search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women doctor murder"

    • கொல்கத்தா காவல் துறை சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.
    • சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

     


    அதில் சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை ஐந்தாம் நாளில் தான் துவங்கியது. சிபிஐ விசாரணை துவங்குவதற்குள் சம்பவ இடத்தில் எல்லாமே மாற்றப்பட்டு இருந்தது."

    "கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாக காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இது மிகவும் கவலை அடையச் செய்துள்ளது."

    இதை கேட்ட சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், இந்த வழக்கில் எப்போது உடற்கூராய்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், மாலை 6.10 முதல் இரவு 7.10 வரையிலான காலக்கட்டத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.

    இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்பதால், உடற்கூராய்வு செய்ய்பட்டது. இந்த வகையில், பஞ்சநாமா எப்போது தயாரிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் கொல்கத்தா காவல் துறையினர் சிஆர்பிசி விதிகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை. இந்த சம்பவத்திற்கு பொருப்பேற்க வேண்டிய காவல் துறை அதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்துவர கபில் சிபலுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கு விசாரணை அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான ஜெ.பி. பர்திவாலா, "எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் உங்கள் மாநிலம் பின்பற்றியதை போன்ற வழிமுறைகளை இதுவரை நான் பார்த்ததே இல்லை," என்றார்.

    குற்ற சம்பவம் இரவு நேரத்தில் அரங்கேறி இருக்கிறது, எனினும் காவல் துறையினர் 18 மணி நேரங்கள் கழித்து தான் சம்பவ இடத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் துறையினர் அங்கு வந்து சம்பவ இடத்தை கைப்பற்றும் முன்பே உடற்கூராய்வு நிறைவுபெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து மீண்டும் காவல் நிலையம் சென்ற பிறகு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

    சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும் போது, "உடற்கூராய்வு முடிந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் உடன் பணியாற்றியவர்கள் இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி நடப்பதை உணர்ந்து தான், வீடியோ பதிவு செய்ய வலியுறுத்தினர்," என்றார்.

    "பெண் டாக்டர் கொலை வழக்கில் கற்பழிப்பு-கொலை சம்பவம் குறித்து முதலில் பதிவு செய்த கொல்கத்தா காவல் துறை அதிகாரி அடுத்தக்கட்ட விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ×