் ஆண்டுமலரை வெளியிட, அதனை துணைவேந்தர் க.ரவி பெற்றுக்கொண்டார். பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
    • 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலம்:

    மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.

    இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின.
    • கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

    நேற்றைய குதிரை பந்தயத்தில், முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங் சன்' என்ற குதிரை, 1.22 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு முதுமலை புலிகள் காப்பக கோப்பையை, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா பங்கேற்று வழங்கினார். ஊட்டியில் திடீரென பெய்த கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டங்களும், 'பிளேஆப்' சுற்றின் 2 போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி 'லீக்' ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெற்றி பெற்றன. மூன்றில் தோற்றது.

    'பிளேஆப்' சுற்றின் 2 ஆட்டங்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) 23-ந்தேதியும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) போட்டி 24-ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-இரண்டாவது இடத்தை பிடித்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து சி.எஸ்.கே. இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும்.

    புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுகின்றன. லக்னோ 3-வது இடத்தை பிடித்து உள்ளது. 4-வதாக நுழையும் அணி இன்று இரவு தெரியும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத் தில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    • வெள்ளாளன்விளையில் கணிதம் பிரிவில் போட்டி தேர்வு நடந்தது.
    • தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெள்ளாளன்விளையில் ஓய்.பி.ஏ. சார்பில் போட்டி தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கணிதம் பிரிவில் போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுடலைமணி முதலிடமும், நாராயணமூர்த்தி இரண்டாமிடமும், பாலசுப்பிரமணியன் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஓய்.பி.ஏ. தலைவர் ஜான்கென்னடி டி.எஸ்.பி, மத்திய அரசு ஊழியர் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். போட்டித் தேர்வினை வணிகவரித்துறை அதிகாரி ஜேக்கப், பால்வளத்துறை அதிகாரி பிரவீன், வி.ஏ.ஓ.க்கள் முத்துராமன், டேனியல், ஜெயசந்திரன், பிஷப் அசரியா நினைவு ஆங்கில பள்ளி முதல்வர் லீதியால் தனசீலி, ஆசிரியை ஷிபா ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். பரிசுகளை உதிரமாடன்குடியிருப்பை சேர்ந்த ரவி, ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நான்காம் பரிசை வாழத்தூர் அணி வென்றது

    உடன்குடி:

    உடன்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் தேரியூர் மைதானத்தில் நடந்தது.

    இதில் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தேரியூர் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், இரண்டாவது பரிசு ரூ. 7 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை வடக்கு காலன்குடியிருப்பு அணியும், மூன்றாவது பரிசு ரூ. 5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை குருநாதபுரம் அணியும், நான்காம் பரிசு ரூ. 3ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையை வாழத்தூர் அணியும் வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா உடன்குடி மெயின் பஜாரில் நடந்தது. உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேருராட்சி துணைத்தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு. உடன்குடி பேரூராட்சி பணி நியமனக்குழு தலைவர் ஜாண் பாஸ்கர், உடன்குடி பேரூர் அவைத்தலைவர் அப்துல் ரசாக், பேரூர் துணைச் செயலாளர்கள் தங்கம், பிரவீனா, பொருளாளர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் சலீம் வரவேற்றார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ், முபாரக், மதன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் பஷீர், மும்தாஜ், வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரைசெல்வன், முருகேசன் பாலசிங் பாண்டியன், ஆனந்த், கணேசன், சாம்னேஸ், முத்துப்பாண்டி, கணேஷ், நாராயணன், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரி இசக்கிமுத்து, இஸ்மாயில், உடன்குடி பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் மனோ, உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் சக்திவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் மெராஜ், உடன்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாய்ஸ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மஹாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் மற்றும் லெட்சுமி, ஜெபமலர், தீபன் சக்கரவர்த்தி, ஆட்டோ கணேசன், குங்ஃபூ சங்கர், சிவப்பிரசாத், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அரவோனு ட்ரீம்ஸ் லெவன் கிரிக்கெட் அணியும், கோத்தகிரி ஸ்டார் ஓம்நகர் கிரிக்கெட் அணியும் தகுதிசுற்று 2வது போட்டியில் மோதின.

    இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ட்ரீம்ஸ் லெவன் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய ஸ்டார் ஹோம் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ட்ரீம்ஸ் லெவன் அணி 3வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

    அப்போது கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோத்தகிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதம் பாபு ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    • நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கியது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.

    தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு தேசிய கொடி, ஜோதியினை ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 6 பிரிவுகளில் (12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் கள்) மற்றும் பொது பிரிவுகளில் 500 வீரர்கள், 400 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும் முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டி கள் உட்பட மொத்தம் 67 போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு வெற்றிக் கோப்பை களும், சுழற்கோப்பைகளும் வழங்கி பாரட்டினார்.

    மேலும் ஆசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெற்று 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளான தங்கப் பதக்கம் வென்ற கனிஷ்டா தீனா மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயா ராஜராஜன் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தடகள சங்க துணைத்தலைவர் சுரேஷ் , டாக்டர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள், தடகள சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்று நர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செய லாளர் சேது நன்றி கூறினார்.

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    ×