search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman doctor murder"

    • ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இளம் பயிற்சி பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தே கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 8-ந்தேதி அன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் அவர் மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதும் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

    பெண் டாக்டரை கற்பழித்துக் கொன்ற நபர் சைக்கோ போல செயல் பட்டிருப்பதும் டாக்டர்களின் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டரின் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் ராய் என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெண் டாக்டரை கற்பழித்து கொன்றதாக சஞ்சய் ராய் மீது குற்றம் சாட்டப்பட்டு கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய செல் போனை ஆய்வு செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இணைய தளங்களிலும் சஞ்சய் ராய் ஆபாச வீடியோக்கள் அடிக்கடி தேடிப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி ஆபாச படங்களை அடிக்கடி பார்த்து, பார்த்தே சஞ்சய் ராய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அளவுக்கு கொடூரமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் சக டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக நுழைந்தது எப்படி? என்பது பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    சஞ்சய் ராய் ஆஸ்பத்திரி வளாகத்தில் 'சிவிக் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக சென்று வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அன்று அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.

    சஞ்சய் ராய் புளூடூத் ஒன்றை பயன்படுத்தி பேசி வந்துள்ளார். ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது அவரது காதில் புளூடூத் இருந்துள்ளது. பெண் டாக்டரை கொலை செய்துவிட்டு தப்பி வெளியேறும்போது புளூடூத் இல்லை. இதுபற்றி சஞ்சய்ராயிடம் போலீசார் கேட்டபோது அவசரம் அவசரமாக வெளியேறியதில் புளூடூத் பயன்படுத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவு கோர்ட்டில் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறும்போது, பெண் டாக்டர் கொலை சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பணியில் உடனிருந்த டாக்டர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவோம் என்று தெரிவித்துள்ளார்..

    • மகேஷ் வர்மாவும், டாக்டரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர்.
    • மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் மாங்காபேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண் டாக்டர். இவர் சிக்பல்லாபூரிலுள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டராக வேலை செய்து வந்தார். இவர் மருத்துவக் கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    இதேபோல் ஏட்டுரை சேர்ந்த மகேஷ் வர்மா என்பவரும் அதே பஸ்சில் தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது மகேஷ் வர்மாவுக்கும், டாக்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    இதையடுத்து மேற்படிப்பிற்காக டாக்டர் சிப்பல்லூரிலேயே தங்கி இருந்தார். அங்கு சென்ற மகேஷ் வர்மா உன்னுடைய போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளேன் என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என பெண் டாக்டரை மிரட்டியுள்ளார்.

    மேலும் தனது உடலில் டாக்டர் பெயரை பச்சை குத்திக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன டாக்டர் மகேஷ் வர்மாவிடம் செல்போனில் உள்ள படங்களை அழித்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தனது ஆசைக்கு இணங்கினால் போட்டோக்களை அழித்து விடுவதாக மகேஷ் வர்மா தெரிவித்தார். இதனால் மகேஸ் வர்மாவின் ஆசைக்கு இணங்க டாக்டர் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து பெண் டாக்டரை பெங்களூரு அழைத்துச் சென்று அங்குள்ள லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பெண் டாக்டரை இந்துபூரில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். அப்போது மகேஷ் வர்மாவின் செல்போனில் உள்ள போட்டோக்களை அழிக்க வேண்டும் என பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ் வர்மா தலையணையால் டாக்டரின் முகத்தில் அழுத்தினார். இதில் மூச்சுத்திணறி டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகேஷ் வர்மா அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் வர்மாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கடப்பா ரெயில் நிலையத்திலிருந்து ரெயிலில் தப்பி செல்ல முயன்ற மகேஷ் வர்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×