search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • சமூக பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
    • முடிவில் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் நாட்டு நல பணி திட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து சமூகப் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட பணி 30 மாணவர்கள் சீர்காழி ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் உள்ள செடிகள்,புற்கள், மற்றும் குப்பைகளை அப்புற ப்படுத்தினர்.

    ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் தலைவர் பா. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சீர்காழி ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி, ரோட்டரி சங்கம் மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், செயலாளர் ரவி ,பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் துரைசாமி, மோகனசுந்தர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார், இணைச் செயலாளர் மார்க்ஸ் பிரியன், ரயில் சங்க உறுப்பினர் ராஜராஜன், சுதாகர் அப்பாஸ் அலி, சண்முகம் மற்றும் சீர்காழி ரயில் நிலைய அலுவலர் மற்றும் டி.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யனார் கோவில் பகுதி வல்லத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    இதனை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இரண்டாவது திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 149.32 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம்
    • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டிடமும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தூர் ஊராட்சி பகுதிகளான வேங்கடத்தான் பட்டியில் புதிய நாடக மேடையும், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் புதிய நாடக மேடையும், வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையமும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ள பாளையம் ஊராட்சியில் காந்தி நகர் காலனியில் புதிய நாடக மேடையும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பேட்டையில் புதிய நாடக மேடையும் கட்டுவதற்கான பூமி பூஜையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார், தொடர்ந்து சிவாயப் ஊராட்சி வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தில் கட்டப்பட்ட தானிய கிடங்கு அமைத்தல், பெருமாள் பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

    விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் சசிகுமார், மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர், மருதூர் பேரூராட்சி அலுவலர் சரவணன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், புத்தூர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சந்திரன், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் அருள், கே.பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
    • முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது.

    கோவை,

    தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாநகராட்சி பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.

    பின்னர் கோவை மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட சர வணம்பட்டி பூந்தோட்டம் நகரில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி, கோவை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி, 69-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை கிருஷ்ணசாமி சாலை மேற்புறத்தில் மழை நீர் வடிகாலுடன் கூடிய ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கட்டுதல் பணியை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று 72- வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கடம் சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 1.47 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுதல், என்.யு.எச்.எம் நிதியின் கீழ் வ.உ.சி பூங்கா மைதானம் அருகில் உள்ள சாலையில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு உள்ள தெரு ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, 54 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, அவிநாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை ரூ. 4.69 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் உள்ளிட்ட ரூ.13.01 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பணிமாறுதல் மூலம் பதவி இறக்கம் கூடாதுதலைமை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

     திருச்சி,  

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில்,

    தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில், பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.பின்னர் முதலில் தடையாணை வழங்கப்பட்டு பின்பு, 2008-ல் அந்தத் தடை விலக்கி கொள்ளப்பட்டதால் மீண்டும் 2008 முதல் 2015 வரை 7 ஆண்டுகள் முன்பு வழங்கியது போல் பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 2023-ல் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பில் அந்த பதவி உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இதில் தனி நீதிபதி 2018 தமிழக அரசு வழங்கிய உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை 4-7-2018 நாளது மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 9 மற்றும் 13-படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் உரிமையை விட்டு தந்த தகுதியின் அடிப்படையிலும், லெயின் தொடரும் என்ற பணி விதிகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் 23-3- 2023 நாளிட்ட தீர்ப்பு உரிமை துறப்பு மீதான தீர்ப்பு அல்ல என்பதால் 2018, 19, 20, 21-ம் ஆண்டுகளில் பணி மாறுதல் வழங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பரிசீலித்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாக நீடிக்க ஆவண செய்ய வேண்டும். மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் மாநில பொது செயலாளர்கள் அருள் சுந்தர்ராஜன், நடராஜன், அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் திலகநாதன்,செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் அழகு சுப்பிரமணியன், சிவக்குமார், மதியழகன்மற்றும் 38 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது
    • துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர்

    கே.கே.நகர், 

    மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ள பாரத பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று திருச்சி விமான நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர். இதில் விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி செய்தனர். தூய்மை பணி காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையத்தின் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சிவகுமார் சந்தானகிருஷ்ணன் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  

    • சிதிலமடைந்த கட்டிடம் இடிப்பு: தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
    • பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கான பயணிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து செல்கி ன்றனர்.

    இந்த பேருந்து நிலைய த்தின் கட்டடங்கள் சிதல மடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடிந்து விழுந்து வந்ததால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அச்ச த்தோடு அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே இந்த புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செ ல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்த னர்.

    இதையடுத்து சிதிலமடை ந்துள்ள பேருந்து நிலைய கட்டங்களை அசம்பாவி தங்கள் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அப்புற ப்படுத்திவிட்டு புதிய கட்ட டம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இந்நிலையில் சம்பவ இடத்தை நகராட்சி அதிகாரி கள் மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சிதல மடைந்த கட்டடத்தை இடி த்து அப்புறப்படுத்த நட வடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து தற்போது மேற்கூரை இடிந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யப்பட்டு கட்டி டத்தை சுற்றி பாதுகாப்பி ற்காக பச்சைத் துணியால் தடுப்புகள் அமைத்து ஜேசிபி டிரில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியு ள்ளது.

    பேருந்து நிலைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்து வதால் அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே அவர்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து எழில் நகரில் 6 ஏக்கர் இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.
    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 13-வது வார்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுபாலம் மற்றும் கழிவுநீர் கால்வாய் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.

    இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக சீரமைத்து சரிசெய்திட நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பழைய பஸ் நிலையம் மடவிளாகம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தி கான்கிரீட் மூடியமைத்திட ரூ.4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் முபாரக் பார்வையிட்டார்.

    ஒப்பந்த தாரர் பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மானாமதுரையில் வைகையாறு சுத்தப்படுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
    • நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணி நீர்நிலை பாதுகாப்புக்குழு சார்பில் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள், நீர்நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகையாற்றுக்குள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு வளர்ந்திருந்த அமலைச்செடிகளை அகற்றினர். மேலும் குப்பைகளையும் அப்புறப் படுத்தினர். அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வந்து இந்த பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஆற்றங்கரையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், சிவகங்கை மாவட்டத் தில் வைகையாறு சுத்தப் படுத்தும் பணி ஏற்கனவே திருப்புவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழு வதுமுள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் இந்த பணியில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்கள் பங்க ளிப்பை வழங்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரங்க நாயகி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

    எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் வருகிற நாளை (சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகா ல்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
    • தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்கள், புதுச்சேரி ரெயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்த ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கூறியதாவது:-

    தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும். லிப்ட் மட்டும் எக்ஸ்லேட்டர் வசதி 5 நடைமுறைக்கு செல்ல கூடிய அளவில் புணரமைக்கப்படும். நடைமேடைகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது கோட்டாட்சியர் இலக்கியா, ரெயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

    ×