search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லுரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே மருத்துவக் கல்லுரி பகுதி, ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளை யார்பட்டி, ஆலக்குடி, மனோஜிபட்டி, ரெட்டிபா ளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து தரமாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் காந்திஜி சாலை அருகே ராணி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கல்லணை கால்வாய் நடைப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.இதையடுத்து சிவகங்கை பூங்காவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பெத்தண்ணன் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார் . பணிகள் அனைத்தையும் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.
    • சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தேர் ஓடும் வீதிகள்,கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தியாகிசாமிநாதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் நகர்புரத்தில் சுமார் 1கோடியே 54 லட்சம் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் முக்கிய சாலையான பாரத வங்கி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமல்பழைய சாலைகள் அகற்றப்படாமல், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

       இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

    • நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை துவங்க உள்ள நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆர்.பி.புதூர் குட்டை தெரு, பூங்கா சாலை, கொசவம் பட்டி ஏரி ஆகிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, வடிகால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை அருகே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்.பி.புதூர் குட்டை தெருவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், மழை நீர் வடிகால் கட்டமைப்பு களை தூர்வாரி, மழைக்கா லங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் கொசவம்பட்டி ஏரியில் கால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு, மழை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து, நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், உழவர் சந்தையினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலரை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகி ருஷ்ணன், நகராட்சி பொறி யாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    • சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வி.பி.கார்டன், எலிசாநகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமயம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
    • திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கும் விதமாக ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருமயம் அருகே ஓலை குடிப்பட்டியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2020-21ல் புதிதாக ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் போர்வெல்லுடன் பைப்லைன் விஸ்தரிப்பு, செங்காடுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 980 மீட்டர் பைப் லைன், திருமயம் கடைவீதியில் 91 மீட்டருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயையும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
    • ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது.

    இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணர மைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவ தற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வை யிட்ட அவர், இந்த வாய்க்கா லில் மீதமுள்ள 800 மீட்ட ரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

    பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியா ளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வருகிற 5-ந் தேதி திறக்க ஏற்பாடு செய்தார்.
    • வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனுடன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

    இந்த நிகழ்வில் தலைமை பொறியாளரிடம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்.

    அதன்பின்னர் 2 மாதத்தில் சர்வீஸ் ரோடு பணியை முடித்து முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மூலம் முறையாக திறப்பு விழா நடத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதுடன் பணிகளை விரைவு படுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக மேம்பால பணியை விரைவு படுத்தி ஜூன் 5-ந்தேதி மேம்பாலம் மட்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    இதில் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர்முத்து, கோட்டப்பொறியாளர் லிங்கசாமி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் ஜெகன்செல்வராஜ், காவு மைதீன், உதவிப்பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், குணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 10 ஆயிரம் கி.மீ சாலை நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 3 மாதத்தில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 5500 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ரூ.833 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலை நகர சவாலைகளுடன் இணைக்கும் வகையில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கும்.

    அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறதுபொறுப்பேற்ற மூன்று மாதத்தில் 14,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
    • விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து

    விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாராண்யம் உபகோட்டத்திற்க்குட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு 1 துணை மின் நிலையம், ஆயக்கா ரன்புலம் துணை மின் நிலையம் ,வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு,ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடையான், குரவப்புலம் , தென்னம்புலம், கரியாப்பட்டினம்,நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து,கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை 16-ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×