search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yellow alert"

    • மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பருவமழை பெய்த tஹு.
    • வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது ஏரிகளில் 91 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    இதற்கிடையே, நேற்று மும்பை நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது.

    இந்நிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மும்பை நகருக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வுமையம்.
    • கனமழை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக நகரின் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. இந்த மழையின் காரணமாக மின்சாரம், பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில்வேயில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு மும்பை உள்பட தானே, பால்கர் மற்றும் கொங்கண் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×