என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers"

    • சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
    • சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.

    மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.

    கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-

    நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • சம்பா நடவு பணிகளும் நாற்று பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை அறுவடை ஏறக்குறைய நிறைவடைந்து விடும் நிலையில் உள்ளது.

    தாம தமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியிலும் சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பா நடவு பணிகளும் நாற்றுப் பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் மெதுவாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் முழு வீச்சில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவுப் பணிகளிலும் வேளாண் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது.
    • பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது. இங்கு உள்ளூர் மட்டு மின்றி வடமாநில தொழி லாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர், பெண்கள் பாது காப்புக்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பணி கடினமாக உள்ளது. ஆலையில் இருக்க விரும்பமில்லை என புகார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேலம் மாவட்ட சமூக நலத்துறை உத்தரவுப்படி வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நூற்பாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    இதையடுத்து 35 பெண் தொழிலாளர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்க ளுக்கான கூலி, கருணைத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதையடுத்து அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி.
    • 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் ஜாம்புவானோடை கிராமங்களில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பனைவிதை நடும் பணி நடைபெற்றது.

    இதை தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமையில் மாநில தலைவர் வழக்கறிஞர் சிறுகளத்தூர் ஜெய்சங்கர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காடு கோட்டகம், குளக்கரை ஆற்றங்கரையோரம் மற்றும் ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.

    இதில் ஆலங்காடு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், ஜாம்புவானோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
    • நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்கள் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இந்த தற்காலிக விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகையின்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நிர்வகிக்கப்படும் குடிநீர் வழங்கும் பணிக்கும் ஊழியர்கள் வராததால் அந்த பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளையும் போராட்டம் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். அரசு ஊழியர்களின் இந்த நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.

    • பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
    • எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

       பல்லடம் : 

    பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .
    • இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிற்கும் இடங்களில் பிளாட்பாரம் இல்லாததால் சரக்குகளை ஏற்றி , இறக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் , அதனால் சமதளமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் , கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .

    அடையாள அட்டையை உடனடியாக வழங்க வேண்டும் , இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும் , வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது , சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ெரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ெரயில்வே கூட்செட் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    வள்ளியூர்:

    கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை தொழிலாளர்கள் மண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்குள்ள தொழிலாளர்கள் நம்பியாற்று தண்ணீரை வைத்து சிறிய மண் விளக்குகள் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் செய்வதால் நெல்லை மாவட்டத்தில் இதற்கு தனி மவுசு உண்டு.

    இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படு கின்றன.

    சில வருடங்களாக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்த நிலையில் மண்ணில்லாமல் திருவிளக்கு உற்பத்தி செய்ய முடியாமலும் போதிய வருமானம் இல்லாமலும் மண் பானைத் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசு அறிவித்த நிவாரணம் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்தனர்.

    தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்யும் இவர்கள் தற்போதைய காலத்தில் உரிய மண் எடுக்க அனுமதி அளித்தால் எங்களுடைய வாழ்வாதாரம் தடைப்படாமல் தொழிலை நீடிப்போம் என்றும் தெரிவித்தனர். கடந்த 2ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் திரு கார்த்திகை களையிழந்து காணப்பட்டதாலும் இந்த ஆண்டும் மண் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் களையிழந்து காணப்படுவதாக மண்பானை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஊர்வலம் சென்றனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி வரவேற்றார்.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். காய்கறி, உணவூட்ட செலவினத்தை அந்தந்த மாதத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

    • புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு 8 ஆண்டாக சம்பள உயர்வு தராமல் தொழிற்சாலை நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், அரசு உத்தரவுகளை மதிக்காமல் நிர்வாகம் செயல்பட்டு வருவதை கண்டித்தும், புதுவை அரசு உத்தரவுகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.

    • தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், தொழிலக பாதுகாப்பு சுகாதா இயக்க அதிகாரிகள் ஆகியோர் நேற்று சேலம் சிவதாபுரம், பனங்காடு பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பட்டறைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, 18 வயதுக்கு

    உட்பட்ட 2 குழந்தை தொழி லாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைல்டு லைன் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதை தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்மூலமாக குறைந்தபட்ச 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    அனுப்பர்பாளையம், டிச. 22 -

    திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 200- க்கும் மேற்பட்ட எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. அங்கு பாத்திர தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.

    இந்த நிலையில் அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாத்திரத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    இதன் முடிவில் எவர்சில்வர் வகை பாத்திரத்திற்கு 50 சதவிகிதமும், பித்தளை, தாமிரம், வார்பு பொருட்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் ஊதிய உயர்வு கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து எவர்சில்வர் பாத்திரப் பட்டறைதாரர் சங்கத்திற்கும், பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும் கோரிக்கைக்கடிதம் அனுப்புவது என்றும், தொழிலாளர் துறைக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    ×